சி.எஸ்.ஐ.ஆர்., (அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி குழுமம்) மற்றும் யு.ஜி.சி., இணைந்து நடத்தும் இளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் விரிவுரையாளர் தேசிய தகுதி தேர்வு, வரும் டிச.21-ம் தேதி தமிழகத்தில் சென்னை, காரைக்குடி ஆகிய இரண்டு இடங்களில் நடக்கிறது. காரைக்குடியில், சிக்ரியால் அமைக்கப்பட்டுள்ள 11 இடங்களில் தேர்வு நடக்கிறது. இதில் ஆறாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.