Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
10th Quarterly Exam Key Answer - English Paper 1
பட்டதாரி ஆசிரியர் கவுன்சிலிங் விரைவில் நடத்த வலியுறுத்தல்.
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்
கவுன்சிலிங்கை விரைவில் நடத்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது. அதன் மாவட்ட நிர்வாக குழுக்கூட்டம் திண்டுக்கல்லில்
நடந்தது.
இயக்குனர் அலுவலகத்தில் ஆசிரியர்கள் முற்றுகை.
தொழிற்கல்வி பாடத்தை கட்டாயமாக்க வலியுறுத்தி, பள்ளிக் கல்வி இயக்குனர்
அலுவலகத்தில் நேற்று, முற்றுகைப் போராட்டம் நடந்தது. தமிழ்நாடு மேல்நிலைப்
பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக பொதுச் செயலர் ஜனார்த்தனன் தலைமையில்,
அரசுப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் நேற்று, பள்ளிக் கல்வி இயக்குனர்
அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்யலாம் மத்திய அரசு உத்தரவு
நேர்மை இல்லாத, திறமையாக செயல்படாத அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விரைவில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் திட்டம்: துணைவேந்தர் க. பாஸ்கரன்
கிராமப்புறத்தைச் சேர்ந்த படிக்காத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புப் பெற்றுத்
தரும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படவுள்ளது என்றார் தஞ்சாவூர் தமிழ்ப்
பல்கலைக்கழகத் துணைவேந்தர் க. பாஸ்கரன்.இந்தப் பல்கலைக்கழகத்தில்
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 34 ஆம் ஆண்டு விழாவுக்குத் தலைமை வகித்த அவர்
பேசியது:
மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை
மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளை ஆசிரியர்கள் களைய வேண்டும் என
குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த
ஆசிரியர் பி.ஜார்ஜ் பால் வலியுறுத்தினார்.
பி.எட்., படிக்க ஐந்தே ரூபாய்!
தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும்
கல்லுாரிகளில் பி.எட்., படிக்க, தமிழக அரசு, ஐந்து ரூபாய் கட்டணம் நிர்ணயம்
செய்துள்ளது.தமிழகத்தில், 705 கல்வியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில்,
ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில்,
பி.எட்., - எம்.எட்., படிப்புகள் உள்ளன.
சமஸ்கிருதம் கட்டாயமில்லை: மத்திய அரசு திட்டவட்டம்
மத்திய அரசு பள்ளிகளில், சமஸ்கிருதம் கட்டாயம் ஆக்கப்படவில்லை' என, மத்திய
அரசு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், சமஸ்கிருத ஆசிரியர்களுக்கு, 70
வயதுவரை பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.பா.ஜ., தலைமையிலான மத்திய
அரசு பதவியேற்றது முதல், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களை
அறிவித்து வருகிறது.
ஆதார் அட்டை பெற மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளில் சிறப்பு முகாம்
பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தி, மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்கும்
பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புத் திட்டத்தின்
கீழ், பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணிகள்
தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி, இதுவரை ஆதார் அட்டை பெறுவதற்கு விண்ணப்பிக்காத
மாணவர்களுக்கு, அந்தந்த பள்ளி வளாகத்திலேயே புகைப்படம் எடுக்கும் சிறப்பு
முகாம் நடைபெறுகிறது.
மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளைக் களைய யோசனை
மாணவர்களின் கற்றல் திறன் பிரச்னைகளை ஆசிரியர்கள் களைய வேண்டும் என
குடியரசுத் தலைவரிடம் நல்லாசிரியர் விருது பெற்ற சென்னையைச் சேர்ந்த
ஆசிரியர் பி.ஜார்ஜ் பால் வலியுறுத்தினார்.ஆசிரியர் தினத்தையொட்டி,
புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற விழாவில் சென்னை எழும்பூரில் உள்ள தொன்
போஸ்கோ மெட்ரிகுலேசன் பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் பி.ஜார்ஜ் பாலுக்கு
நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
பி.எப். சந்தாதாரர்களுக்கு பிரத்யேக மொபைல் அப்ளிகேஷன் அறிமுகம்
பிராவிடண்ட் பண்டு சந்தாதாரர்களுக்கு என பிரத்யேகமாக புதிய மொபைல்
அப்ளிகேஷன் ஒன்றை மத்திய மந்திரி மந்தாரு தத்தாத்ரேயா இன்று துவங்கி
வைத்தார். இதன் மூலம், எஸ்.எம்.எஸ். வழியாக யூ.ஏ.என். நம்பரை ஆக்டிவேஷன்
செய்வது, மிஸ்டு கால் வழியாக ஆக்டிவேட் செய்வது ஆகிய சேவைகளை பெறலாம்.
