Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 1 வகுப்புகள் இன்று துவக்கம்

          கோடை விடுமுறை மற்றும் 10 வகுப்பு தேர்ச்சி முடிவுகளுக்குப் பின், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பு இன்று துவங்குகிறது.தமிழகத்தில், கடந்த கல்வியாண்டில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, ஏப்., 10ம் தேதி முடிந்தது; இதன் முடிவுகள், மே 21ம் தேதி வெளியாகின. 
 

பள்ளி திறந்திருச்சு...? அவஸ்தையும் ஆரம்பிச்சிருச்சு? ஆட்டோவில் குழந்தைகளை அள்ளி செல்லும் அவலம்

     தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், ஆட்டோக்களில் மாணவர்களை அள்ளி ஏற்றிக் கொண்டு செல்லும் அவலநிலை நீடிக்கிறது. சிறு வயது குழந்தைகள் நெரிசலில் சிக்கி தவித்த நிலையிலும், ஆபத்தான நிலையிலும் அழைத்து செல்லப்படுகின்றனர். இவ்வகை ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுகூட்டல், மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்தவர்களின் பதிவு எண் பட்டியல் நாளை வெளியீடு.

   மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி விண்ணப்பித்த நபர்களின் பதிவு எண் பட்டியல்
 

தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசு; தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

         தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில் மாநில முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்பில் முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து, தமிழகத் தமிழாசிரியர் கழக பொதுச் செயலர் இளங்கோ வெளியிட்ட அறிக்கை:


ரூ.4,000ல் 4ஜி போன்

       மும்பை:ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 4 ஜி ஸ்மார்ட்போன், வெறும் 4,000 ரூபாய் விலையில், டிசம்பர் மாத இறுதிக்குள் விற்பனைக்கு வர உள்ளது என, முகேஷ் அம்பானி தெரிவித்து உள்ளார்.
 

பிளஸ் 2 தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் நாளைமுதல் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு

        பிளஸ் 2 தனித்தேர்வர்கள் தேர்வுக் கூட நுழைவுச்சீட்டை நாளை (திங்கள்கிழமை) முதல் பதி விறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை!

        பள்ளிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம்இல்லை: பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதா அறிவிப்பு


ஆய்வக உதவியாளர் தேர்வு 'ரிசல்ட்' தாமதமாக வாய்ப்பு

        ஆய்வக உதவியாளர் பதவிக்கான தேர்வில், கணினி வழி விடைத்தாள் திருத்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளதால், தேர்வு முடிவுகள் வெளியாவது தாமதமாகும் என, தகவல் வெளியாகி உள்ளது.தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளின் ஆய்வகங்களில் காலியாக உள்ள, 4,362 உதவியாளர் பணி இடங்களுக்கு, நியமன நடவடிக்கை துவங்கி உள்ளது. எழுத்துத் தேர்வு, மே, 31ம் தேதி நடந்தது; 8.84 லட்சம் பேர், தேர்வு எழுதினர்.


பொதுமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை வெளியிட வேண்டும்.

          ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணையை உடனே வெளியிட வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில துணைத் தலைவர் திருநாவுக்கரசு தலைமை வகித்தார்.

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணிக்கு அண்ணாமலைப் பல்கலையில் வளாகத் தேர்வு.

        சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. 
 

Tnpsc Group1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்: பாமக கோரிக்கை.

TnpscGroup-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும்:
 
       பாமக கோரிக்கைதொகுதி-1 தேர்வுக்கான வயது வரம்பை 40 ஆக அரசு உயர்த்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

கல்லூரிகளில் பேராசிரியர் பணி: தகுதிக்கும் திறமைக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை.

       கல்லூரிகளில் பேராசிரியர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நடைபெறும் போதுதான் திறமை மிக்க பேராசிரியர்களை நியமிக்க முடியும் என தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

இந்தியாவில் முதன்முறையாக பார்வையிழந்த தமிழக பெண் ஐ.எப்.எஸ். அதிகாரியாக நியமனம்.

          சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த சார்லஸ், மேரி பத்மஜா தம்பதிகளின் மகள் என்.எல்.பினோ செடின். (வயது 24) பார்வையிழந்த பெண். இவர் பார்வையிழந்தோருக்கான சிறுமலர் பள்ளியில் பள்ளிபடிப்பை முடித்தார்.
 

TNPSC நேர்காணல் தேர்வு: தெரிவிப் பட்டியல் வெளியீடு


     தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில் தகுதிபெற்று, நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.இந்தப் பட்டியலை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.  

போலி மாணவர்கள் விவகாரம்: 'பாஸ்வேர்டு' மாற்ற உத்தரவு

         கல்வித் துறை அலுவலகங்களில் உள்ள கணினியில், 'பாஸ்வேர்டை' மாற்றுமாறு, உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தமிழக கல்வித் துறையில், 10க்கும் மேற்பட்ட இயக்குனரகங்கள் உள்ளன. 

'இலவச லேப் - டாப் இப்போதைக்கு கிடைக்காது'

        'தமிழக அரசு சார்பில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கப்படும் இலவச, 'லேப் - டாப்' வினியோகம் துவங்க, மேலும் சில மாதங்களாகும்' என, தகவல் தொழில்நுட்பத் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். 

'மேத்ஸ், பயாலஜி' குரூப்பில் சேர ஆர்வம் குறைந்தது

       கடந்த ஆண்டு, உயிரியல் தேர்வு கடினமாக வந்ததின் எதிரொலியாக, பிளஸ் 1 சேர்க்கையில், 'மேத்ஸ், பயாலஜி' பிரிவில் சேரும் ஆர்வம், மாணவர்களிடையே குறைந்துள்ளது.

வரும் 24ம் தேதி 'ஸ்டிரைக்' வங்கி ஊழியர்கள் முடிவு

        பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் துணை வங்கிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து, வரும், 24ம் தேதி, ஒருநாள், நாடு முழுவதும், வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

தமிழ்வழி மாணவர்களுக்கே மாநில அரசின் பாராட்டு, பரிசுதமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

      தமிழ்வழி மாணவர்களுக்கே பொதுத் தேர்வில் மாநில முன்னிலை இடங்களுக்கான பரிசு மற்றும் மருத்துவம், பொறியியல் படிப்பில் முன்னுரிமை தர வேண்டும் என, அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 

கணினி பட்டதாரிகளுக்கு ஆசிரியர் கவுன்சிலிங் எப்போது?

        தமிழக அரசு பள்ளிகளில், கணினி ஆசிரியர் நியமனத்தில், கலப்பு திருமணம் புரிந்தோர் பிரிவினர், 133 பேருக்கான கவுன்சிலிங்கிற்கு, தடை கோரியது தொடர்பான வழக்கு விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது.

என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது; மாணவர்கள், பெற்றோர்கள் நிற்க பந்தல் அமைக்கும் பணி தீவிரம்

        என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது. கலந்தாய்வுக்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிற்க பந்தல்கள் அமைக்கும் பணி தீவிரமாக உள்ளது. 

அரசு அடிப்படை பயிற்சி மையத்தில், மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.

        சென்னை, அம்பத்துார் தொழிற்பேட்டை, சி.டி.எச்., சாலையில் உள்ள, அரசு அடிப்படை பயிற்சி மையத்தில், இந்த கல்விஆண்டிற்கான, உணவு தயாரிப்பவர் பொது பிரிவிற்கான மாணவ, மாணவியர் சேர்க்கை நடந்து வருகிறது.

எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு: கடந்த ஆண்டு மாணவர்களின் பங்கேற்பு இறுதி உத்தரவுக்கு கட்டுப்பட்டது

        சென்னையில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ள எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த மாணவர்களை அனுமதித்து சேர்க்கைக் கடிதம் அளித்தால், அது வழக்கின் இறுதி உத்தரவுக்குக் கட்டுப்பட்டதாகும் என சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது. 

மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில்பழைய மாணவர்களுக்கு தடை கோரி வழக்கு

         மருத்துவப் படிப்புக்கான கவுன்சிலிங்கில் இந்த ஆண்டு பிளஸ் 2 முடித்தவர்களை மட்டுமே அனுமதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 'பழைய மாணவர்களை பரிசீலிப்பது, வழக்கின் இறுதி உத்தரவைப் பொறுத்து அமையும்' என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பை சீக்கிரம் சொல்லுங்க! ஏங்கும் 6.3 லட்சம் மாணவர்கள்

         மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வில், நடைபெற்ற முறைகேடு வழக்கை, விசாரித்து வரும் சுப்ரீம் கோர்ட், நேற்று மீண்டும் தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதனால், தீர்ப்பை எதிர்நோக்கி காத்திருந்த, 6.3 லட்சம் மாணவர்கள் செய்வதறியாது திகைக்கின்றனர்.

பிளஸ் 2 மறு மதிப்பீடு, மறு கூட்டல்: 3,478 பேரின் மதிப்பெண்களில் மாற்றம்

         பிளஸ் 2 பொதுத் தேர்வு மதிப்பெண் மறு கூட்டல், தேர்வுத் தாள் மறு மதிப்பீடுக்கு விண்ணப்பித்தவர்களில் 3,478 பேரின் மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் ஒழுங்காக பாடம் நடத்துகிறார்களா? :கண்காணிக்க கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு

         அரசு உதவிபெறும் பள்ளிகளில், இலவசப் பொருட்கள் வழங்குதல், ஆசிரியர் பணி நியமனம் உள்ளிட்ட ஆவணங்களை நேரில் ஆய்வு செய்து, அறிக்கை தர வேண்டும்' என, உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.இதுதொடர்பாக, அவர் பிறப்பித்துள்ள உத்தரவு:

தமிழகத்தில் உள்ள போலி மாணவர்கள் எண்ணிக்கை 2 லட்சம் பேர்:அரசு உதவி பெற தனியார் பள்ளிகளின் குட்டு அம்பலம்

         தனியார்களும், தொண்டு நிறுவனங்களும் நிர்வகிக்கும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளதை சரிக்கட்டவும், அரசின் உதவி திட்டங்களை தொடர்ந்து பெறவும், 2 லட்சம் போலி மாணவர்களை கணக்கு காட்டியிருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது.

TNPSC : ஒரே நாளில் 3 துறைகளின் தேர்வு முடிவுகள்

        அறநிலையத்துறை செயல் அலுவலர் பணி உள்ளிட்ட மூன்று துறைகளின் பணி நியமனத்துக்கான தேர்வு முடிவுகளை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.* அறநிலையத்துறை செயல் அலுவலர் பதவிக்கு, 2013ல் நடந்த எழுத்துத் தேர்வில், 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வரும், 23ம் தேதி நேர்முகத் தேர்வு நடக்கிறது.

இளநிலை ஆராய்ச்சியாளர் தகுதித் தேர்வு:காரைக்குடியில் ஜூன் 21ல் நடக்கிறது

      இளநிலை ஆராய்ச்சியாளர்,விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் 21ம் தேதி காரைக்குடியில் 'சிக்ரி' சார்பில் அமைக்கப்பட்டுள்ள 9 மையங்களில் நடக்கிறது.

கல்லூரியில் காலியிடங்களுக்கு சீட்டு போடும் அரசியல் கட்சி பிரமுகர்கள் மூன்றாம் கட்ட கவுன்சிலிங் இழுபறி

        காரைக்குடி:அரசு அறிவியல் மற்றும் கலை கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்கள், இன்ஜி., நர்சிங் படிப்புக்கு செல்வதால், அந்த காலியிடங்களை மூன்றாம் கட்ட கவுன்சிலிங் மூலம் நிரப்ப அரசு கல்லுாரிகள் முடிவு செய்துள்ளன. இதை அறிந்த அரசியல் கட்சியினர் அந்த இடங்களுக்கு சிபாரிசு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், வேளாண் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

     சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவம், பல் மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி ஜூன் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive