Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'உதவி பொறியாளர் தேர்வை மத்திய ஆணையம் நடத்தணும்

         ' தமிழ்நாடு மின் வாரியம், எலக்ட்ரிக்கல், 300; சிவில்,50; மெக்கானிக்கல், 25 என, 375 உதவி பொறியாளர் பணியிடங்களை, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்துள்ளது. ஜன., 31ல், எழுத்து தேர்வு நடந்தது; ஒரு லட்சம் இன்ஜினியரிங் பட்டதாரிகள்தேர்வெழுதினர்.


சான்றிதழ்களை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் -தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல்வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்

         சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 9ம் வகுப்பு வரை அறிமுகம் செய்யப்பட்ட, 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' என்ற கணினி அறிவியல் பாடம், ஐந்து ஆண்டுகளாக மாயமாகி விட்டது. அதனால், அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் புத்தகங்கள், பாடநுால் கழக கிடங்கில் மக்கி போகும் நிலையில் உள்ளன.தமிழகத்தில், 2011ல், சமச்சீர் கல்வி பாடத்திட்டம், 1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை அறிமுகமானது.


தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற 16 முதல் விண்ணப்பிக்கலாம்

         2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுதிய பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி செவ்வாய்கிழமை (பிப்ரவரி 16) முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-


படிப்பைக் காரணம் காட்டி மாற்றுச் சான்றிதழ்வழங்கினால் கடும் நடவடிக்கை: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எச்சரிக்கை

        அரசுப் பொதுத்தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் சில மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் (டி.சி.) அளிக்கும் தலைமை ஆசிரியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.
 

கும்பகோணத்தில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

      கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழாவையொட்டி10நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 24ஆம்தேதிவரைவிடுமுறை அளித்துமாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.


5 மாணவர்களுக்கு இளம் விஞ்ஞானி விருது: கால்சியம் ஆய்வுக்கு கிடைத்தது

      கடல் சங்குகளில் கிடைக்கும் கால்சியத்தை இயற்கை உரமாக பயன்படுத்த முடியும்' என, ஆய்வு செய்த ராமநாதபுரம் மாணவர்கள் ௫ பேருக்கு 'இளம் விஞ்ஞானி' விருது கிடைத்தது.தேசிய அறிவியல் இயக்கம் சார்பில் சண்டிகாரில் 23வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடுநடந்தது. இதில் ராமநாதபுரம் வேலுமாணிக்கம் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் ஜோஸன்ஹாரிஸ், ரங்கராஜா, சிவமதிபிரியா,அமிர்தா, கவியரசன் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர்.


தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு

       தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.


தொடரும் அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': மாநிலம் முழுவதும் இன்று மறியல்.

      தமிழக அரசு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற, 'ஸ்டிரைக்' இரண்டாவது நாளாக, நேற்றும் நீடித்தது. அரசிடம் இருந்து உறுதியான பதில் கிடைக்காததால், மாநிலம் முழுவதும், இன்று மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
 

தொழிலாளர் நல அலுவலகத்தில் ஆசிரியர்கள் நூதன போராட்டம்

      கல்வித் தகுதிக்கு ஏற்ப மாற்றுப்பணி கோரி, குழந்தை தொழிலாளர் திட்ட ஆசிரியர்கள், தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில், காலவரையின்றி காத்திருக்கும் நுாதன போராட்டத்தை துவக்கி உள்ளனர்.தமிழகத்தில், குழந்தை தொழிலாளர் திட்ட பள்ளிகளில், ஆசிரியர், பள்ளி எழுத்தர்என, 1,254 பேர் பணியாற்றி வருகின்றனர்.


70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள்முடிவு

        மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும்மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.


8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு

        தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரைwww.tndge.inஎன்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.


விரைவில் ஆன்லைனில் பி.எப்., பணம் பெறும் வசதி

      தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும்பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (இ.பி.எ.ப்.ஓ.,), ஆரக்கிள் ஓ.எஸ்., மூலம் ஒருங்கிணைந்த டேட்டா சென்டர்களை செகந்திராபாத், கர்கூன், துவாரகா ஆகிய இடங்களில் அமைக்கவுள்ளது.


Express Pay Order

PAY ORDER FOR 90 P.G COMMERCE POSTS UPTO 31.12.2016

சிறிய விண்கல் பூமியைத் தாக்குமா? கடந்து போகுமா? அச்சத்தில் விஞ்ஞானிகள்.

                       

  பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் விண்கல் ஒன்று, மார்ச் மாதத்தில் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது பூமியை கடந்து செல்லுமா அல்லது தாக்குமா என்பதை கணிக்க முடியாமல், விஞ்ஞானிகள் அச்சத்தில் உள்ளனர்.
 

பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு

    பள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதிபள்ளிகளில் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடம் நீட்டிப்பு; 1,880 பேர் நிம்மதி

சுகாதார ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

            சென்னை:பொது சுகாதாரத் துறையில், காலியாக உள்ள, 110 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 
 

TNPTF-ன் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம்

TNPTF-ன் அவசர மாநிலச் செயற்குழுக் கூட்டம்
       தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநில மாநாட்டுத் தீர்மானங்களை நிறைவேற்றக் கோரியும், ஜேக்டோவின் அமைச்சரவை மட்டத்திலான பேச்சு வார்த்தைக்குப் பின்னான தற்போதை சூழலில் மாநில மாநாட்டுத் தீர்மானங்களை எவ்வாறு அமுல்படுத்திட வேண்டும் என்பது குறித்து முடிவாற்றவும் அவசர மாநிலச் செயற்குழு,

அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் இதர படிகள் பெற தகுதியானவர்கள் பட்டியலை 15.02.2016 க்குள் அனுப்ப நிதித்துறை உத்தரவு

       நிதித்துறை-அரசு ஊழியர்களுக்கான சிறப்பு ஊதியம் மற்றும் இதர படிகள் பெற தகுதியானவர்கள் பட்டியலை 15.02.2016 க்குள் அனுப்ப நிதித்துறை முதன்மை செயலர் உத்தரவு-செயல்முறைகள்

கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கையை ஏற்க வேண்டும்.

           தமிழகத்தில் உள்ள 83 அரசு கல்லூரிகளில் சுமார் 3600 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 

உதவி பேராசிரியர்கள் நியமனம் தற்காலிகமாக நிறுத்தம்.

        தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலையில், உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, அனைத்து பல்கலை மாணவர் சங்க தலைவர் வினோத்குமார் கூறியதாவது: 
 

ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு

           ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, ஐந்து கட்ட போராட்டங்களை, ஜாக்டோ சங்கம் நடத்தியது. அடுத்தபோராட்டம் குறித்து முடிவு செய்ய, பிப்., ௧௩ல் திருச்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்ட திட்டமிட்டிருந்தது.


3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' பணிகள் ஸ்தம்பிப்பு

      மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். 
 

13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு

       தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 13 இடங்களில், மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஓராண்டாக சீனியர் விரிவுரையாளர்கள் தான் 'பொறுப்பு' முதல்வர்களாக இருந்தனர்.


சம்பள உயர்வு குறித்து பேச 7 பேர் குழு அமைப்பு

        தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்கள் சம்பள உயர்வு குறித்து, தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்த, ஏழு பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின் வாரிய ஊழியர்களுக்கு, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சம்பளம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, 2015 டிச., 1 முதல், புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும்.


தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் ஆசிரியர்கள் தவிப்பு

       தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்ப்பில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் இருப்பதால் பணியை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்க்கும் பணி ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடந்தது. இதில் ஆசியர்கள் வீடு, வீடாக சென்று ஏற்கனவேதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தவறுகளை சரிசெய்தனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive