குடும்ப அட்டை
தொலைந்துபோனவர்கள், நகல் அட்டை கோரி விண்ணப்பிக்கும்போது காவல் துறையில்
புகார் அளித்ததற்கான ரசீது இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
டாக்டரின் ஆலோசனைப்படி மாஸ்க் அணியலாம்: பன்றிக்காய்ச்சல் பாதித்த மாணவர்களுக்கு தனி தேர்வு மையம்
சென்னை,
காஞ்சீபுரம், கோவை, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல்
பாதிப்பு இருந்து வருகிறது. பள்ளி குழந்தைகளுக்கும் இந்நோய் பரவி உள்ளதால்
பள்ளிகள் தகுந்த முன்னெச்சரிச்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. சளி,
இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலே குழந்தைகளை பள்ளிகளுக்கு
அனுப்ப வேண்டாம் என்று பெற்றோர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குரூப்–2 தேர்வு முடிவு அடுத்த வாரம் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் தகவல்
சான்றிதழ்
சரிபார்க்கும் பணி 11–ந் தேதி வரை நடைபெறுகிறது. 590 பேர்
அழைக்கப்பட்டுள்ளனர். இதே போல மோட்டார் வாகன ஆய்வாளர் பணிக்கான சான்றிதழ்
சரிபார்க்கும் பணியும் இன்று நடந்தது.
அரசு பொதுத்தேர்வுகள்: மாணவர்கள்-பொதுமக்கள் தொடர்பு கொள்ள கட்டுப்பாட்டு அறை அமைப்பு
நாளை (05.03.2015) முதல் நடைபெறவுள்ள மேல்நிலைப் பொதுத் தேர்வுகள் மற்றும் 19.03.2015 முதல் நடைபெறவுள்ள இடைநிலைப் பொதுத் தேர்வுகள் தொடர்பாக பொதுமக்கள் / மாணவர்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு : கிராம மாணவர்களின் நலனை கருதி தமிழ், ஆங்கிலம் தேர்வு தேதி மாற்ற கோரிக்கை
இந்திய மாணவர் சங்க மாநில தலைவர் உச்சிமாகாளி
வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசு 10 மற்றும் 12ம் வகுப்புக்கான
பொதுதேர்வு கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு
மார்ச் 19ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. இதில், மார்ச் 24ம்
தேதி தமிழ் இரண்டாம் தாள் தேர்வும், 25ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 26ம்
தேதி ஆங்கிலம் 2ம் தாள் தேர்வும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு.
வேலைவாய்ப்பு பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மார்ச் 7 கடைசி
திருநெல்வேலி
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த
பதிவுதாரர்கள் தங்களது பதிவை மூன்று ஆண்டுகளாக புதுப்பிக்காமல் இருந்தால்,
இம்மாதம் 7ஆம் தேதிக்குள் பதிவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
சி.பி.எஸ்.இ. 10–ம் வகுப்பு தேர்வு தொடங்கியது
அரசுப் பள்ளி ஆசிரியருக்கு மத்திய அரசு விருது
புதுவையைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியருக்கு சிறந்த பாடலாசிரியருக்கான மத்திய அரசின் விருது வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: கொளுத்தும் வெயிலில் காத்து நின்று விண்ணப்பம் வாங்கி செல்லும் பெற்றோர்
திருச்சியில்
உள்ள தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர், கொளுத்தும் வெயிலில்
பல மணிநேரம் காத்து நின்று விண்ணப்பங்களை வாங்கி செல்கிறார்கள்.
சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்'டா: இறுதி வாய்ப்பை வழங்கியது டி.ஆர்.பி.,
கம்ப்யூட்டர்
ஆசிரியர் பணிக்காக நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 20 சதவீதம் பேர்,
'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இவர்களுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியமான,
டி.ஆர்.பி., மீண்டும் ஒரு முறை வாய்ப்பு வழங்கி உள்ளது.
கைக்கு வராத கல்வி ஊக்கத்தொகை: கலெக்டரிடம் மாணவர்கள் புகார்
இடைநிற்றலை
தவிர்க்க 10 முதல் பிளஸ் 2 மாணவருக்கான 'சிறப்பு கல்விஊக்கத் தொகை' கடந்த 3
ஆண்டுகளாகக கிடைக்கவில்லை என கலெக்டர்களிடம் மாணவர்கள் புகார் அளித்தனர்.
பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச் 11ல் துவக்கம்
பிளஸ் 2 தேர்வு
இல்லாத நாட்களில், மார்ச், 11ம் தேதி முதல், பிளஸ் 1 ஆண்டு தேர்வை நடத்த,
பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு, தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், நாளை துவங்கி, மார்ச், 31ம் தேதி முடிகிறது. இந்நிலையில்,
பிளஸ் 2வுக்கு தயார் ஆகும், பிளஸ் 1 மாணவர்களுக்கு தேர்வை விரைந்து
முடிக்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வு இல்லாத
நாட்களில், பிளஸ் 1 ஆண்டு தேர்வு மார்ச், 11ம் தேதி துவங்க உள்ளது.
முதுகலை செம்மொழித் தமிழ் பாட வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 3 ஆயிரம் உதவித்தொகை
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை
செம்மொழித்தமிழ் பட்ட வகுப்பு தொடங்கப்பட்டால், அதில் பயிலும்
மாணவர்களுக்கு செம்மொழி மத்திய நிறுவனம் மாதம் ரூ 3 ஆயிரம் ஊக்கத் தொகையாக
வழங்கும் என செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவன பதிவாளர் முனைவர்
மு.முத்துவேலு தெரிவித்தார்.
