Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு: 2 லட்சம் பேர் எழுதினர்

          தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வை 2 லட்சம் பேர் எழுதினர்.மாநில ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இந்தத் தேர்வு, 499 மையங்களில் நடைபெற்றது.
 

படி... படி... என்பது படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்...

         ”படி... படி... என்று கூறுவது, படிப்படியாக முன்னேறுவதற்குத் தான்,” என, சந்திராயன் திட்ட இயக்குனர், மயில்சாமி அண்ணாதுரை பேசினார்.

PGTRB: விடைத்தாள்களை சீலிடும் வரை தேர்வர்கள் வெளியேறக் கூடாது : தேர்வு வாரியம் கட்டுப்பாடு

              முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், விடைத்தாள்களை உறையில் வைத்து சீலிடும் வரை தேர்வர்கள் அறையை விட்டு வெளியேற அனுமதியில்லை என தேர்வு வாரியம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

PGTRB - செல்போன், மின்னணு கைக்கடிகாரம் கொண்டு வர தடை சென்னை கலெக்டர் உத்தரவு

           சென்னை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி எழுத்து தேர்வினை சென்னை மாவட்டத்தில் 15 ஆயிரத்து 49 தேர்வர்கள் 34 மையங்களில் எழுத உள்ளனர். தேர்வு மையங்களில் தேவையான அடிப்படை வசதிகளும், மாநகர போக்குவரத்து கழகத்தினால் தேர்வு மையங்களுக்கு செல்வதற்கேற்ப பஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இன்று நடக்கிறது 1,868 காலிப்பணியிடங்களுக்கான முதுநிலை பட்டதாரி போட்டி தேர்வு

            தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்துக் கல்லூரிகளிலும் சி.பி.சி.எஸ்.: அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தல்

           மாணவர்கள் படிப்பின் பாதியில் விருப்பப் பாடத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான விளைவுசார் புள்ளி தேர்வு முறையை (சி.பி.சி.எஸ்.) அனைத்துக் கல்லூரிகளும் அறிமுகம் செய்ய யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஒரே கல்விக் கொள்கை : மத்திய அமைச்சர் தகவல்

              வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் உலகமயமாக்கப்பட்ட உயர்கல்வி மற்றும் அதன் தரஉறுதிக்கான சவால்கள் என்ற தலைப்பிலான 2 நாள் சர்வதேச மாநாடு நேற்று தொடங்கியது.  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய ஜவுளித்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்தார்.
 

தொலைநோக்குத் திட்ட இலக்கை 5 ஆண்டுகளில் கல்வித் துறை எட்டும்: அமைச்சர் கே.சி.வீரமணி

               நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் மலர உருவாக்கப்பட்ட 2,023 தொலைநோக்குத் திட்ட இலக்கை இன்னும் 5 ஆண்டுகளுக்குள் பள்ளிக் கல்வித் துறை எட்டிவிடும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி நம்பிக்கை தெரிவித்தார்.

காஸ் சிலிண்டர் மானியம் பட்டுவாடா துவங்கியது:8 லட்சம் பேர் வங்கி கணக்கில் தலா ரூ.568 டெபாசிட்

         சமையல் காஸ் சிலிண்டர், நேரடி மானியத் திட்டத்தில், இதுவரை, எட்டு லட்சம் வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில், 45 கோடி ரூபாய் வரவு வைக்கப்பட்டு உள்ளது.நாடு முழுவதும்... தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த, இந்தியன் ஆயில் - 91 லட்சம்; பாரத் பெட்ரோலியம் - 39 லட்சம்; இந்துஸ்தான் பெட்ரோலியம் - 23 லட்சம் என, மொத்தம், 1.53 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர் உள்ளனர்.

கட்டணம் செலுத்தாததால் தேர்ந்தெடுக்கப்பட்ட தேர்வர் பணி ஒதுக்கீடு தராமல் டி.என்.பி.எஸ்.சி நிராகரிப்பு

• ஒரு விண்ணப்பதாரர் மூன்று முறை இலவசமாக தேர்வு எழுதி இருக்கிறார் என்ற தரவு தளத்தை உருவாக்கி விண்ணப்பம் செய்யும்பொழுதே நிராகரிக்க முடியாதா ?
• பல லட்ச விண்ணப்பங்களை பரிசீலனை செய்யாமல் நுழைவுக் கூட அனுமதி சீட்டு வழங்கி பின்னர் தேர்வு செய்யும் போதும் தேர்வரின் தகவல்களை ஆராயாமல் தான் தெரிவுப் பட்டியலை வெளியிடுகிரார்களா டி.என்.பி.எஸ்.சி ?

மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க யுஜிசி நிதியுதவி

            மாணவர் திறன் மேம்பாட்டு மையம் தொடங்க விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் பரிந்துரைகளை அனுப்புமாறு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கேட்டுக்கொண்டுள்ளது. இதில் 12 (பி) யுஜிசி விதியின் கீழ் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம், கல்லூரிகளுக்கு நிதியுதவியையும் யுஜிசி வழங்க உள்ளது.

நாளை முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 2 லட்சம் பேர் அனுமதி

          நாளை நடக்கும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில், 2.02 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., தெரிவித்து உள்ளது.
 

உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு "கவுன்சிலிங்' : பள்ளிகள் தோறும் மாணவர்களை சந்திக்க திட்டம்

           அரசு பள்ளிகளில், 9 முதல், 12ம் வகுப்பு வரை, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க, பள்ளி கல்வித் துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, உளவியல் நிபுணர்கள் மூலம், "மொபைல் கவுன்சிலிங்' வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடைப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு

           கிராம நிருவாகம் - தமிழ்நாடு வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்களுக்கு தகுதி அடைப்படையில் கிராம நிருவாக அலுவலராகப் பதவி உயர்வு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தொடக்கக் கல்வி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரை

          தொடக்கக் கல்வி - ஊராட்சி / அரசு / நகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 01.01.2015 அன்றைய நிலவரப்படி பதவி உயர்விற்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்பான அறிவுரைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

PGTRB போட்டித்தேர்வினை புதுக்கோட்டை மாவட்டத்தில் 5638 பேர் எழுதுகிறார்கள்

          புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வினை 5638 பேர் எழுதுகிறார்கள். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் நா.அருள்முருகன் தகவல்.

வருவாய்துறை ஊழியர்கள் உண்ணாவிரதம்

            தமிழக அரசின் வருவாய்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை அரசிடம் வைத்துள்ளனர். இது குறித்து, அரசுக்கும், வருவாய்துறை ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது.
 

வரலாறு....பாண்டியர்கள் பட்டப்பெயர்கள்......


கடுங்கோன்...தாய்நாட்டை மீட்டான்...
அரிகேசரி பராங்குச மாறவர்மன்...
கூன்பாண்டியன்,நின்றசீர் நெடுமாறன்.

2014: கரை சேர்ந்ததா கல்வி?(ARTICLE)


                         


          முதலில் இரண்டு செய்திகள். ஒன்று ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை, உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம் என்கிறது யுனெஸ்கோ. நம் நாட்டில் 37 சதவீதம் மக்கள் எழுத்தறிவு (கவனிக்க: கல்வியறிவு அல்ல) இல்லாமல் இருப்பதாக அது தெரிவிக்கிறது.

சாலை ஆய்வாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

          பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை ஆய்வாளர் நிலை -2 பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பாரீஸ் பத்திரிகை அலுவலகம மீது துப்பாக்கிச்சூடு : 12 பேர் பலி


                           

            பாரீஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரீசில்,வார பத்திரிகை அலுவலகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
 

சி.பி.எஸ்.இ. 10-வது, 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ந்தேதி தொடங்குகிறது

           சி.பி.எஸ்.இ. 10-வது வகுப்பு மற்றும் 12-வது வகுப்பு தேர்வுகள் மார்ச் மாதம் 2- ந்தேதி தொடங்குகின்றன என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு: கல்வித்துறை கலக்கம்

           தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.

தேர்வு பணியை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு

         சீனியர், ஜூனியர் பிரச்னையால் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டி தேர்வு பணியை புறக்கணிக்க முதுகலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர்.

'வகுப்பறைகளால் இணைவோம்!' - பள்ளிகளில் புது திட்டம்

           மாநகராட்சி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தவும், கல்வி அறிவோடு, தொழில்நுட்ப அறிவை பெருக்கவும், மாநகராட்சி கல்வித்துறை மற்றும் 'அமெரிக்கன் பவுண்டேஷன்', 'டெல்' நிறுவனம் இணைந்து, 'மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த வகுப்பறைகள்' திட்டத்தை விரைவில் துவங்க உள்ளன.

டி.ஆர்.பி., தேர்வு பணிகள் ஆசிரியர்கள் புறக்கணிப்பு

           தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் ஜன., 10ல் நடக்கும் முதுநிலை ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுப் பணிகளை புறக்கணிப்பதாக முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர். உயர்நிலை மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சங்கமும் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளதால் தேர்வு நடத்துவதில் சிக்கல் உள்ளது.

"வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்'

          வகுப்பறை மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என, ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குநர் லதா பிள்ளை கூறினார்.

பாரதியார் பல்கலை: பி.எட்., தொலைநிலை படிப்புக்கு சேர்க்கை

           கோவை, பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட் படிப்புக்கு சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 2015ம் கல்வியாண்டில் பி.எட் படிப்பில் சேர விரும்புபவர்கள் குறைந்தபட்சம் இரண்டு வருடம் இளங்கலை, முதுகலை அல்லது அரசு/தனியார் பள்ளிகளில் முழுநேர ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சிறப்பு வகுப்பு: தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

           அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு காலை 8 மணி முதல் சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும் என தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive