காமன்வெல்த் போட்டியில் தங்க பதக்கம் வென்ற
தமிழர் சதீஷுக்கு ரூ.50 லட்சம் பரிசு
வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்கப்படுமா?
'மதுரை காமராஜ் பல்கலையில் எம்.எட்., படிப்பு துவங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்பல்கலை அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மதுரை,
தேனி,
திண்டுக்கல்,
சிவகங்கை,
விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஏராளமாக உள்ளன.
அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 10 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இந்த மாவட்டங்களில் பணியாற்றுகின்றனர்.
நிரப்பப்படாத சிறப்பு ஆசிரியர் ஆசிரியர் பணியிடங்களால் சிக்கல்
"தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், மாணவ, மாணவியருக்கான சிறப்பு கல்வி போதிப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது'
என,
தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.
வேலைவாய்ப்பு பதிவு மூலம் வேலை கொடுக்காததால் இந்த வருடம் 100 இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு
அடிப்படையில் ஆசிரியர்களாக தேர்ந்து எடுக்கப்படாததால் 100 சுயநிதி இடைநிலை
ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இந்த ஆண்டு மூடப்பட்டன.
ஆசிரியர் தகுதித்தேர்வில் தோல்வி இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - Dinamlar
ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி, இரண்டு முறையும் தோல்வி அடைந்ததால், மனமுடைந்த இளம்பெண், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நாமக்கல், முல்லை நகரை சேர்ந்தவர் சசிகுமார், 37. இவர், இந்துசமய அறநிலையத் துறையில், டைப்பிஸ்டாக உள்ளார். இவரது மனைவி இளவரசி, 28, எம்.எஸ்சி., முடித்துள்ளார். இவர்களுக்கு, நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது.
ஸ்காட்லாண்ட்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தமிழக வீரர் சிவலிங்கம் தங்க பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த்
4 வது நாள், விளையாட்டுப் போட்டிகளில்,
77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம்
தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே எடைப்பிரிவில் இந்தியாவின்
ரவி கட்லு இரண்டாம் இடம்
பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
’புதிய திருக்குறள்’ - சேலம் தமிழ் ஆசிரியர் சாதனை!
சேலம் பனமரத்துப்பட்டியில்
உள்ள நிலப்பரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (வயது 44). இவர் அதே பகுதியில்
உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
"டெஸ்லா மாடல் S " - எவர் “க்ரீன்” எலெக்ட்ரிக்! உலகின் நம்பர் -1 எலெக்ட்ரிக் கார்!
மின்சார கார்களா? அதெல்லாம் ஓட்ட நல்லாவும் இருக்காது; ஸ்பீடாகவும் போகாது.
என்ன இருந்தாலும் பெட்ரோல் இன்ஜின் ஃபீல் இருக்காது’ என சிலர் சொன்னாலும்,
காலம் மாறிவிட்டது நண்பர்களே! இனி, மின்சார கார்களைத் தவிர்க்க முடியாது.
தடய அறிவியல் துறையில் பணி ..
குற்றங்களை விஞ்ஞானபூர்வமாக நிரூபிப்பதற்குத் தடய தாவரவியல்
உதவுகிறது. தாவரங்களின் தடயங்களை கொண்டு குற்றச்செயல்களை கண்டுபிடிக்கும்
முறையினைத் தடய தாவரவியல் எனக் கூறலாம்.
உடற்கல்வி பயிற்சியாளர்கள் மேலும் 80 பேர் நியமிக்கப்படுவர்:அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 80 உடற் கல்விப் பயிற்சியாளர்கள்
தேவைப்படும் இடங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர் என்று, தமிழக இளைஞர் நலன்
மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 - 2014-15ம் கல்வியாண்டில் சிறுபான்மையற்ற தனியார் சுய நிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினருக்கு 25% இடஒதுக்கீடு, இடஒதுக்கீட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்ட பள்ளிகளின் பட்டியல் கோரி உத்தரவு
த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம்!
பள்ளிக்கல்வி - மண்டல வாரியாக ஆய்வுக் கூட்டம் - 70% குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர் /மேல்நிலைப் பள்ளி த.ஆ மற்றும் ஆய்வு அலுவலர்கள் கூட்டம் 13.08.2014 முதல் 01.09.2014 வரை மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது
தகுதியிருந்தும் பதவி உயர்வு பெற முடியாத ஐ.டி.ஐ. ஊழியர்கள்
சிறப்பு விதிகளில் இடம் பெறாத ஒரே காரணத்தால்,
தகுதியிருந்தும், பதவி உயர்வு பெற முடியாமல் ஐ.டி.ஐ., ஊழியர்கள்
தவிக்கின்றனர். தமிழகத்தில் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ்,
மாணவர்களுக்கு தொழிற்கல்வி தரும் பணியில், 72 ஐ.டி.ஐ.,க்கள்
செயல்படுகின்றன. அங்கு, பல துறைகளிலும், டிப்ளமோ முடித்தோர், இளநிலை
பயிற்சி அலுவலர், உதவி பயிற்சி அலுவலர், பயிற்சி அலுவலர்களாக
பணிபுரிகின்றனர்.
How to Change Ordinary Dongle to Wifi Dongle?
Do you want to change your ordinary dongle to wifi dongle. Just its a free of cost.
பாரதியார் பல்கலைக்கழக எம்.எட் நுழைவுத்தேர்வும்-சில சந்தேகங்களும்!!!
முதன் முதலாக இந்த ஆண்டுமுதல் பாரதியார்
பல்கலைக்கழகத்தில் தொலைநிலை வழியில் எம்.எட் படிப்பு அறிமுகம்
செய்துள்ளார்கள்.இதற்கான நுழைவுத்தேர்வு இன்று (27.07.2014) காலை
10:30முதல் 12:30மணிவரை தமிழகம் முழுவதும் சுமார் 20000 ஆயிரத்திற்கும்
அதிகமானோர் தேர்வெழுதினர்.பி.எட் பாடதிட்டமான PSYCHOLOGY,INNOVATION,
EVALUATION போன்ற பாடங்களில் இருந்து 100 கேள்விகள்
கேட்கப்பட்டது.கேள்வித்தாள் சரியாக கேட்கப்பட்டது ஆனால் தேர்வெழுதிய ஒட்டு
மொத்த ஆசிரியர்களின் சந்தேகம் என்னவென்றால்....
இடைநிற்றலை குறைக்கரூ.381 கோடி நிதி ஒதுக்கீடு
பள்ளி படிப்பில், மாணவர்களின் இடைநிற்றலை குறைக்க, நடப்பு கல்வி
ஆண்டில், 381 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 20
லட்சம் மாணவ, மாணவியர் பயன் பெறுவர்.சமூக, பொருளாதார பிரச்னையால், பள்ளி
படிப்பை, மாணவர்கள் பாதியில் கைவிடக்கூடாது என்பதற்காக, சிறப்பு ஊக்கத்தொகை
வழங்கும் திட்டத்தை, 2011 - 12ல் இருந்து, தமிழக அரசு செயல்படுத்தி
வருகிறது.
பி.எட்., படிப்பிற்க்கு விண்ணப்பிக்க 31ந் தேதி வரை காலஅவகாசம்: துணைவேந்தர் விஸ்வநாதன் அறிவிப்பு
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் முதல்முறையாக இந்த வருடம்
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட்., கல்லூரிகளில்
உள்ள பி.எட் இடங்களில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக கலந்தாய்வை நடத்த
உள்ளது.
இந்த கல்லூரிகளில் 300 இருக்கின்றன. இந்த இடங்களில் சேர ஆன்லைன் மூலம்
பட்டதாரிகள் வருகிறார்கள். இன்றுடன் (திங்கட்கிழமை) விண்ணப்பிக்கும் தேதி
முடிவடைவதாக இருந்தது.
மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
பெத்தநாய்க்கன்பாளையம், வட்டார வளமைய சார்பில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
TNTET & PG TRB - 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்
வழக்குகளின் பிடியில் ஆசிரியர் தேர்வு வாரியம்: 3 வாரத்தில் பணி நியமனம் கிடைக்குமா?ஆசிரியர்கள் கலக்கம்
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.
தமிழக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க கடந்த 2012 முதல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013ல் நடத்தப்பட்ட தேர்வில் வெற்றி பெற்ற பல பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் இன்னும் பணி நியமனம் கிடைக்காமல் உள்ளனர்.
'எனது அரசு' பிரத்யேக இணையதளத்தை, பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்
மத்திய அரசின் நிர்வாகத்தில் மக்களும்
பங்குபெற்று தங்களது கருத்துக்களையும் எண்ணங்களையும் தெரிவிக்க பிரத்தியேக
இணையதள சேவையை பிரதமர் நரேந்திர மோடி அறிமுகம் செய்துள்ளார். 'எனது
அரசு'(MyGov ) http://mygov.nic.in/ என்ற பிரத்யேக இணையதளத்தை, பிரதமர்
நரேந்திர மோடி இன்று துவக்கி வைத்தார். அரசின் ஆட்சியில் மக்களுக்கும்
பங்குண்டு என்ற நோக்கத்தில், மக்களின் கருத்துக்களையும் பெற்று சிறந்த அரசை
நடத்தும் நோக்கத்தோடு இந்த இணையதளம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்த அரசு பள்ளி : தமிழும், ஆங்கிலமும் இருந்ததால் சாத்தியம்
தமிழகத்தில் பல அரசு பள்ளிகள் மாணவர்கள்
சேர்க்கையில்லாமல் மூடப்பட்டு வரும் நிலையில், நிலக்கோட்டை ஒன்றியத்தில்
உள்ள பள்ளபட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளி மாணவர்கள் சேர்க்கையில் சாதனை படைத்து
வருகிறது. கிராமப்புற பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து
வருவதால் பள்ளிகளை மூட அரசு பரிசீலித்து வருகிறது. சில அரசு பள்ளிகளில்
மாணவர்களை விட ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ள அவலத்தையும் காண
முடிகிறது.