அரசு பள்ளிகளில், பத்து மாணவர்களுக்கு குறைவாக
உள்ள ஆயிரத்து 268 பள்ளிகள், இழுத்து மூடப்படும் என்ற நிலை அரசின்
பரிசீலனையில் உள்ளது. தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு
இலவச உணவு, புத்தகம், நோட்டு, சீருடை, சைக்கிள், 'லேப்-டாப்,' 'பஸ்பாஸ்'
என 14 வகையான இலவச நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. கல்வித்துறைக்காக
ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்கிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசுப்பணிக்கு போக 'கொம்பு சீவும்' கிராமம்: வீட்டுக்கு வீடு அரசு ஊழியர்
மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில்
வீட்டுக்கு ஒருவர் அரசுப்பணியில் உள்ளனர். இந்த கிராமத்தில் 100 வீடுகள்
உள்ளன. இதில் 71 பேர் அரசு ஊழியர்கள். அதிகபட்சமாக கல்வித்துறையில் 15
பேர், ராணுவத்தில் 10 பேர், காவல் துறை மற்றும் போக்குவரத்துக் கழகத்தில்
தலா ஐந்து பேர் உள்ளனர்; தேசிய பஞ்சாலை கழக மேலாளராக ஒருவர் பணிபுரிகிறார்.
ஆசிரியர் காலி பணியிடங்கள்; சிறப்பு வகுப்பு துவக்குவதில் சிக்கல்?
ராமநாதபுரம் மாவட்ட அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலி
பணியிடங்கள் தொடர்வதால் 10ம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் துவங்குவதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் நடப்பு கல்வி ஆண்டு பொதுத்தேர்வுகளில், நூறு சதவீத
தேர்ச்சி இலக்கை அடைய அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெயிலானவர்களுக்கான எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வு முடிவு நாளை வெளியீடு!
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் பெயிலானவர்களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு துணைத்தேர்வு முடிவு நாளை(வெள்ளிக்கிழமை)
வெளியிடப்படுகிறது.
நாளை வெளியீடு
கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதம் எஸ்.எஸ்.எல்.சி சிறப்பு துணைத் தேர்வு
நடைபெற்றது.
தரம் உயர்த்தப்படும் 200 பள்ளிகள்காலியிடம் நிரப்ப மீண்டும் 'கவுன்சிலிங்' சட்டசபையை எதிர்பார்க்கும் ஆசிரியர்கள்?
சிவகங்கை :தமிழகம் முழுவதும் தரம் உயர்த்தப்படும் அரசு உயர்,
மேல்நிலைப்பள்ளி காலியிடங்களை நிரப்புவதற்கு மீண்டும் கவுன்சிலிங்
அறிவிப்பு, சட்டசபையில் வெளியாகுமா என, ஆசிரியர்கள் எதிர்பார்ப்பில்
உள்ளனர்.
தமிழகத்தில் 32 மாவட்டத்திலும் தரம் உயர்வுக்கு தகுதியான அரசு பள்ளிகள்
குறித்த பட்டியலை சேகரித்த கல்வித்துறை, பள்ளிக்கல்வித்துறைக்கு
வழங்கியுள்ளது.
6.25 லட்சம் பேர் விண்ணப்பித்த குரூப் 1தேர்வு ஹால் டிக்கெட்' வெளியீடு.!
வரும், 20ம் தேதி நடக்க உள்ள குரூப் 1 தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'
டி.என்.பி.எஸ்.சி., (அரசு பணியாளர் தேர்வாணையம்)
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
துணை கலெக்டர், வணிக வரித்துறையில், உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில்,
காலியாக உள்ள, 79 பணியிடங்களை நிரப்ப, வரும், 20ம் தேதி, குரூப் 1
முதல்நிலை தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது.
உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியலில் 10 நூலகங்கள் இடம் பெற்றுள்ளன
வாஷிங்டனில் (அமெரிக்கா) உள்ள இந்தூலம் ஐக்கிய அமெரிக்காவின் தேசிய
நூலகமாகவும் செயல்படுகிறது. அமெரிக்க காங்கிரசால் 1800ம் ஆண்டில்
நிறுவப்பட்டது. அமெரிக்க உள்நாட்டு போருக்குப் பின்னர் இந்தூலகம் அளவிலும்
முக்கியத்துவத்திலும் விரைவாக வளர்ச்சியடைந்தது. தற்போது ஏறத்தாழ
3,21,24,001 புத்தங்கள் இடம் பெற்றுள்ளன. உலகிலேயே மிகப்பெரிய நூலகமாக
கருதப்படுகிறது.
வெற்றி :' என் டீம்... என் நாடு...' ஜெர்மனி பெற்ற கனவு வெற்றி.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், ஜெர்மனி பெற்ற வெற்றி, இவ்விளையாட்டில்
அதன்அனைத்துமுக ஆர்வத்தை உலகிற்கு எடுத்தியம்பி இருக்கிறது.
ஒன்றுபட்ட ஜெர்மனியாக, தொடர்ந்து 12 ஆண்டுகள் இடைவிடாது செய்த முயற்சியின்
பலனாக, சிறந்த கால்பந்து கூட்டணி இவ்வெற்றியை தந்திருக்கிறது. இதை ஜெர்மனியின்
தலைநகர் பெர்லின் நகரில், 10 லட்சம் மக்கள் கூடி மகிழ்ந்து. ஆரவாரம் செய்திருக்கின்றனர்.
காலி பணியிடம் நிரப்புவது பற்றி அறிவிக்காவிட்டால் பேரணி
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2 ஆயிரம்
உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 1100 சிறப்பு ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப,
சட்டசபைக் கூட்டத்தொடரில் அரசு அறிவிப்பு வெளியிடவேண்டும், இல்லாவிட்டால்
ஆகஸ்ட் 6ம் தேதி கோட்டை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று தமிழ்நாடு
உடற்கல்வி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து
அச்சங்கத்தின் மாநில தலைவர் சங்கரபெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:
மானியக் கோரிக்கையில் சத்துணவு ஊழியர்களின் எதிர்பார்ப்பும் - ஏமாற்றமும்
தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநிலப்
பொதுச் செயலாளர் டி.ஆர்.மேகநாதன் வெளி யிட்டுள்ளசெய்திவருமாறு: தமிழக
அரசின் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறையின் கீழ் பள்ளி சத்துணவு
மையங்க ளில் அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர் என்ற பெயரில் 1
லட்சத்து இருபதாயிரத்துக்கும் மேற் பட்ட ஊழியர்கள் 1982ம் ஆண்டு முதல்
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக முறையான வரையறுக்கப்பட்ட ஊதிய விகிதமின்றி
மிகவும் சொற்ப ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.
"கல்பனாசாவ்லா" விருது 2014 விண்ணப்பங்கள் அனுப்ப கோரி உத்தரவு
வீரம் - வீரம் மற்றும் தைரியத்திற்கான தமிழக அரசின் பெண்களுக்கான "கல்பனாசாவ்லா" விருது 2014 விண்ணப்பங்கள் அனுப்ப கோரி உத்தரவு
DEE - 2014 KALPANA CHAWLA AWARD APPLICATION CALLED REG PROC CLICK HERE...
இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு
வழக்கு - பகுதி நேர துப்புரவு பணியாளர்களால் தங்களது பணியினை வரன்முறைப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட் வழக்கில் பிறப்பித்த இறுதியாணை நடைமுறைப்படுத்துதல் சார்பு
என்ஜினீயரிங் தேர்வு பட்டியலை ரத்து செய்ய கோரி டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்துக்கு நோட்டீசு
சென்னை ஐகோர்ட்டில், ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த எம்.முனீஸ்வரன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
போலி இ-மெயிலுக்கு பதில் அளிக்காதீர்: வருமான வரித்துறை எச்சரிக்கை
வருமான வரி செலுத்துவோர் சிலருக்கு போலி
மின்னஞ்சல் ஒன்று கிடைக்கப் பெறுவதாகவும், அந்த மெயிலுக்கு எந்தவிதமான
பதில் அளிப்பதோ அல்லது பதிவு இறக்கம் செய்யவோ வேண்டாம் என்று வருமான
வரித்துறை எச்சரித்துள்ளது.
TRB: PG TRB Court Case Judgement Copy of Physics, Chemistry, Commerce, Economics Subjects
- TRB: PG TRB Court Case Judgement Copy of Physics - Click Here 1, Click Here 2
- TRB: PG TRB Court Case Judgement Copy of Chemistry - Click Here
- TRB: PG TRB Court Case Judgement Copy of Botany - Click Here
- TRB: PG TRB Court Case Judgement Copy of Commerce - Click Here
- TRB: PG TRB Court Case Judgement Copy of Economics - Click Here
கல்லூரி ஆசிரியர்கள் காலி பணியிடம் ஒரு மாதத்தில் நிரப்பப்படும்: அமைச்சர் பழனியப்பன் தகவல்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூ),’’கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்குமா?’’ என்று கேள்வி எழுப்பினார்.
ஆசிரியையாக இருப்பவர் அழக்கூடாது - நீதிபதி திரு. நாகமுத்து
கவுன்சலிங்கில் உத்தரவு வழங்கியும் பயனில்லை இடமாறுதல் பெற்ற பள்ளியில் வேறொரு ஆசிரியர் நியமனம்
12th Study Material (Latest)
- Physics Practical Guide Contents - Tamil Medium - English Medium
Thanks to Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
மாணவர்கள் பஸ் படிக்கட்டில் மாணவர் பயணித்தால் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை
'மாணவர்கள், பஸ்
படிக்கட்டில் தொடர்ந்து பயணம் செய்வது கண்டறியப்பட்டால், அந்த மாணவர் படிக்கும் பள்ளி
தலைமை ஆசிரியர் மற்றும் தாளாளர் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி வாகன ஆய்வு
கமிட்டி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
அரசு பள்ளிகளில் ஒப்புக்கு நடந்த காமராஜர் விழா
ஒவ்வொரு
ஆண்டும், காமராஜர் பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக, அனைத்து வகை
பள்ளிகளிலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு, அரசு
பள்ளிகளுக்கு நிதி வழங்காததால், பெயரளவிற்கு, நேற்று விழா நடந்தது.
நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை. புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.
நாளை சட்டசபையில் கல்வி மானிய கோரிக்கை.
புதிய அறிவிப்புகள் வெளியாகவுள்ளன.அதில் பள்ளிகள் தரம்
உயர்வு ,புதிய ஆசிரியர் நியமனம் தொடர்பான அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது
.