Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 25.10.21
திருக்குறள் :
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்.
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்.
பழமொழி :
Cut your coat according to your cloth.
விரலுக்கேற்ற வீக்கம் வேண்டும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. பெற்ற உதவிக்கு நன்றி சொல்லுவேன். செய்த தவறுக்கு மன்னிப்பு கோருவேன்.
2. இதன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து என் வாழ்வில் சிறந்த மனிதனாக விளங்குவேன்
பொன்மொழி :
மனிதனுக்குள் புதைந்திருக்கும் பூரணத்தை வெளிப்படுத்துவதே கல்வி ,அறிவு அனைவரிடத்திலும் இயல்பாகவே உள்ளது. தேர்ந்தெடுத்தலையும் வழிநடத்துதலையும் கல்வியே செய்ய முடியும். --------விவேகானந்தர்
பொது அறிவு :
1. முதன் முதலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவர் யார்?
மேரிக்கியூரி.
2.பிரட்டன் நாட்டின் தேசிய மலர் எது?
ரோஜா.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
அவசியமான சில ஆரோக்கிய குறிப்புகள்
- மாத்திரைகளை சாப்பிடும் போது குளிர்ச்சியான நீரில் எடுப்பதை தவிர்த்து, வெதுவெதுப்பான நீரில் எடுக்க வேண்டும்
- எப்போதும் 5 மணிக்கு மேல் வயிறு நிறைய உணவை உட்கொள்ளும் பழக்கத்தை கைவிட வேண்டும்.
- பகல் நேரத்தில் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரித்து, இரவில் நேரத்தில் குறைத்துக் கொள்ள வேண்டும்.
- தினமும் இரவில் 10 மணிக்கு தூங்கி, அதிகாலையில் 4 மணிக்கு எழும் பழக்கத்தைக் கொண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- எப்போதும் உணவை உண்ட பின் தூங்கும் பழக்கத்தை கொண்டவராயின், அவற்றை உடனே தவிர்ப்பது நல்லது.
- போன் பேசும் போது இடது பக்கம் வைத்து பேசுவது நல்லது.
- மொபைலை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசுவதை தவிர்க்க வேண்டும். அதிலும் பேட்டரி மிகவும் குறைவாக இருக்கும் நேரத்தில் சார்ஜ் போட்டிருந்தால், அப்போது எந்த ஒரு அழைப்பு வந்தாலும் பேச வேண்டாம். ஏனெனில் சாதாரண நேரத்தை விட, சார்ஜ் போட்டிருக்கும் நேரத்தில் கதிர்வீச்சு 1000 மடங்கு அதிகமாக இருக்கும்.
கணினி யுகம் :
அக்டோபர் 25
- 2001 – விண்டோஸ் எக்ஸ்பி வெளியிடப்பட்டது.
நீதிக்கதை
இன்றைய செய்திகள்
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 22.10.21
திருக்குறள் :
பழமொழி :
After dinner sit a while
உண்ட களைப்பு தொண்டருக்கு உண்டு
இரண்டொழுக்க பண்புகள் :
1. உள்ளது எதுவோ அது இறைவன் கொடுத்தது என்று மகிழ்ச்சியாய் இருப்போம்.
2. இல்லாதது எதுவோ அது இனி இறைவன் கொடுக்கப் போவது என்று நம்பிக்கையோடு இருப்போம்.
பொன்மொழி :
நாம் அளவுக்கு மீறிய ஆசையால் தூண்டப்படுகிறோம். தூண்டப்பட்டதனால் ஆசைப்படுகிறோம் .----- கௌதம புத்தர்
பொது அறிவு :
1." உயிர் காக்கும் உன்னத உலோகம் " என அழைக்கப்படும் உலோகம் எது?
ரேடியம்.
2." கருப்பு ஈயம் " என்றழைக்கப்படும் தாது எது?
கிராபைட்.
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
வேர்க்கடலை: பல ஆரோக்கிய நன்மைகளின் கலவை
ஆயுர்வேத நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் காலையில் ஊறவைத்த வேர்க்கடலையை உட்கொண்டால், பின்வரும் நன்மைகள் கிடைக்கும்.
- தோல் பிரச்சனைகளில் (Skin Problems) இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- செரிமானம் சரியாகி மூளை திறன் அதிகரிக்கும்.
- இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
- இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்.
- அதிக நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும்.
கணினி யுகம் :
நீதிக்கதை
இன்றைய செய்திகள்