கடந்த 5 ஆண்டுகளில் குழந்தை தொழிலாளிகளாக இருந்து மீட்கப்பட்ட 21 ஆயிரத்து
622 குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர் என டெல்லியில் நடைபெற்ற
தேசிய குழந்தை தொழிலாளர் மாநாட்டில் தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
நிலோபர் கபில் தெரிவித்தார்.
தீபாவளியை முன்னிட்டு பல நிறுவனங்கள் சலுகைகளை வழங்கி வருகிறது. மொபைல்
ரீசார்ஜ் கட்டணம் முதல் ஸ்மார்ட்போன் கட்டணம் வரை அனைத்தும் சலுகை
விலையில் வழங்கப்படவுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4,820 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என
மாநில போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.
சென்னை பல்லவன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இத்தகவலை
தெரிவித்தார்.
அனைத்து கிராமப்புறக் குடும்பங்களுக்கும் 24 மணி நேர மின்சார வசதி வழங்கும்
திட்டத்தைப் பிரதமர் மோடி அறிவிப்பார் என்று மின்சக்தித்துறை அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 744 சிறப்பு மருத்துவர்கள்
தேர்வு செய்யப்படுகின்றனர் என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர்
தெரிவித்துள்ளார்.