கடலூரில் வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு அங்கேயே பணியாற்றும் நமது வாசக ஆசிரியர்களுடன் பாடசாலை கைகோர்க்கிறது. கடலூர், சிதம்பரம், காட்டுமண்ணார்கோவில், சேத்தியா தோப்பு போன்ற அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு உதவ விரும்பினால் நமது பாடசாலை ஆசிரியர் குழு உறுப்பினர்களை தொடர்பு கொள்ளலாம். தங்கள் விருப்பத்தின் பேரில் தாங்கள் வழங்கிய தொகைக்கு ஈடான பொருட்கள் உரியவருக்கு வழங்கபடும்போது புகைப்படம் எடுக்கப்பட்டு தங்கள் வாட்ஸ்அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும். நல் உள்ளம் கொண்ட ஆசிரியர்கள்! நம்பகத்தன்மை கொண்ட ஆசிரிய சமூகம்! எனவே உதவுங்களேன்!
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
Flash News - கனமழை : 9 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (04/12/2015) விடுமுறை அறிவிப்பு.
*தஞ்சாவூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*அரியலூர் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
*திருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
*நாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
ஒரு குடிநீர் பாக்கெட் ரூ.10; வாழைப்பழம் ரூ.20
வெள்ளம் பாதித்த பகுதிகளில், மக்கள் நிற்கதியாக தவிக்கும் நிலையில், ஒரு
குடிநீர் பாக்கெட், 10 ரூபாய்க்கும், ஒரு வாழைப்பழம், 20 ரூபாய்க்கும்
விற்கும் கொடூரம் சென்னையில் நடக்கிறது.
வெள்ளத்தால் வீடு, வாகனங்கள் நாசம் ரூ.1,000 கோடியை தாண்டிய இழப்பீடு
வெள்ளத்தில், வாகனம், வீடுகளை இழந்த பாலிசிதாரர்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம், 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பீடு கோரி உள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய வசதி
சென்னையில், வெள்ளம் பாதித்த பகுதிகள் குறித்த விவரங்களை அறிந்து கொள்ள,
தமிழகத்தை சேர்ந்த, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இணைந்து, தகவல்
தொடர்பு மையத்தை ஏற்படுத்தி உள்ளனர்.வெள்ளம் பாதித்த பகுதிகளில்
சிக்கியவர்கள், உதவி கோரி தொடர்பு கொள்வதற்காக, பல துறைகள் சார்பில்
தொடர்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
அத்தியாவசிய தேவைக்கு வரிசையில் நிற்கும் மக்கள்
சென்னை :தென் சென்னையில், அத்தியாவசிய தேவை ஒவ்வொன்றுக்கும், நீண்ட
வரிசையில் நின்று வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
இன்றும் பொது விடுமுறை: அரசு அறிவுறுத்தல்
சென்னை : கொட்டித்தீர்க்கும் கன மழை காரணமாக இன்று (டிச., 4) சென்னை,
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள தனியார் நிறுவனங்கள்
பொது விடுமுறை அளிக்கும்படி தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. ஐ.டி., மற்றும்
தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை விடுமுறை எடுக்கவோ அல்லது வீட்டில்
இருந்தபடி பணி செய்யவோ அனுமதிக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தி
உள்ளது. நேற்றும் பொதுவிடுமுறைக்கு அரசு அறிவுறுத்தியிருந்தது
குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் டிசம்பர் 11 வரை சுங்கக் கட்டணம் கிடையாது: நிதின் கட்கரி உத்தரவு
வெள்ள நிவாரணப் பொருள்களை எடுத்துச் செல்வதற்கு உதவிடும் வகையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் வரும் டிசம்பர் 11-ஆம்
தேதி வரை சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படாது என்று மத்திய சாலைப்
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி
உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு இணையதளம் முடக்கம்
தமிழக அரசு இணையதளம் நேற்று முடங்கியது.சென்னையில் மழை வெள்ளம் காரணமாக,
மொபைல் போன் இணைப்புகள் செயல் இழந்துள்ளன. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணைய
தளமும் நேற்று இயங்கவில்லை. இதனால், அரசு செய்திக்குறிப்புகளை மக்கள்
பார்க்க இயலவில்லை. இதேபோல், பெரும்பாலான இணையதளங்களை, மக்கள் நேற்று
பார்க்க இயலவில்லை.
மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை
ராமநாதபுரம்,:மத்திய
அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில்
மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56
துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள்
மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள்
அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே
நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய ரமணன்
அண்ணா பல்கலை. நுழைவுத் தேர்வு ரத்து
தொடர்
மழை, அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர்
சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வையும் அண்ணா பல்கலைக்கழகம் ரத்து
செய்துள்ளது.
மது குடித்ததால் 'டிஸ்மிஸ்' செய்யப்பட்டமாணவியரை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை
வகுப்பறையில் மது குடித்து, வாந்தி எடுத்து,
மயங்கி விழுந்ததால், 'டிஸ்மிஸ்' செய்யப்பட்ட, நான்குமாணவியரை, மீண்டும்
இன்று பள்ளியில் சேர்க்க, கலெக்டர்
தட்சிணாமூர்த்திஉத்தரவிட்டுள்ளார்.
மழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு சிறப்பு அனுமதி தேவை - பாடசாலை கோரிக்கை
தமிழகத்தில் கடந்த நூறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்து
வருகிறது. குறிப்பாக கடலூர், சென்னை போன்ற பகுதிகளில் மழையின் பாதிப்புகள்
மிக அதிக அளவில் உள்ளது. மேலும் சென்னையில் வழக்கத்தை விட 89 சதவீதம் அதிக
மழை இதுவரை பெய்துள்ளது. மழையின் பாதிப்புகளினால் மக்கள் மிக மோசமாக
பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசின் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் உட்பட பல அரசு ஊழியர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.
தொடரும் மழை வெள்ளம்! மிதக்கும் வீடுகள்... ஆரோக்கியம் காப்பது எப்படி?
தமிழகத்தில்,
குறிப்பாக வட மாவட்டங்களில் ‘மழை பெய்தது’ என்று சொல்வதைவிட ‘மழை
கொட்டியது’ என்று சொல்வதே பொருத்தம். சாலைகள் எங்கும் ஆறாக ஓடிய நீர், பல
இடங்களில் இன்னும் இடுப்பு அளவு தேங்கிக்கிடக்கிறது. இப்படித்
தேங்கிக்கிடக்கும் மழைநீரோடு கழிவு நீரும் கலந்துள்ளது என்பதுதான் வேதனை.
மழைக்காலத்தில் தோன்றும் நோய்களும், உடல்நலத் தொந்தரவுகளும் எண்ணற்றவை.
மழையின் உபவிளைவான மழைக்கால நோய்களிடம் இருந்து நம்மைப் பாதுகாக்க என்னென்ன
செய்யலாம்...
சென்னை கனமழை: பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தால், சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு
மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் கடற்கரையோர மாவட்டங்களான சென்னை,
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய
வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே
பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக
பாதிக்கப்பட்டுள்ளது.
தேதி வாரியாக மழை எப்படி.
டிச., 3, 4, 5: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில், மிதமான மற்றும் மிக கன மழை பெய்யும். தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்யும்.
டிச., 6: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மற்றும் மிக கன மழை
பெய்யும்.சென்னையில் மேக மூட்டத்துடன் காணப்படும். பல இடங்களில் கன மழை
பெய்யும்; காற்று வேகமாக வீசும்.
The Shocking fact of Pay hike recommended by 7th Pay Commission
The Shocking fact of Pay hike recommended by 7th Pay Commission-COMPARISON OF PAY DETERMINATION BEFORE AND AFTER 7TH PAY COMMISSION
The Pay hike recommended by 7th Pay Commssion has been discribed as Bonanza by Media
வெள்ள சேத பகுதிகளை முதல்-அமைச்சர் ஜெயலலிதா பார்வையிட்டார்
தமிழ்நாட்டில்
கடந்த அக்டோபர் 28-ந்தேதி வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. தமிழ்நாடு
முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தாலும், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்,
கடலூர் ஆகிய 4 மாவட்டங்களையும் புரட்டி போடும் வகையில் மழை கொட்டி
தீர்த்துள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வந்தார்
சென்னை விமான நிலையம் குளம் போல காட்சி
அளிப்பதால், புது தில்லியில் இருந்து தனி விமானத்தில் தமிழகம் வந்த பிரதமர்
நரேந்திர மோடி, அரக்கோணத்தில் உள்ள ராஜாளி விமான தளத்தில் வந்திறங்கினார்.
தனியார் பள்ளிக்கு சவால் விடலாம்!
சமீபத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகள்
உத்தரப் பிரதேசக் கல்வித் திட்டத்தில் புயலைக் கிளப்பியிருக்கின்றன. இனி,
அரசு ஊழியர்களின் குழந்தைகள் கட்டாயமாக அரசு தொடக்கநிலைப் பள்ளிகளில் தான்
படிக்க வேண்டும் என்றது ஆகஸ்ட் மாதம் வெளியான தீர்ப்பு.
டிசம்பர் 4ல் நடைபெற வேண்டிய அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள்மீண்டும் ஒத்திவைப்பு
அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பல்கலைக்கழக
நிர்வாகம் தெரிவித்துள்ளது.