Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பல் மருத்துவ படிப்பில் இருந்து விலகி 110 பேர் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர்: மருத்துவ கல்வி இயக்குனர் பேட்டி
சென்னை,
பல் மருத்துவம் படித்துக்கொண்டிருந்த 110 மாணவ-மாணவிகளுக்கு எம்.பி.பி.எஸ். படிக்க இந்த வருட கலந்தாய்வில் இடம் கிடைத்தது.
கல்வித்துறையில் தமிழகம்
அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறை மோசமாக சென்றுகொண்டிருப்பதாக பதைபதைக்கிறார்கள் கல்வியாலர்கள்.
பட்டதாரி ஆசிரியர்கள் 135 பேருக்கு தலைமை ஆசிரியர்களாக'பிரமோஷன்'
கல்வித் துறை வரலாற்றில் இது வரை இல்லாத அளவிற்கு 135 பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர்களாக பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது.
கவலையளிக்கும் கலந்தாய்வு: களமிறங்கும் 'ஜாக்டோ'
தமிழகத்தில் ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு இன்னும்
அறிவிக்கப்படாததால் ஆக.,1ல் நடக்கும் ஜாக்டோ தொடர் முழக்கப் போராட்டத்தில்
இப்பிரச்னையை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.பள்ளிக் கல்வியில்
கல்வியாண்டு துவங்கும் முன் ஆசிரியர் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு
கலந்தாய்வு நடத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. ஆனாலும்
இரண்டு ஆண்டுகளாக தாமதமாக நடத்தப்பட்டது. இந்தாண்டு ஜூலை முதல் வாரம் கடந்த
பின்னரும் அதற்கான அறிவிப்பு வெளியாகும் அறிகுறி கூட தெரியவில்லை.
பாடத்திட்டமே வரவில்லை; பயிற்றுவிப்பதில் பெரும் குழப்பம்! : சிறப்பாசிரியர்கள் பாடு திண்டாட்டம்
சிறப்புப் பாடங்களுக்கான பாடத்திட்டம் வெளியிடப்படாததால், பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது.
மருத்துவம் சார் பட்ட படிப்பு: முதல் நாள் 8,316 விண்ணப்பம்
பி.எஸ்.சி., நர்சிங் உள்ளிட்ட, மருந்துவம் சார் பட்டப் படிப்புகளுக்கு,
ஒரே நாளில், 8,316 பேர் விண்ணப்பங்கள் பெற்றுள்ளனர்.தமிழகத்தில், ஐந்து
அரசு மருத்துவ கல்லுாரிகளில், பி.எஸ்.சி., நர்சிங், பி.பார்ம்., -
பி.எஸ்.சி., ரேடியோ தெரபி உள்ளிட்ட, ஒன்பது விதமான மருத்துவம் சார்
பட்டப்படிப்புகள் உள்ளன. 150 சுய நிதி கல்லுாரிகளையும் சேர்த்து, மொத்தம்,
8,000 இடங்கள் உள்ளன.
தமிழக கல்லூரிகளுக்கு பாரம்பரிய அந்தஸ்து 'நாக்' ஆய்வுக்கு பின் வழங்க யு.ஜி.சி., முடிவு
தமிழகத்தில், ராணி மேரி கல்லுாரி, பச்சையப்பா கல்லுாரி மற்றும்
அமெரிக்கன் கல்லுாரி உள்ளிட்ட, நான்கு கல்லுாரிகளுக்கு, விரைவில் பாரம்பரிய
கல்லுாரிக்கான அங்கீகாரம் கிடைக்க உள்ளது.
ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்று ஐ.பி.எஸ்., அதிகாரி சாதனை
“ஐ.ஏ.எஸ்., தேர்வை பொறுத்தவரை, விடாமுயற்சியுடன் செயல்பட்டால் எளிதில்
வெற்றி பெறலாம்” என, ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி பெற்றுள்ள, ஐ.பி.எஸ்.,
அதிகாரி ராஜா கூறினார்.