மேலும், சந்தாதாரர்கள் மாதந்தோறும் தங்கள் கணக்குகளின் விபரங்களை மொபைல்
வழியாகவே தெரிந்து கொள்ள முடியும்.
மாணவர்களுக்கு சிறப்பு கவுன்சிலிங்
பள்ளிக்கல்வித் துறையின் கீழ், பிரச்னைக்குரிய மாணவர்களுக்கு நடமாடும் உளவியல் மையம் வாயிலாக, சிறப்பு கவுன்சிலிங் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு அலுவலர்களுக்கு சொந்த வீடு: : பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு
சென்னையில் குறைந்த வருவாய் பிரிவு மக்கள் வாங்கக் கூடிய வகையில் ரூ.20லட்சத்துக்கு குறைவாக இரு படுக்கை அறைகளுடன் கூடிய குடியிருப்புகளை அரசு விற்பனை செய்யும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் 25 அரசு பள்ளிகளில் துவங்க ஏற்பாடு
25 அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் வெர்ச்சுவல் கிளாஸ் திட்டம் துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., சீட்கள் அபகரிப்பு; நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
மாணவர்களின் வறுமையை பயன்படுத்தி, எம்.பி.பி.எஸ். சீட்டுகளை அபகரிக்கும் மருத்துவ கல்லுாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறை; மாணவர்கள் பரிதவிப்பு
அரசு கல்லூரியில் பேராசிரியர்கள் பற்றாக்குறையால் வகுப்புகள் நடத்த முடியாத நிலையில் மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டுத்திறன் கேள்விக்குறியாகிவருகிறது.
கல்லூரி மாணவர்கள் வாக்காளர்களாக சேர விண்ணப்ப படிவம் வழங்கல்
பதினெட்டு வயது பூர்த்தியடைந்த கல்லுாரி மாணவர்கள் ஆன்-லைன் மூலமாக புதிய வாக்காளர்களாக சேர வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி
பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள ஆசிரியர் களுக்கு ஆங்கிலப்பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது.
பள்ளி ஆசிரியரின் இடமாறுதல்; குழந்தைகளை அனுப்ப பெற்றோர் மறுப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூரில், பள்ளி ஆசிரியரின் இடமாறுதலை கண்டித்து, 8 நாட்களாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுத்து வருகின்றனர். அந்த குழந்தைகளுக்கு கிராம இளைஞர்கள் கோயில் மரத்தடியில் பாடம் நடத்துகின்றனர்.
10th Quarterly Exam Key Answer Tamil 2
இந்தியா முழுவதும் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்க கோரும் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தியை பயிற்றுமொழியாகவும் அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி, அஸ்வினி உபாத்யாயா என்ற சமூக ஆர்வலர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்து இருந்தார்.
துணை மருத்துவப் படிப்பு: 3,010 காலியிடங்கள்
சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற துணை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வின் முடிவில் 3,010 காலியிடங்கள் ஏற்பட்டன.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
வாக்காளர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கல் மற்றும்திருத்தம் செய்தல் ஆகியவற்றை இன்று முதல் வாக்குச்சாவடி மையத்திலேயே மேற்கொள்ளலாம்.வரும் ஜனவரி 1-ம் தேதியன்று 18 வயது நிரம்பும் வாக்காளர்கள் தங்களது பெயர்களை படிவம் 6ஐ இந்த அலுவலகங்களில் நிரப்பிக் கொடுத்து சேர்த்துக் கொள்ளலாம்.
மாணவி ஒருவர்; ஆசிரியை இருவர்:அரசு ஆரம்ப பள்ளியில் அதிசயம்
திண்டுக்கல் மாவட் டம், அய்யம்பாளையத்தில், ஒரு மாணவி படிக்கும் அரசு ஆரம்ப பள்ளியில், இரு ஆசிரியைகள் பணிபுரிகின்றனர்.
செப்.18-ல் வெளியாகிறது பி.எட். கட் ஆப் மதிப்பெண் பட்டியல்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 1,777 பி.எட். இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.