- கரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- நாகை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருச்சி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தருமபுரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
- திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- வேலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- திருவள்ளுர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- விழுப்புரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
- கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
- புதுச்சேரி, காரைக்கால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Flash News-கனமழை :பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (30-11-2015) விடுமுறை - மாவட்டங்கள் 14
CPS: பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு...
*பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தில் (CPS) உள்ளோர் கவனத்திற்கு.*
2013 மார்ச் மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் வரை உள்ள
கணக்கீட்டுத்தாள்(Account slip) மாநிலப் புள்ளி விபர மையத்தால் (Govt Data
centre) வெளியிடப்பட்டுள்ளது.
*இதில் உங்கள்
சம்பளத்திலிருந்து மாதந்தோறும் பிடிக்கப்படும்(10%) தொகை , அகவிலைப்படி
நிலுவை ,ஊக்க ஊதியஉயர்வு நிலுவை ஆகியன வரவு வைக்கப்படுகின்றது.
விடுமுறை .'' நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும், பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்...
மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று
நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும்
இடைநிலைக் கல்வித் திட்டமான,எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக்கட்டுப்பாட்டில்,
கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பலபகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16
ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பயமுறுத்தும் பருவ நிலை மாற்றங்கள்: கடும் வரட்சியும்,அதிதீவிர புயலும் தாக்க வாய்ப்பு
ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு
மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன.இவற்றை சமாளிப்பதற்காக
சர்வதேச அளவிலான மாநாடு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இன்று தொடங்குகிறது.
இந்நிலையில் பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் மனித
குலம் எதிர்கொள்ளும் பாதிப்புகள்என்ன என்பது குறித்து இப்போது
பார்ப்போம்புவி வெப்ப மயமாதலால் கடுமையான வறட்சி பல பகுதிகளில் அடிக்கடி
ஏற்படும் ஒரு நிகழ்வாக மாறும்.
5 நாட்கள் பணி 10 ஆயிரம் சம்பளம் பகுதி நேர ஆசிரியர் கோரிக்கை.
வாரத்தில் ஐந்து முழு நாட்கள் வேலை, ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும், என பகுதி நேர ஆசிரியர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 2012 மார்ச்சில் 16,549 பகுதி நேர கலை, ஓவியம்,
உடற்பயிற்சி, தையல், இசை ஆசிரியர்கள் பணியில் சேர்க்கப்பட்டனர்.
மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை: இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை!
'வங்கக்கடலில், மேலும் ஒரு காற்றழுத்த
தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், இன்று முதல், ஐந்து நாட்களுக்கு கனமழை
நீடிக்கும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னைப் பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில் சேர கால அவகாசம் நீட்டிப்பு
சென்னைப்
பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவனத்தில், 2015-16 கல்வியாண்டுக்கான
பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம்
நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி,
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஒற்றைச் சாளர சேர்க்கை மையத்தை வருகிற
டிசம்பர் 19-ஆம் தேதி வரை மாணவர்கள் நேரடியாகத் தொடர்புகொண்டு சேர்க்கை
பெறலாம்.
கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அறிய உத்தரவு: அரசு கல்லூரி பேராசிரியர்கள் அதிருப்தி
போலி
கல்விச் சான்றிதழ்கள் கொடுத்து பணியில் சேர்ந்துள்ளனரா என்பதைக்
கண்டறிவதற்காக, அரசுக் கல்லூரி பேராசிரியர்களின் அனைத்துச் சான்றிதழ்களின்
உண்மைத் தன்மையை அறிய உயர் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
10ம் வகுப்பு பொது தேர்வு செய்முறை தேர்வு உண்டு
'பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வில்,
அறிவியல் பாட செய்முறைத் தேர்வு, கண்டிப்பாக உண்டு' என, பள்ளிக்கல்வி
இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
மழை விடுமுறை ,ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி
'மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில், மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை
'பொதுத் தேர்வு எழுதும் மாணவர் பட்டியலில்
தவறுகள் இருந்தால், ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என,
கல்வித்துறை எச்சரித்துள்ளது.
'கேட்' தேர்வு: பி.இ.,க்கள் ஆர்வம்
மத்திய அரசின், உயர் கல்வி நிறுவனங்களில்,
எம்.பி.ஏ., படிப்புகளில் சேர்வதற்கான 'கேட்' தேர்வில், சென்னையில் மட்டும்,
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இவர்களில், பி.இ.,
எனப்படும், இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் மாணவர்கள் அதிகம்.
BHARATHIAR UNIVERSITY B.Ed.,Admission Notification
BHARATHIAR UNIVERSITY Admission Notification
2 Years B.Ed Programme (2016-18) through the School of Distance Education
2 Years B.Ed Programme (2016-18) through the School of Distance Education
>Applications are issued from -02.12.2015
பள்ளியில் மது குடிக்கும் அவலம்: 2 ஆண்டில் 16 பேர் டிஸ்மிஸ்
நாமக்கல் மாவட்டத்தில் மட்டும், கடந்த
இரண்டு ஆண்டுகளில், மது குடித்த அரசு பள்ளி மாணவ, மாணவியர், 16 பேர்,
'டிஸ்மிஸ்' செய்யப்பட்டுள்ளனர்.
பெல் நிறுவனத்தில் லேப் டெக்னீசியன், கிளார்க், பொறியாளர் பணி
மத்திய அரசின்கீழ் மகாராஷ்டிரா புனேவில்
செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பெல்
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள லேப் டெக்னீசியன், கிளார்க்,
தொழில்நுட்பவியலாளர் மற்றும் பொறியியல் உதவியாளர் பணியிடங்களுக்கு
தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்னப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
உதவி பேராசிரியர் தேர்வு பட்டதாரிகள் ஓராண்டு காத்திருப்பு
அரசு
இன்ஜி., கல்லுாரி உதவி பேராசிரியர் பணிக்கு எழுத்து தேர்வு அறிவித்து
ஓராண்டாகியும் தேர்வு நடத்தாததால், விண்ணப்பதாரர்கள் குழப்பம்
அடைந்துள்ளனர்.
செருப்பு பட்டியலை அனுப்பு மாறு, அரசு உத்தரவு
நடப்பு
ஆண்டு மாணவர்களுக்கே இன்னும் இலவச காலணிகள் முழுமையாக வழங்காத நிலையில்,
அடுத்த ஆண்டுக்கான செருப்பு பட்டியலை அனுப்பு மாறு, அரசு
உத்தரவிட்டுஉள்ளதால், ஆசிரியர்கள் வெறுப்பு அடைந்துள்ளனர்.
திருக்குறள் போட்டியில் சாதனை: மாணவர்களுக்கு பார்லி., யில் பாராட்டு
மாநில
அளவில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற
மாணவர்களுக்கு பார்லிமென்டில் டிச.,17ல் பாராட்டு விழா நடக்கிறது.பா.ஜ.,
எம்.பி., தருண் விஜய் முயற்சியால் மாநில அளவில் பள்ளி,
கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நடந்தது. நவ., 1ல் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றம் சார்பில் தமிழக அளவில் போட்டிகள் மதுரையில் நடத்தப்பட்டன.
கல்லுாரி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி நடந்தது. நவ., 1ல் திருவள்ளுவர் மாணவர் இளைஞர் மன்றம் சார்பில் தமிழக அளவில் போட்டிகள் மதுரையில் நடத்தப்பட்டன.
பிளஸ் 2 பொதுத் தேர்வு தனி தேர்வர்களுக்குஅவகாசம்
பிளஸ்
2 பொதுத் தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், டிச., 4 வரை
விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசுத்
தேர்வுத்துறை இயக்குனர், பொறுப்பு, வசுந்தராதேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பில், 'மார்ச்சில் பிளஸ் 2 தேர்வு எழுத விரும்பும்
தனித்தேர்வர்கள், நவ., 27 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டது.
இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு.குவிகிறது அடுத்த ஆண்டு முதல் மீண்டும் அட்மிஷன் சூடு பிடிக்கும்
தமிழக
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 90 ஆயிரம் இடங்கள் காலியாகி, இன்ஜி.,
படிப்புக்கு மவுசு குறைந்தது போன்ற தோற்றம் ஏற்பட்டது. ஆனால், இந்த ஆண்டு
ஏராளமான இன்ஜி., மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி
உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் இன்ஜி., படிப்புகளுக்கு மீண்டும்
பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நூற்றாண்டு கண்ட ஐன்ஸ்டினின் சமன்பாடு!