அரசு துறைகளில் 14,481 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழகத்தில் மத்திய, மாநில மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் 14,481 பணியிடங்களுக்கு நேரடி நியமனம், எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்
தேர்வின் மூலமும் நியமனம் நடைபெற இருப்பதால் தகுதியுடையோர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், தேர்வு
முறைகள், தேர்வு திட்டங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள்
அந்தந்த இணையதள முகவரில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆங்கில உச்சரிப்பு பயிற்சிக்கு போதிய பயிற்சியின்மையால் அரசு பள்ளி ஆசிரியர்கள் சிரமம்
அரசு தொடக்கப் பள்ளிகளில், டி.வி.டி.,
பிளேயர் பழுது, 'சிடி' காணாமல் போனது மற்றும் போதிய பயிற்சியின்மையால்,
ஆங்கில உச்சரிப்புப் பயிற்சிக்கு, ஆசிரியர்கள் முழுக்கு போட்டுள்ளனர்.
இதனால், ஆங்கில வழி வகுப்புகளிலும் தமிழிலேயே பாடம் நடத்தப்படுகிறது.
பிளஸ் 2, பத்தாம் வகுப்பு 'ஒரிஜினல்' சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம்
தேர்வு முடிவுகள் வெளியாகி 2 மாதங்கள்
ஆகியும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு 'ஒரிஜினல்'
மதிப்பெண் சான்றிதழ் இன்னும் வழங்கப்படவில்லை.
பள்ளி, கல்லூரிகளில் 'டிஜிட்டல் இந்தியா' திட்டம்
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான கல்வி
உதவித்தொகை பெறுவதில், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தைப் பயன்படுத்திக்
கொள்ளுமாறு, பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு மத்திய அரசு
அறிவுறுத்தியுள்ளது.
50,000 இடங்களுக்கு மாணவர் இல்லை தாமத நடவடிக்கையால் திட்டம் தோல்வி
இலவச மாணவர் சேர்க்கைத் தாமதமானதால்,
தனியார் பள்ளிகளில், 50 ஆயிரம் எல்.கே.ஜி., இடங்களில் சேர, மாணவர் இல்லாத
நிலை ஏற்பட்டு உள்ளது. இவற்றில், அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களைச்
சேர்க்கலாமா என, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்ப வினியோகம் துவக்கம்
விழுப்புரம்
அரசு மருத்துவக் கல்லுாரியில், மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கு,
2015--16ம் ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் துவங்கியது.
'பிளே ஸ்கூல்' விதிகளுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு
தமிழக அரசின், 'பிளே ஸ்கூல்' வரைவு
விதிகளுக்கு, சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து உள்ளனர்.
இதனால், குழந்தைகளின் பாதுகாப்புக் கேள்விக்குறியாகும் என்றும் அச்சம்
தெரிவித்து உள்ளனர்.
ஆசிய தடகளப் போட்டியில் கோவை மாணவர்கள் சாதனை
சீனாவில் நடைபெற்ற ஆசிய அளவிலான தடகளப் போட்டியில், கோவையைச் சேர்ந்த மாணவரும், மாணவியும் சாதனை படைத்து நாடு திரும்பியுள்ளனர்.ஆசிய அளவிலான இரண்டாவது தடகளப் போட்டிகள் சீனாவில் கடந்த மாதம் நடைபெற்றன.
பெற்றோர், மாணவர்களை ஈர்க்கும் வகையில் உடுமலையில் கூடுதல் வசதிகளுடன் ‘ஹைடெக்’அரசுப் பள்ளி
பெற்றோர், மாணவர்களை ஈர்க்கும் வகையில் உடுமலையில் பழமை வாய்ந்த அரசுப் பள்ளி, ‘ஹைடெக்’ பள்ளியாக மாற்றப்பட்டுள்ளது.உடுமலை - திருப்பூர் சாலை சின்னவீரம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது 90ஆண்டுகள் பழமை வாயந்த அரசு நடுநிலைப் பள்ளி.
பார்வையற்ற பெண்கள் இலவசமாக கணினி கற்கலாம்: தமிழ்நாடு பார்வையற்றோர் சங்கம்ஏற்பாடு
பார்வையற்ற பெண்கள் இலவசமாக கணினி பட்டயப் படிப்பு படிக்க தமிழ்நாடு
பார்வையற்றோர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு
பார்வையற்றோர் சங்க துணைத்தலைவர் இ.ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்
குறிப்பில் கூறியிருப்பதாவது:
வேறு பல்கலையில் சிண்டிகேட் கூட்டம் அதிருப்தியில் மதுரை காமராஜ் பல்கலை
மதுரை: மதுரை காமராஜ் பல்கலை சிண்டிகேட் கூட்டம், காரைக்குடி அழகப்பா
பல்கலையில் நடந்ததால் அதன் உறுப்பினர்கள், பேராசிரியர்கள் அதிருப்தி
அடைந்துள்ளனர்.இப்பல்கலைக்கு துணைவேந்தரை நியமிக்க தேர்வுக் குழு
நியமிக்கப்பட்டுள்ளது. துணைவேந்தர் இல்லாததால் அமைக்கப்பட்ட 'வழிநடத்தும்
குழு'வில் (கன்வீனர் கமிட்டி) இருந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் கண்ணன்,
பெரியகருப்பன் அண்மையில் ஓய்வு பெற்றனர். இதனால் 'வழி நடத்தும் குழு'வுக்கு
உடனடியாக புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
மருத்துவக் காப்பீட்டுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
மருத்துவச் செலவு என்பது
திடீரென வரக்
கூடியது. ஆதலால்
மருத்துவக் காப்பீடு எடுத்து வைத்துக் கொள்வது
மிக முக்கியமானது.
தனியார் காப்பீடு
நிறுவனங்கள் நம்மிடம் பணம் பெற்றுக் கொண்டு
காப்பீடு அளிக்கின்றன.
குரு பெயர்ச்சி: குருவை வழிபட 21 திருத்தலங்கள்
குரு பகவான் (5-7-2015) ஞாயிற்றுக்கிழமை இரவு 11.04 மணிக்கு கடக ராசியில்
இருந்து சிம்ம ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இன்று முதல் 1-8-2016 வரை
இங்கு அமர்ந்து தன் அதிகாரத்தைச் செலுத்துகிறார். குரு பெயர்ச்சியை
முன்னிட்டு, அனைவரும் சிரமமின்றி அவரவர் பகுதிக்கு அருகிலேயே உள்ள
திருத்தலங்களுக்குச் சென்று பரிகார பூஜை, சிறப்பு வழிபாடுகள் செய்து
வழிபடுவதற்கு வசதியாக, தமிழகம் முழுவதும் உள்ள சிறப்புத் தலங்கள், குரு
பரிகாரத் தலங்கள் பற்றிய விவரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.
Transfer Applications
Elementary Education Department
- Transfer Application For SG Asst / BT Asst Teachers - Click Here
- Mutual Transfer Application For SG Asst / BT Asst Teacher - Click Here
- AEEO Transfer Application - Click Here
- SG Asst / BT Asst / PG Asst / HS HM / HRS HM Transfer Application - Click Here
- BRTE Tranfer Application - Click Here
மரணம் தவிர மாற்றுவழி இல்லையா - வெய்ட்டேஜால் ஏமாந்த ஆசிரியர்களின் குமுறல்
2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் ஏன் தான் தேர்ச்சி பெற்றேனோ???
கடந்த ஆண்டு 2013ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டு அடுத்த மாதம் பணிநியமண ஆணை கிடைக்கும் என்ற கனவில் இருந்தேன்.. அக்கனவை இனி எப்போதுமே நனவாகமல் தடுத்து விட்டனர்.....
குரு பெயர்ச்சி பலன்கள் 2015
மேஷம்
(அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ம் பாதம் முடிய)
உங்களுக்கு இதுவரை 4ல் இருந்த குரு 5ம் இடத்தில் பிரவேசிக்கிறார். விலகிச் சென்ற நண்பர்கள் உறவினர்கள் நெருங்கி வந்திடுவர்.