ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பொது
இடமாறுதல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை இந்த
ஆண்டு அறிமுகப்படுத்தப்படுகிறது.
சென்னையில், மாநகராட்சி பள்ளிக்கு எதிரே, பெட்டிக்கடையில் விற்கப்பட்ட
சாக்லேட்டை வாங்கிச் சாப்பிட்ட மாணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளான். சாக்லேட்டில் கஞ்சா
கலக்கப்பட்டிருக்கும் பகீர் தகவல் வெளியாகி உள்ளது.
A COMPARATIVE CHART ON THE
RECOMMENDATIONS OF 7TH CPC WHEREIN INCREASE OF PAY HAS BEEN ANALYSISED
ON THE BASIS OF EXISTING GRADE PAY. IN THIS METHOD ALSO GROUP C AND
GROUP B EMPLOYEES FOUND SUFFERER. THE STATEMENT AS PREPARED BY HIM IS
GIVEN BELOW:
2016-17ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில சாதனை
எய்தும் வகையில் திருநெல்வேலி வருவாய் மாவட்டத்தில் உள்ள 3 கல்வி
மாவட்டங்களில் தலா 100 பேர் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி
அளிக்கப்படுகிறது.
பொறியியல் சேர்க்கை ஒற்றைச் சாளர கலந்தாய்வு தொடங்கி ஒரு வார காலம்
முடிவடைந்த நிலையில், அதிக மாணவர்களின் விருப்பப் பிரிவாக மின்னணுவியல்
தொடர்பியல் பொறியியல் (இசிஇ) பிரிவே தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான ஓளிவுமறைவற்ற பொது மாறுதல் கலந்தாய்வை
ஆசிரியர்கள், மாணவர்கள் நலன் கருதி உடனடியாக நடத்தக்கோரி தமிழகம் முழுவதும்
அனைத்து வட்டாரத் தலைநகரங்களிலும் வருகிற ஜூலை 8-ம் தேதி வெள்ளிக்கிழமை
மாலை ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளது என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி
ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் செ.பாலசந்தர் தெரிவித்தார்.
முறைகேடுகளைத் தவிர்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கிலும்
மத்திய அரசின் இடைநிலைப் பணிகளுக்காக நடத்தப்படும் தேர்வை இணையதளம் மூலம்
நடத்த பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) முடிவு செய்துள்ளது.
தருமபுரியில் நடைபெற்ற பி.எட்., தேர்வில், தேர்வர்களுக்கு வினாத்தாள்
வழங்கவும், அறை ஒதுக்குவதிலும் நிகழ்ந்த தாமதத்தால் தேர்வர்கள்
பரிதவிப்புக்குள்ளாகினர்.
பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்விக்கு ஆலோசனை தரும், 'தினமலர்' நேரடி
கேள்வி - பதில் நிகழ்ச்சியில் இன்று, இன்ஜி., படிப்புகளின் எதிர்காலம்
குறித்த தகவல்கள் இடம்பெறுகின்றன.
உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் பிற மாநில மாணவர்களும் பங்கேற்கும்
வகையில் விண்ணப்பிக்கும் காலத்தை, 5ம் தேதி வரை, தமிழக அரசு நீட்டித்து
உள்ளது.தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லுாரிகளில் எம்.எஸ்., - எம்.டி.,
படிப்புகளை முடித்தோருக்கான, டி.எம்., மற்றும் எம்.சி.எச்., என்ற
மூன்றாண்டு உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு, 189 இடங்கள் உள்ளன.
தேர்வில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக காப்பியடித்தது குறித்து, ஆய்வு நடத்தி
சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை பல்கலைக்கு, உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும்
நன்னெறி வகுப்புகளை மீண்டும் நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தினார்.
திராட்சை நினைக்கும்போதே இனிக்கும் பழங்களில் ஒன்று. இவற்றில்
கறுப்புத் திராட்சை, பச்சைத் திராட்சை, பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த்
திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல
வகையுண்டு. இந்தப் பழங்களை உலரவைத்து எடுக்கப் படும் உலர்ந்த திராட்சையை
கிசுமுசுப் பழம் என்பார்கள்.
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால் ஏற்படும் ரூ. 31,000
கோடி நிதிச் சுமையை, வருவாய் மூலமாக சமாளிப்பதற்கு ரயில்வே துறை முயற்சி
செய்யும் என்று அந்தத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை
கூறினார்.
'அரசு பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணி நியமன ஆணை
அனுப்ப, அவர்களின் நடத்தை சான்றிதழுக்காக, காத்திருக்க தேவையில்லை' என,
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
'மூன்று ஆண்டு அனுபவம் உடைய ஆசிரியர்கள் மட்டுமே, பி.எட்., செய்முறை தேர்வு
கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்படுவர்' என, ஆசிரியர் கல்வியியல் பல்கலை
அறிவித்துள்ளது.
'மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆசிரியர் விருதுக்கு, தகுதியானவர்கள், ஜூலை, 31க்குள் விண்ணப்பிக்கலாம்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
அறிவித்துள்ளது.
“கிராமப்புற மாணவர்கள் பி.இ., தமிழ் வழியில் சேருவது கடந்த
ஆண்டை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது,” என காரைக்குடியில் இரண்டாம் ஆண்டு
நேரடி சேர்க்கையை பார்வையிட்ட தொழில் நுட்ப கல்வி இயக்குனர் மதுமதி
தெரிவித்தார். காரைக்குடி அழகப்ப செட்டி யார் இன்ஜி., கல்லுாரியில், பி.இ.,
இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கைக்கான கவுன்சிலிங் கடந்த 29-ம் தேதி
தொடங்கியது. நேற்று மெக்கானிக்கல் பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது.
ஆசிரியர் கல்வியான பி.எட்., படிப்பில், 2015ல், புதிய பாடத்திட்டம்
அறிமுகம் செய்யப்பட்டது. ஓராண்டு படிப்பு, இரண்டாண்டுகளாக மாற்றப்பட்டு
உள்ளது. முதலாம் ஆண்டுக்கு எழுத்து தேர்வு, வினாத்தாள் முறை மற்றும்
மதிப்பீட்டு முறையில்,பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
செவ்வாழை பழம் எளிமையும், எண்ணற்ற சத்துக்களும் கொண்டது. வாழைப்பழத்தில் பல
வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புசத்தும்,
இரும்புச்சத்தும் காணப்படுகின்றன. பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும்
செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களை கொண்டது.
டாக்டர் முத்துக்குமரன் கமிட்டி தாக்கல் செய்த சமச்சீர் கல்வி
திட்டத்தின்படி அரசுப்பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த
வாய்ப்புள்ளதா? என்பது குறித்து தமிழக அரசு 4 மாதத்துக்குள் பரிசீலித்து
அறிக்கை சமர்ப்பிக்க சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.