நோபல் பரிசு பெற்ற ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
முன்வைத்த உலகப் பிரபலமான, 'பொது சார்பியல் கொள்கை', இந்த வாரம்
நுாற்றாண்டு காண்கிறது. நுாறு ஆண்டுகளுக்கு முந்தைய இதே நவம்பர் இறுதி
வாரத்தில் ஒரு நாள், ஐரோப்பாவே போரின் பிடியில் சிக்கியிருந்த நேரத்தில்,
இயற்பியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின், தன், பொது சார்பியல் கொள்கையை
விளக்கும் அந்த சமன்பாட்டை எழுதினார்.
விசாலினி என்னும் விருட்சம் !!!
அல்வாவுக்கு மட்டுமல்ல, அறிவுக்கும் திருநெல்வேலி தான் என்று, உலக அரங்கில்
உரக்கச் சொல்லியவர். 13 வயதிற்குள், 5 உலக சாதனைகள், 12 சர்வதேச கணினிச்
சான்றிதழ்கள் பெற்றவர். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம்
அவர்களின் பாராட்டை, தன் 3 வயதிலேயே பெற்றவர். தன் வீடு முழுவதையும்
பரிசுக்கோப்பைகள், கேடயங்கள், சான்றிதழ்கள், மற்றும் பதக்கங்களால்
நிறைத்து இருப்பவர்.
30 லட்சம் பேருக்கு காஸ் மானியம் 'கட்!'
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய எண்ணெய்
நிறுவனங்களுக்கு, தமிழகத்தில், 1.60 கோடி வீட்டு சமையல்காஸ் சிலிண்டர்
வாடிக்கையாளர் உள்ளனர். மத்திய அரசு, மானிய செலவை குறைக்க, ஜனவரி மாதம்,
நேரடி மானிய திட்டத்தை அறிமுகம் செய்தது.இத்திட்டத்தின் கீழ்,
வாடிக்கையாளர், சந்தை விலையில், சிலிண்டர் வாங்க வேண்டும். பின், அதற்கான
மானியம், அவரின் வங்கி கணக்கில் வரவுவைக்கப்படும். தற்போது, ஆண்டுக்கு, 12
சிலிண்டர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மறியல் போராட்டம்டிச., 1ல் மனு அளிக்க 'ஐாக்டோ' முடிவு
ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கை குறித்தும், டிச., 28ம் தேதி மறியல்
போராட்டம் குறித்தும், வரும் 1ம் தேதி ஜாக்டோநிர்வாகிகள், தலைமைச்
செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து,
மத்திய அரசுக்கு இணையான இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம், ஆசிரியர்களுக்கு
பாதுகாப்பு சட்டம், தமிழை முதல் பாடமாக்க அரசாணை உள்ளிட்ட, 15 அம்ச
கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்களின் கூட்டுக்குழுவான ஜாக்டோ,
கடந்த பிப்ரவரி முதல் போராட்டம் நடத்துகிறது.
வேலூர் மாவட்டத்தில் - பள்ளியின் பூட்டை உடைத்து கணினி, தொலைக்காட்சி பெட்டிகள் திருட்டு
ஆம்பூர் அருகே ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியின் பூட்டை உடைத்து
கணினி, தொலைக்காட்சிப் பெட்டிகள் திருடுபோனது குறித்து போலீஸார் விசாரித்து
வருகின்றனர்.
பிளஸ் 2 இடைநிலைத் தேர்வில் ஆங்கிலம், கணிதத்தில் அதிகமானோர் தோல்வி: ஆசிரியர்களுக்கு சிறப்பு கற்பித்தல் பயிற்சி
மதுரை மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற இடைநிலைத் தேர்வுகளில்
ஆங்கிலம், கணிதத்தில் அதிகமான மாணவர்கள் தோல்வியடைந்திருப்பது
தெரியவந்துள்ளது.
31.12.2015 இல் D.A 119%
01-01-2016 - ல் அகவிலைப்படி உயர்வு 6%கூடுதல் (119% + 6%) = D.A 125%.
கணக்கீட்டுக்காக எடுத்துக்கொள்ளும் ஊதியம்: