Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை: பள்ளிகளுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
அனைத்து
பள்ளிகளிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக கழிப்பறை
அமைத்திடுவதும், சுத்தமான குடிநீர் வசதி செய்து தருவதும் கல்வி பெறும்
உரிமை சட்டத்தின் கீழ் அவசியமாகும் என தெரிவித்துள்ள சுப்ரீம் கோர்ட்,
அனைத்து பள்ளிகளிலும் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என
உத்தரவிட்டுள்ளது.
மாணவர்கள் குடும்ப அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்
முதலமைச்சர்
செல்வி ஜெயலலிதா கல்வித்துறையில் மாணவர்களின் சிரமங்களைக் குறைக்கும் வகையில்
பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
அதன்படி, மதிப்பெண் சான்றிதழ்கள் பெறும்போது பள்ளிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவும்
செய்வதற்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, 21-ம் தேதி மாணவர்கள்
மதிப்பெண் சான்றிதழ்களை பள்ளிகளில் பெற்றுக்கொள்ளும்போது, வேலைவாய்ப்பு பதிவையும் அங்கேயே செய்துகொள்ள வசதி
செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாணவர்கள் குடும்ப
அட்டை மற்றும் 10-ம் வகுப்பு வேலைவாய்ப்பு
பதிவு அட்டை ஆகியவற்றை கொண்டுவரவேண்டும்
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி பேராசிரியர் பணி நியமனம்: அரசாணை வெளியிட கோரிக்கை
"உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு
விண்ணப்பித்துள்ள, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி
ஆசிரியர்கள் பணிக் காலத்திற்கும், மதிப்பெண்
வழங்க வேண்டும்' என, தமிழ்நாடு பட்டதாரி
ஆசிரியர் கழகம், அரசுக்கு
கோரிக்கை விடுத்துள்ளது. அதன் நிர்வாகிகள், உயர்கல்வித்துறை
செயலரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசு
கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில்,
காலியாக உள்ள உதவிப் பேராசிரியர்
பணியிடங்களுக்கு, தகுதி வாய்ந்தவர்கள் பணி
நியமனம் செய்யப்படுகின்றனர்.
113 அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி
பிளஸ்
2 தேர்வில் தமிழ் நாடு முழுவதும்
113 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று
சாதனை படைத்துள்ளது.
தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில் பதிலளிக்க வேண்டும்: தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
நூறு சதவீத தேர்ச்சியினை பெறவேண்டும்
என்பதற்காக 10-ம் வகுப்பு மாணவனை டுடோரியலில் சேர்த்துவிட்ட பள்ளி
நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தந்தை தொடர்ந்த வழக்கிற்கு 4
வாரத்துக்குள் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
பிறந்த வருடம் மாறியதால் ரிசல்ட் பார்க்க முடியல...
பிளஸ்
2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த முடிவுகளை இணைய தளத்தில்
பார்க்க வேண்டுமானால் மாணவர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை
அப்டேட் செய்ய வேண்டும்.
திருச்சியில் 64 பள்ளிகள் சென்டம்: முதல்வர் ஜெயலலிதா தொகுதி 97.2% தேர்ச்சி
ப்ளஸ்
2 தேர்வில் திருச்சி மாவட்டத்தில் உள்ள 64 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
அடைந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வினியோகம் எப்போது?
பிளஸ்
2 தேர்வு நேற்று வெளியானதை அடுத்து
தனித் தேர்வர்களுக்கு நேற்றே அந்தந்த தேர்வு
மையங்களில் மதிப்பெண் பட்டியல்கள் வழங்கப்பட்டன. பள்ளிகள் மூலம் தேர்வு எழுதியோருக்கான
மதிப்பெண்
தேர்தல் பணி ஊழியர்கள் வாக்களிக்க தனிவாக்குச்சாவடி : அரசுப் பணியாளர் சங்கம் கோரிக்கை
தேர்தல்
பணியில் ஈடுபட்ட அரசுப் பணியாளர்கள்
வாக்களிக்க சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளை
அமைத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்
பணியாளர் சங்கம்
கோரிக்கை விடுத்துள்ளது.
1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு ஆர்.டி.இ., சட்டம் பொருந்தாது
சுப்ரீம் கோர்ட்
பிறப்பித்த உத்தரவு காரணமாக, தமிழகத்தில், 1,108 சிறுபான்மை பள்ளிகளுக்கு, இலவச மற்றும்
கட்டாய கல்வி சட்டம் (ஆர்.டி.இ.,) பொருந்தாது .
இரட்டைப்பட்டம் வழக்கை ஏற்றுக்கொண்டது உச்ச நீதி மன்றம்
இரட்டை
பட்ட வழக்கை உச்ச நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அனைவருக்கும்
நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இது இவ்வழக்கில் பெரிய விசயமாக
கருதப்படுகிறது
வாடகைக்கு வீடு எடுத்து படித்தேன்: முதலிடம் மாணவி சுஷாந்தி நெகிழ்ச்சி
"நான் படித்த பள்ளிக்கூடம்
கிருஷ்ணகிரியில் இருந்து அதிக தூரம் என்பதால் ஊத்தங்கரையிலேயே வீடு
வாடகைக்கு எடுத்து தங்கி படித்தேன்" என்று பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவி சுஷாந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
என்ஜினீயரிங் – மருத்துவம் கட்–ஆப் மதிப்பெண் உயருகிறது
பிளஸ்–2 தேர்வு முடிவு இன்று வெளியானது.
கடந்த ஆண்டை விட இந்த வருடம் தேர்ச்சி விகிதம் மட்டுமின்றி பாட வாரியாக 200–க்கு 200 எடுத்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.
கோடை சிறப்பு வகுப்புகள் நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை
தமிழகம்
முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வு முடிந்ததும் கோடை விடுமுறை
விடப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை விடுப்பில் மாணவர்கள் உள்ளனர். கோடை
விடுமுறை விடப்பட்டாலும் சில பள்ளிகள் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து
சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக கடந்த ஆண்டு புகார்கள் வந்தன.
பிளஸ் டூ ரிசல்ட் பேப்பரில் ஒரே பிறந்த தேதி... கனிணி தவறால் குழம்பிப் போன வேலூர் மாணவர்கள்
பிளஸ்டூ தேர்வு எழுதிய மாணவ, மாணவியரில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு
ஒரே பிறந்த தேதி போட்டிருப்பதால் வேலூர் மாவட்டம் ஆம்பூரில்
குழப்பமாகியுள்ளது.
விழுக்காட்டில் வழுக்கிய விருதுநகர் – 9 அரசு பள்ளிகள் மட்டுமே 100 சதவீத தேர்ச்சி
ஒவ்வொரு வருடமும் தேர்ச்சியில் அதிக
விழுக்காடுகளைப் பெறும் விருதுநகர் மாவட்டம். ஆனால், இந்த வருடம் 9 அரசு
பள்ளிகளும், 59 தனியார் பள்ளிகளும் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி
பெற்றுள்ளன. அரசுப்பள்ளிகளை விட தனியார் பள்ளிகளே அதிக தேர்ச்சி
விழுக்காடுகளைப் பெற்றுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் : 90.6% மாணவர்கள் தேர்ச்சி
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10
மணிக்கு வெளியானது. இத்தேர்வில் 90.6% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதில்
கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை
பிடித்தாள்.
மாவட்ட வாரியாக தேர்ச்சி விபரங்கள்:
பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்
பிளஸ்
2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியானது. இதில் கிருஷ்ணகிரி
மாணவி சுஷாந்தி 1193 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தை பிடித்தாள்.
அரசு டிரைவர்கள் சம்பளம் குறைப்பு
அரசின்
பல்வேறு துறைகளைச் சார்ந்த டிரைவர்களின் சம்பளம் ரூ.4000 லிருந்து ரூ.6000 க்குள் மட்டுமே
இருக்கும் என தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. முன்னதாக சில துறைகளில் டிரைவர்களின் சம்பளம்
ரூ.5000 முதல் ரூ.9000 ஆக இருந்தது.
Higher Secondary HM Promotion Panel - 2014 Now Released.
01.01.2014 அன்றைய நிலையில் அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான தேர்ந்தோர் பட்டியல் (அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் 01 முதல் 287 முடிய மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 ம் இணைந்து 01 முதல் 1080 முடிய
மாநிலத்தில் முதல் மதிப்பெண் 1193 - ஊத்தங்கரை மாணவி சுஷாந்தி பெற்றார்!
2014ம் ஆண்டிற்கான பிளஸ் 2 தேர்வில், ஊத்தங்கரையின் ஸ்ரீவித் மந்திர் மேல்நிலைப் பள்ளி மாணவி சுஷாந்தி, மொத்தம் 1200க்கு 1193 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளார்.
எந்தெந்த பாடங்களில் எத்தனை பேர் சென்டம்?
கடந்த 2 ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், இந்தாண்டு, சென்டம் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த அளவில் அதிகமாக உள்ளது.