சுப்ரீம் கோர்ட்
பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும்
கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது .
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்
இரட்டை
பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும்
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக
கருதப்படுகிறது
வாடகைக்கு வீடு எடுத்து படித்தேன்: முதலிடம் மாணவி சுஷாந்தி நெகிழ்ச்சி
"நான் படித்த பள்ளிக்கூடம்
கிருஷ்ணகிரியில் இருந்து அதிக தூரம் என்பதால் ஊத்தங்கரையிலேயே வீடு
வாடகைக்கு எடுத்து தங்கி படித்தேன்" என்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
என்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது
பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியானது.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை
தமிழகம்
முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை
விடப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடுப்பில் மாணவர்கள் உள்ளனர். கோடை
விடுமுறை விடப்பட்டாலும் சில பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து
சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கடந்த ஆண்டு புகார்கள் வந்தன.
பிளஸ் டூ ரிசல்ட் பேப்பரில் ஒரே பிறந்த தேதி... கனிணி தவறால் குழம்பிப் போன வேலூர் மாணவர்கள்
பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு
ஒரே பிறந்த தேதி போட்டிருப்பதால் வேலூர் மாவட்டம் ஆம்பூரில்
குழப்பமாகியுள்ளது.
விழுக்காட்டில் வழுக்கிய விருதுநகர் – 9 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி
ஒவ்வொரு வருடமும் தேர்ச்சியில் அதிக
விழுக்காடுகளைப் பெறும் விருதுநகர் மாவட்டம். ஆனால், இந்த வருடம் 9 அரசு
பள்ளிகளும், 59 தனியார் பள்ளிகளும் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி
பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே அதிக தேர்ச்சி
விழுக்காடுகளைப் பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10
மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில்
கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை
பிடித்தாள்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்:
பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்
பிளஸ்
2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி
மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள்.
அரசு டிரைவர்கள் சம்பளம் குறைப்பு
அரசின்
பல்வேறு துறைகளைச் சார்ந்த டிரைவர்களின் சம்பளம் ரூ.4000 லிருந்து ரூ.6000 க்குள் மட்டுமே
இருக்கும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. முன்னதாக சில துறைகளில் டிரைவர்களின் சம்பளம்
ரூ.5000 முதல் ரூ.9000 ஆக இருந்தது.
Higher Secondary HM Promotion Panel - 2014 Now Released.
01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய
மாநிலத்தில் முதல் மதிப்பெண் 1193 - ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி பெற்றார்!
2014ம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வில், ஊத்தங்கரையின் ஸ்ரீவித் மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷாந்தி, மொத்தம் 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் சென்டம்?
கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில் அதிகமாக உள்ளது.
ஃபேஸ்புக்கில் 73% இந்திய சிறுவர் சிறுமிகள்: இவர்கள் கணக்கு வைத்திருப்பது சட்டப்படி குற்றம்
ஃபேஸ்புக்கில்,
இந்தியாவில் உள்ள 13 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளில் 73% பேர் கணக்கு
வைத்துள்ளதாக அசோசம் சர்வே தெரிவித்துள்ளது.
சட்ட படிப்புகளுக்கு 12ம் தேதி முதல் விண்ணப்பம்
அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் சட்டக் கல்லுாரிகளில், 2014 15ம் கல்வியாண்டில், மாணவர் சேர்க்கைக்காக, ஐந்தாண்டு
படிப்பிற்கு வரும், 12ம் தேதியும், மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கு, 26ம்
தேதியும் விண்ணப்பங்கள் வழங்கப் படுகின்றன.
தபால் ஓட்டு பதிவு 40 சதவீதம் கூட இல்லை
லோக்சபா தேர்தலில், ஈரோடு மாவட்டத்தில்,
10.04 லட்சம் ஓட்டு பதிவாகி உள்ள நிலையில், தபால் ஓட்டு போடும் அரசு
ஊழியர்கள், 50 சதவீதம் பேர், ஓட்டு போட முன் வரவில்லை. ஈரோடு லோக்சபா
தொகுதியில், ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, குமாரபாளையம்,
காங்கேயம், தாராபுரம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன.
பி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை மே 13ல் விண்ணப்பம்
அரசு,
அரசு உதவி பெறும், சுயநிதி, அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில், 2014 - 15ல்,
நேரடியாக, இரண்டாம் ஆண்டு பொறியியல் பட்டப்படிப்பில் சேர, விண்ணப்பம்
வழங்கப்பட உள்ளது.
90 சதவீதத்தை எதிர்பார்க்கும் அதிகாரிகள்: மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதிப்பரா?
சிறப்பு வகுப்புகள், தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க பிரத்யேக கையேடுகள் என, பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் அதிகரிக்க,
சென்னை மாநகராட்சி எடுத்த பல்வேறு முயற்சிகளுக்கு, இன்று வெளியாக உள்ள
தேர்வு முடிவில், பலன் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தீவிர கண்காணிப்பில் தபால் ஓட்டு பெட்டி: அதிகாரிகள் அதிரடியால் கட்சியினர் கலக்கம்
விழுப்புரம்
கலெக்டர் அலுவலகத்தில், தபால் ஓட்டு பெட்டிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்
பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் : கல்வித்துறை பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
அரசு பள்ளிகளில், எல்.கே.ஜி., யு.கே.ஜி.,
வகுப்புகளை துவங்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி, கல்வித்
துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ப்ளஸ் 1 தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு, ஜூன் மூன்றாம் தேதி, உடனடி தேர்வு நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், கோபி, ஈரோடு என
இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன.
இவ்விரண்டிலும், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில், 15 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ, மாணவியர், ப்ளஸ்1பயில்கின்றனர். பெரும்பாலும் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
+2 Result
மார்ச் 2014-ல் நடைபெற்று முடிந்த மேல்நிலைத் தேர்வுக்கான தேர்வு முடிவுகள் 09.05.2014 அன்று காலை 10.00 மணிக்கு வெளியிடப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிப்பு
மத்திய அரசின், 50 லட்சம் ஊழியர்கள் மற்றும்
அதிகாரிகளுக்கு, சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்
கம்ப்யூட்டரில் இருந்து டிஜிட்டல் கையெழுத்து கொண்ட சான்றிதழ்களை பள்ளி, கல்லூரி உள்பட அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது
+2 மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மே 16-ஆம் தேதிக்குப் பிறகே வழங்கப்படும் எனத் தெரிகிறது.
Selection Grade / Special Grade scale of pay
தேர்வு நிலை/ சிறப்பு நிலைக்கு படிகள்/ ஊதிய நிர்ணயம் சார்ந்த திருத்தி அமைக்கப்பட்ட அரசாணை வெளியீடு
மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...
மதிப்பெண் என்பது வாழ்க்கையல்ல... வாழ்வும் அதோடு நிற்பதல்ல...தோல்விக்கு விலை உயிரல்ல...
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 9) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
மாணவர்களின்
மதிப்பெண்கள் அனைத்தும் பலமுறை சரிபார்க்கப்பட்டு தேர்வு
முடிவுகளை வெளியிட தயார்நிலையில் உள்ளதாக
அரசுத்தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.