ஜிப்மர் மருத்துவ நுழைவுத்தேர்வு: ஆன்லைனில் விண்ணப்பம்
ஜிப்மர்
மருத்துவ கல்லூரியில் காலியாக உள்ள 150 எம்.பி.பி.எஸ் இடங்களுக்கு அகில
இந்திய அளவில் நுழைவு தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். இந்த
நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதி 50 நகரங்களில் காலை 10 மணி
முதல் 12.30 மணி வரை நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் விநியோகம்
செய்யப்படுகிறது.
சென்னையில் 3 மாணவர்களுக்கு அறிகுறி: பன்றிக்காய்ச்சலை தடுக்க 50ஆயிரம் தடுப்பு ஊசி
நாடு
முழுவதும் பன்றிக்காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியா முழுவதும்
இந்நோய்க்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருக்கிறார்கள்.
8.43 லட்சம் பேர் எழுதுகின்றனர்: பிளஸ் 2 தேர்வு நாளை தொடக்கம்
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்து 43 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்வு
எழுதுகின்றனர். இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்வுத்துறை
செய்துள்ளது.
குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் - இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2013-14ம் கல்வியாண்டில் பயிலும் பார்வையற்ற குழ்ந்தைகளுக்கு கற்றலை எளிதாக்க சிறப்பு உபகரணங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிகளின் பெயர் பட்டியல் கோரி இயக்குனர் உத்தரவு
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் பள்ளி கல்வித் துறை அமைச்சருடன் சந்திப்பு
பகுதிநேர சிறப்பாசிரியர்கள் மற்றும் உடற்கல்வி
ஆசிரியர்கள் தலைமை செயலகத்தில் பள்ளி கல்வித் துறை அமைச்சரை நேற்று நேரில்
சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். தமிழக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் சங்க
தலைவர் எம்.ராஜா, தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி
இயக்குநர் சங்க மாநில தலைவர் ரவிசந்தர் மற்றும் நிர்வாகிகள், நேற்று தலைமை
செயலகம் வந்து பள்ளி கல்வி துறை அமைச்சர் வீரமணியை சந்தித்து பேசினர்.
பின்னர் அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:
பெற்றோர்கள் பிள்ளைகளிடம் தேர்வு குறித்த அழுத்தத்தை திணிக்க முயல வேண்டாம் : வைகோ
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை (தேர்வுகள்)
சார்பில் நடத்தப்படும் பன்னிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 5
அன்றும்; பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள் மார்ச் 19 அன்றும்
தொடங்குகின்றன. பல இலட்சக் கணக்கான மாணவக் கண்மணிகள் இந்தப்
பொதுத்தேர்வுகளை எழுதுகின்றனர். உயர்கல்விக்கு அழைத்துச் செல்லும்
நுழைவாயிலாக பொதுத்தேர்வுகள் விளங்குகின்றன என்று மதிமுக பொதுச் செயலாளர்
வைகோ கூறியுள்ளார்.
தேர்வு பணிக்கு ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளியில் இருந்து, வருங்காலங்களில் பத்து கி.மீ என்ற தூரத்தை ஏழு கி.மீட்டராக குறைக்க வலியுறுத்தல்
eilbgw cŸs g‹åu©lh«
tF¥ò bghJ¤nj®éš miw f©fhâ¥ghs® ãakd¤Âš gšntW
kh‰w§fis Ï›th©L muR nj®ÎfŸ Jiw òF¤ÂaJ .M©L njhW« nkšãiy¥ bghJ¤nj®Î,g¤jh« tF¥ò
bghJ¤nj®Îfëš miw¡f©fhâ¥ò gâfë‹ nghJ njitahd Ïl§fëš gâah‰¿l MÁça®fŸ gšntW Ka‰ÁfŸ
brŒt®.Mdhš Ï›th©L muR nj®Î¤ Jiw nj®Îfëš
kªjd j‹ikia fU¤Âš bfh©L òÂa Kiwia òF¤ÂÍŸsJ.
பிளஸ் 2 தேர்வு நடக்காத நாட்களில் பிளஸ் 1 ஆண்டுத்தேர்வு நடத்த முடிவு
பிளஸ் 2 பொதுத்தேர்வு நாளை மறுநாள் (மார்ச் 5)
துவங்கி, மார்ச் 28ல் முடிவடைகிறது. இதற்கிடையில் மார்ச் 7,14, 21(சனி) 8,
15, 22 (ஞாயிறு) வார விடுப்பு நாட்கள் வருகிறது. மார்ச் 11, 12, 17, 19,
24, 25, 26 ஆகிய தேதிகளில் பிளஸ் 2 தேர்வுகள் இல்லை. அந்த நாட்களில் பிளஸ் 1
வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வை நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு
செய்துள்ளது.
எஸ்.ஐ., தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாமல் போலீஸ் தவிப்பு: தடையில்லா சான்று தருவதில் இழுத்தடிப்பு
போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒருவாரமே உள்ள நிலையில்,
தடையில்லா சான்று தர அதிகாரிகள் இழுத்தடிப்பதால் போலீசார் விண்ணப்பிக்க
முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான பறக்கும்படை
பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களில் 10 அறைகளுக்கு ஒருவர் வீதம் நிலையான
பறக்கும்படை அமைக்க வேண்டும் என தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பிளஸ் 2
பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்க பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றின் செயல்பாடுகள் தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்ககம் வழிகாட்டி
நெறிமுறைகளை வகுத்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: