Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்
தனியார் பள்ளிகளில் 25 சதவீத இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு இன்று முடிகிறது.மத்திய
அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி சிறுபான்மை அந்தஸ்து பெற்ற
பள்ளிகள் தவிர தனியார் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., மற்றும் ஐ.சி.எஸ்.இ.,
பள்ளிகளில், மொத்த இடங்களில் 25 சதவீதத்தை 6 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு இலவசமாக ஒதுக்க வேண்டும்.
தனியார் பள்ளி கல்விக் கட்டண புகார்:விசாரிக்க சி.இ.ஓ.,க்களுக்கு அதிகாரம்
தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணப்
புகார்கள் குறித்து, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளான - சி.இ.ஓ.,க்கள்
விசாரிக்க, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் பள்ளி
மற்றும் கல்லுாரிகளில், புதிய கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து
வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணய கட்டணத்தை விட, கூடுதல்
கட்டணத்தை வசூலிப்பதாக, புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு
தமிழகத்தில்,
20 அரசு மருத்துவக் கல்லூரிகளும், ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரியும்
உள்ளன. இவற்றில், மாநில ஒதுக்கீட்டிற்கு, 2,257 எம்.பி.பி.எஸ்., - 85
பி.டி.எஸ்., இடங்கள் உள்ளன. சுயநிதிக் கல்லூரிகளில், 580 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கான, மாணவர் சேர்க்கை முதற்கட்ட கலந்தாய்வு, வரும் 19ம் தேதி
துவங்குகிறது.பிளஸ் 2 மறுகூட்டல் முடிவு கள் குறித்த, 'சிடி'யை, பள்ளிக்
கல்வித் துறை, 12ம் தேதி மருத்துவக் கல்வி இயக்கத்தில் வழங்கியது.
மறு கூட்டல், மறு மதிப்பீடு மாணவர்களின் பதிவெண் பட்டியல் இன்று வெளியீடு
பிளஸ்
2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு
விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் பட்டியல்
திங்கள்கிழமை (ஜூன் 15) வெளியிடப்பட உள்ளது.
SSLC - PRIVATE CANDIDATE(2015-16) SCIENCE PRACTICAL APPLICATION FORMAT
SSLC - PRIVATE CANDIDATE(2015-16) SCIENCE PRACTICAL APPLICATION FORMAT DOWNLOAD
அண்ணா பல்கலை 'ரேண்டம்' எண் இன்று வெளியீடு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புக்கான
ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை, கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான, 'ரேண்டம்
எண்' இன்று வெளியிடப்படுகிறது.அண்ணா பல்கலை இணைப்புக்கு உட்பட்ட
இன்ஜினியரிங் கல்லூரி களில், புதிய கல்வியாண்டில் ஒற்றைச் சாளர கவுன்சிலிங்
முறையில், மாணவர்களை சேர்க்கும் நடவடிக்கை, முக்கிய கட்டத்தை
எட்டியுள்ளது.
பிளஸ் 1 வகுப்புகள் இன்று துவக்கம்
கோடை விடுமுறை மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி முடிவுகளுக்குப் பின், அரசு
மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு இன்று
துவங்குகிறது.தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத்
தேர்வு, ஏப்., 10ம் தேதி முடிந்தது; இதன் முடிவுகள், மே 21ம் தேதி
வெளியாகின.
பள்ளி திறந்திருச்சு...? அவஸ்தையும் ஆரம்பிச்சிருச்சு? ஆட்டோவில் குழந்தைகளை அள்ளி செல்லும் அவலம்
தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆட்டோக்களில் மாணவர்களை அள்ளி
ஏற்றிக் கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. சிறு வயது குழந்தைகள்
நெரிசலில் சிக்கி தவித்த நிலையிலும், ஆபத்தான நிலையிலும் அழைத்து
செல்லப்படுகின்றனர். இவ்வகை ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென
சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரூ.4,000ல் 4ஜி போன்
மும்பை:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4 ஜி ஸ்மார்ட்போன், வெறும் 4,000
ரூபாய் விலையில், டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வர உள்ளது என,
முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.
பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் நாளைமுதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு
பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட
நுழைவுச்சீட்டை நாளை (திங்கள்கிழமை) முதல் பதி விறக்கம் செய்துகொள்ளலாம்
என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு
ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி
வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில்
உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி
உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362
உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத்
தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.
பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.
ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட
வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்
திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை
வகித்தார்.
சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணிக்கு அண்ணாமலைப் பல்கலையில் வளாகத் தேர்வு.
சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம்
நடத்தப்படுகிறது.
கல்லூரிகளில் பேராசிரியர் பணி: தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை.
கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும் போதுதான் திறமை மிக்க பேராசிரியர்களை நியமிக்க முடியும் என
தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் முதன்முறையாக பார்வையிழந்த தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரியாக நியமனம்.
சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சார்லஸ், மேரி பத்மஜா தம்பதிகளின் மகள் என்.எல்.பினோ செடின். (வயது 24) பார்வையிழந்த பெண். இவர்
பார்வையிழந்தோருக்கான சிறுமலர் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார்.
TNPSC நேர்காணல் தேர்வு: தெரிவிப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று, நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.
போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு
கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில்,
'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித்
துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன.
'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'
'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும்
சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து
உள்ளனர்.
'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது
கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக
வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில்
சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.
வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு
பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை
இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும்,
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.
தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசுதமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்
தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில்
மாநில முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல்
படிப்பில் முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் கவுன்சிலிங் எப்போது?
தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர்
நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான
கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர்
நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு
வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி
தீவிரமாக உள்ளது.