டிஎன்பிஎஸ்சி குரூப்-2 மெயின் தேர்வை நடத்தி முடித்து ஓராண்டுக்கு மேல்
ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதனால் தேர்வு எழுதிய
9,680 பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில்
இருந்தும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி
முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால்,
மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள்
85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து
துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் ரூ.7,500 ஊதியம் என்ற
அடிப்படையில் தாற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின்
பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்கள்
எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று குடியரசு துணைத்
தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.