எம்எல்ஏகளுக்கான ஊதியம் இரு மடங்கு உயர்த்தி வழங்கவுள்ள நிலையில் தனக்கு
வழங்கப்படும் ஊதிய உயர்வை கல்வி வளர்ச்சிக்காக செலவிடுவேன் என்று
நாங்குநேரி எம்எல்ஏ வசந்தகுமார் அறிவித்து முன்மாதிரியாக திகழ்கிறார்.
தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் கழிவறை கட்ட அரசுக்கு ஐகோர்ட்
உத்தரவிட்டுள்ளது.8 மாதங்களுக்குள் கழிவறை கட்ட வேண்டும் என்று
உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணையிட்டுள்ளது.
போலி ஜாதிச் சான்றிதழ் அளித்து அரசு வேலை பெற்றவர்கள் வேலையில்
இருந்துடிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று நாடாளுமன்றத்தில் மத்திய
அமைச்சர்ஜிதேந்திர சிங் எச்சரிக்கை விடுத்தார்.
ஆதார் அட்டை என்று தனியாக எடுக்க வேண்டிய அவசியம் இனி இல்லை.ஸ்மார்போனிலேயே
ஆதாரை எப்போதும் வைத்து இருக்கும் வகையில் மொபைல்ஆப்ஸ்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும்
பரபரப்பை ஏற்படுத்தினாலும், தனது அடுத்த அதிரடி ஆஃபர்களை வெளியிட்டுள்ளது
ரிலையன்ஸ் ஜியோ.