Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ரயிலில் மொபைலை காணவில்லையா? விரைவில் வருகிறது இன்சூரன்ஸ் திட்டம்

               ஆன் - லைன் மூலம் ரயில் டிக்கெட்டு, 'புக்' செய்வோருக்கு, இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல புதிய சலுகைகளை, ஐ.ஆர்.சி.டி.சி., அளிக்கஉள்ளது. 

பிளஸ் 2 தேர்வு முடிவுமே 7ல் வெளியாகிறது?

              'பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 7ம் தேதி வெளியாகலாம்' என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பிளஸ் 2 தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8.75 லட்சம் மாணவர்கள்எழுதினர். மார்ச், 5ல் துவங்கிய தேர்வு, 31ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம், மார்ச், 16ல் துவங்கி, நாளையுடன் முடிகிறது. 

பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை! தேர்வுகளில் மாணவர்கள் தடுமாற்றம்

               தாய்மொழி தமிழ்ப்பாடத்தை கடைசியாக வைத்துள்ள அரசாணை எண், 266ல் உள்ள நடைமுறை சிக்கல்களால், பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் தோல்வி அடையும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக, தமிழாசிரியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை இலவசமாக பேசலாம்: பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை!!

           தகவல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சியால் உலகின் எந்த மூளையில்ஒருவர் இருந்தாலும் அவருடன் தொடர்பு கொண்டு பேசக்கூடிய வாய்ப்பு இப்போது உள்ளது. இணையதளம், செல்போன், இ.மெயில், எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். என பல்வேறு தொழில்நுட்பம் மூலம் தகவல்களை படத்துடன் பரிமாறிக்கொள்ளும் நிலை உள்ளது.
 

விடைத்தாள் திருத்த வராவிட்டால் ஊதியம் 'கட்':ஆசிரியர்களுக்கு கல்வித்துறை எச்சரிக்கை

              'பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தத்துக்கு வராத ஆசிரியர்களின் ஊதியம் ரத்து செய்யப்படும்; அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, கல்வித் துறை எச்சரித்துள்ளது.10ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணி, இன்று துவங்குகிறது. சென்னையின் நான்கு மையங்கள் உட்பட, தமிழகத்தில், 75 மையங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆசிரியர்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த முடிவு .


தமிழகத்தை சேர்ந்த 27 ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த ஆசிரியர்கள் 15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக தமி ழக ஆசிரியர்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 3 ஆண்டுகளாக ஆர்ப்பாட்டம், போராட்டங்களை ஆசிரியர்கள் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த மாதம் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் பன்னீர் செல்வம் அழைத்தார். 

ஆசிரியர் நலச்சங்கங்களில் வெளிமாவட்ட ஆசிரியர்களின் உரிமை மறுக்கப்படுவது கண்டிக்கத்தக்கது.

ஆசிரியர்கள் நலமோடு வாழவும், அவசர தேவைகளுக்கு கடன்பெற்று செலுத்தவும். முக்கிய குறிப்பாக ஆசிரியர் ஒற்றுமைக்காக உருவாக்கப்பட்டதே ஆசிரியர் நலச்சங்க் ஆனால் அதிலும் அரசியல்பூசல்கள் போல் உள் மாவட்ட ஆசிரியர், வெளிமாவட்ட ஆசிரியர் என பாகுபாடு பார்ப்பது மிக கொடுமையானது... 

பி.எட்., படிப்புக்கு தேர்வு தேதி அறிவிப்பு


பி.எட்., படிப்புக்கான தேர்வுகள், மே 8ம் தேதி துவங்கி, 18ம் தேதி வரை நடக்கின்றன.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை வெளியிட்ட அறிவிப்பு:

தமிழகம் முழுவதும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு உண்ணாவிரதம்


15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

குரூப் 4 தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் அறிவிப்பு.

குரூப் 4 தேர்வு முடிவுகள், அடுத்த மாத இறுதியில் வெளியிடப்படும் என்றுதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் உதவி வேளாண்மை அதிகாரி பணியிடத்தில் காலியாக உள்ள 417 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஜனவரி 30 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

ஆசிரியர் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து வழக்கு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்துக்கான முதுநிலை விரிவுரையாளர் நேரடி நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதில் அளிக்குமாறு, பள்ளிக் கல்விச் செயலர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள்.


2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிக்காலத்தை முறையான பணிக்காலமாக அறிவிக்க வேண்டி சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

ஆசிரியர் டிரான்ஸ்பரில் இடங்களை மறைத்தால் பெரும் ஆர்ப்பாட்டம்! - தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் -மீனாட்சி சுந்தரம்

ஒளிவு மறைவற்ற கவுன்சலிங் மூலம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாவிட்டால் கவுன்சலிங் நடக்கும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று தொடக்கப் பள்ளிஆசிரியர் மன்ற செயலாளர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்துள்ளார்.

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. 

வருமான வரி செலுத்துவோர் தங்களது அனைத்து வங்கி கணக்குகளையும் கட்டாயம் தெரிவிக்க உத்தரவு

2015 - 2016-ம் நிதியாண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான புதிய விதிகளை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி வருமானவரி செலுத்துவோர் வங்கி கணக்குகளின் எண்ணிக்கையை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கணக்கு வைத்துள்ள வங்கிகளின் பெயர்கள் ஐ.எப்.சி. குறியீடு, கடந்த நிதியாண்டில் இறுதியில் கணக்கில் உள்ள தொகை போன்றவற்றை வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்யும் போது தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி கணக்கு முடிக்கப்பட்டிருந்தாலும் அது குறித்த விவரங்களை வருமான வரி செலுத்துவோர் கூற வேண்டும்.

மேலும் வெளிநாட்டு பயணங்கள் குறித்த விவரங்களையும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது குறிப்பிட வேண்டியது அவசியம்.

பொதுவான பணம் செலுத்தும் இயந்திரம் அறிமுகம் : ரிசர்வ் வங்கி திட்டம்

எந்த வங்கிக் கணக்கிலும் பணம் செலுத்தும் வகையில் பொதுவான இயந்திரத்தை அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. 

வரிசையில் நின்று விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தும் நடைமுறை, தற்போது பெருமளவு குறைந்துவிட்டது. 

இதற்கு பதிலாக இணைய வழி பரிவர்த்தனைகள் அதிக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தவிர, தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

தற்போதுள்ள நடைமுறையில் ஒரு வங்கி கணக்கில் இருந்து அதே வங்கிக் கணக்குகளில் மட்டுமே உடனடியாக பணம் செலுத்த முடியும்.

ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதைப் போல பணம் செலுத்துவதை பொதுவாகப் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது. 

இந்நிலையில் அனைத்து வங்கிக் கணக்குகளையும் கையாளும் வகையிலான பொதுவான பணம் செலுத்தும் இயந்திரத்தை நாடு முழுவதும் அமைக்க ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : ராமதாஸ்

அனைத்துப் பள்ளிகளிலும் வகுப்பறைகள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

ஆசிரியர்களை அடிமை என்று நினைத்தார்களா? ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் உரிமைக்கழகம் கடும் கண்டனம்.

ஊரில் காய்ச்சலா
கூப்பிடு ஆசிரியர்களை...
குப்பைகளை பொறுக்கச்
சொல்லு....

டெங்குவா
மருந்து தரச்சொல்லு ஆசிரியர்களை...

TNTEU Announced B.ed Exam Time Table May-2015


May 8th- Emerging Indian society.
9th- Psychology.

11th- Curriculam development and Innivation.

12th- Elective.
13th- language optional-2.
14th- language optional-1.

16th- optional-1 maths, physical science, biological science, history, computer science.

விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும்

அரசுப் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள உள்ளூர் ஆசிரியர்களுக்கு தினப்படி வழங்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம்: ஏழு பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உயர்நீதிமன்றம் உத்தரவ

சென்னையில் 7 சிபிஎஸ்இ பள்ளிகளில் தேசிய கீதம் பாடப்படாததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அந்த பள்ளிகளை எதிர்மனுதாரர்களாக சேர்க்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாவட்ட வாரியாக நடக்கிறது 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் நாளை உண்ணாவிரதம்

ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆசிரியர்கள் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில், 27 ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்கின்றன. 

உச்சநீதிமன்றத்தில் டி.இ.டி இறுதிவிசாரணை கோர்ட் எண் 7, வழக்கு எண் 5வது இடம்பெற்றுள்ளது

உச்சநீதிமன்றத்தில் தமிழக ஆசிரியர் தகுதித்தேர்வின் வெய்ட்டேஜ் மற்றும் 5% தளர்வு மதிப்பெண் வழக்கு 21.04.2015 அன்று கோர்டெண் 7, வழக்கு எண் 5வதாக இடம்பெற்றுள்ளது..

Thanks To
Mr.R.Pirapu

சத்துணவு பணியாளர்கள் மீதான தடியடி தாக்குதல்; போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் நோக்குடன் தமிழக அரசின் சார்பில் மிரட்டல்கள் கண்டிக்கத்தக்கது: ராமதாஸ்

சத்துணவு பணியாளர்கள் மீதான தடியடி தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அவர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

கோடையில் பிளஸ் 2 வகுப்புகள் கைவிட ஆசிரியர்கள் கோரிக்கை


பிளஸ் 2 செல்லும் மாணவர்களுக்கு கோடை விடுமுறையில் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளதை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

சத்துணவு ஊழியர் போராட்டம் கலை ஆசிரியர்கள் ஆதரவு

சத்துணவு ஊழியர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு கலைஆசிரியர்கள் நலச்சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.தமிழ்நாடு கலை ஆசிரியர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது. 

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை

பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆங்கிலத்தில் பேச தடுமாறும் பி.எட்., கல்லூரி மாணவர்கள்: கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் பயிற்சி தர திட்டம்


தமிழக பி.எட்., கல்லூரி மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசத் தடுமாறுவதால், கேம்பிரிட்ஜ் பல்கலை மூலம் ஆங்கில பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில், அரசு, அரசு உதவிபெறும், சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கல்வியல் கல்லூரிகள் என, 658 கல்லூரிகள் செயல்படுகின்றன. 

TET CASE: ஆதிதிராவிடர் / கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது..

ஆதிதிராவிடர் கள்ளர் நலத்துறைப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிநியமன வழக்கு தடை விலகியது.. 

மேலும் மதுரை உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தரக்கூடிய ஆணை பிறப்பித்ததாக தகவல்கள் வருகின்றன இன்னும் விரைவில் முழுமையான செய்திகளுடன்....

ஆதிதிராவிட , பிரமிலை கள்ளர் பள்ளிகள் தடை
விலகி விட்டது. ஆனால் 70 % தற்போது நிரப்பி
கொள்ளலாம் மீதம் 30 % வழக்கு முடிந்த பின்பு
நிரப்பி கொள்ளலாம் என்று கூறி தடை விலக்கி கொள்ளப்பட்டது.

By.
P.Rajalingam Puliangudi

தோலையே கரும்பலகையாக பயன்படுத்தும் அதிசய ஆசிரியர்: பாடம் படிக்க வரிசையில் நிற்கும் மாணவர்கள்

பிரித்தானியாவில் பேராசிரியர் ஒருவர் தனது உடலின் தோலையே கரும்பலகையாக பயன்படுத்தி பாடம் எடுத்தி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பூட்டை உடைத்து, பொருட்களை எடுத்து சத்துணவு சமையல்: போராட்டத்தை முறியடிக்க அரசு தீவிரம்

 தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினரின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை முறியடிக்க, அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உடந்தையுடன் முறையில்லாமல் நடக்கும் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கு உயர் அதிகாரிகளால் மன உளைச்சலை ஏற்படுத்தும் சம்பவமும், அதனால் அரசு ஊழியர்கள் தற்கொலை செய்வது அல்லது தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதும்  தொடர்கதையாகி வருகிறது. அரசு ஊழியர்களின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாக இருப்பது பணியிட மாற்றம்தான் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 6 % உயர்வு விரைவில்?

வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படும் அகவிலைப்படி ,இந்த ஆண்டு 6 % அகவிலைப்படி ஜனவரி முன்தேதியிட்டு  மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 

வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படி  உயர்வு அறிவிப்பு  விரைவில் வரலாம் என எதிர்பார்கப்படுகிறது .

By.
P.Rajalingam Puliangudi 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive