நடப்பு கல்வி ஆண்டில், இலவச மற்றும் கட்டாய
கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், 25 சதவீத இட
ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கு வசதியாக, தனியார் பள்ளிகளுக்கு, கடந்த ஆண்டு
தர வேண்டிய, 25 கோடி ரூபாய் நிலுவை தொகையை, தமிழக அரசே வழங்க முடிவு
செய்து உள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
மதுரையில் ஏழு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்
மதுரையில்
மாணவர்களுக்கான வேலைவாய்ப்பக 'ஆன்லைன்' பதிவுகள் தொடர்பாக, ஏழு மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நேற்று நடந்தது.
ஆபாச இணையதளங்களை முடக்கினால் தீங்கு ஏற்படும்: சுப்ரீம்கோர்ட்டில் மத்திய அரசு பதில்
ஆபாச வெப்சைட்களை முடக்கக் கோரியும், ஆபாச
படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த
வழக்கறிஞர் கமலேஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
சென்னை தொலைதூர கல்வி நிறுவனம் உதவி தொகையை மாணவர்களுக்கு வழங்காமல் திருப்பி அனுப்பியது
அரசு வழங்கிய ரூ.1.32 கோடி கல்வி உதவித்
தொகையை, மாணவர்களுக்கு வழங்காமல், அதை அரசுக்கே சென்னை தொலைதூர கல்வி
நிறுவனம் திருப்பி அனுப்பியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நிகர்நிலை பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு
நாடு முழுவதும் 44 நிகர் நிலை பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்ய பல்கலைக்கழக மானியக் குழுவிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு கிடையாது
தனியார்
பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு தர முடியாது என
தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
திறனாய்வுத் தேர்வு முடிவு: இன்று (மே 5) வெளியீடு
CLICK HERE-NMMS EXAMINATION - 2013 RESULT
CLICK HERE-NMMS EXAMINATION - 2013 SELECTED CANDIDATES LIST
கல்வி உதவித் தொகை பெறத் தகுதியான
மாணவர்களை தேர்வு செய்யும் வகையில் நடத்தப்பட்ட தேசிய திறனாய்வுத் தேர்வின்
முடிவு இன்று (மே 5 - திங்கள்கிழமை) வெளியிடப்படுகிறது.
TET சான்றிதழ் சரிபார்ப்பு நாளை தொடக்கம்- தி இந்து
ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக் கீட்டுப் பிரிவினருக்கு தேர்ச்சி
மதிப்பெண் 60 சதவீதத்தில் இருந்து 55 சதவீதமாக குறைக்கப்பட்டதை தொடர்ந்து
பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக 22 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர்.
முறையாக பின்பற்றப்படாத கல்வி உரிமைச் சட்டம்: கல்வியாளர்கள் குற்றச்சாட்டு
இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டம் முறைப்படி
பின்பற்றப்பட வில்லை என்று கல்வியாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுபற்றி
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்
ளனர்.
570 பொறியியல் கல்லூரிகளின் முழு விவர பட்டியல்: அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு
பொறியியல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும்
மாணவர்களின் வசதிக்காக 570 பொறியி யல் கல்லூரிகளின் முழு விவர பட்டியலை
மாவட்ட வாரியாக அண்ணா பல்கலை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.
கதவுகளை திறந்துவிடுமாகல்வி உரிமைச் சட்டம்?
அரசுக் கொள்கைகளால் தேசத்தின்
குடிமக்களுக்கு - குறிப்பாக வருங்காலத் தலைமுறையினருக்கு - இழைக்கப்பட்ட
மிகப் பெரிய வஞ்சனைகளைப் பட்டியலிட்டால், கல்வி கடைச்சரக்காக
மாற்றப்பட்டிருப்பது நிச்சயமாக அந்தப் பட்டியலில் இடம்பெறும். இதை
எதிர்த்து நடந்துகொண்டிருக்கும் போராட்டங்களின் பலனாக, கல்வி உரிமைச்
சட்டத்தைக் கொண்டுவர வேண்டிய கட்டாயம் மத்திய அரசுக்கு ஏற்பட்டது.
இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்பநல நிதி தராமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு, ஐகோர்ட்டு கண்டனம்
இறந்து போன அரசு ஊழியரின் குடும்பத்துக்கு,
குடும்ப நல நிதி வழங்காமல் இழுத்தடித்த அதிகாரிகளுக்கு மதுரை ஐகோர்ட்டு
கண்டனம் தெரிவித்துள்ளது. குடும்ப நல நிதியை 8 வாரத்துக்குள் வழங்க நீதிபதி
உத்தரவிட்டுள்ளார்.
மருத்துவ நுழைவு தேர்வு: தமிழகத்தில் 22 ஆயிரம் பேர் பங்கேற்பு
அகில
இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் நேற்று நடந்தது.
தமிழகத்தில், 22 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய சுகாதாரத் துறையின்
கீழ் இயங்கும், மருத்துவ பல்கலைகளில்,
15 சதவீதம் இடங்களை நிரப்புவதற்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத்
தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ பல்கலைகளில், 15 சதவீதம் இடங்கள் மூலம்,
3,000 எம்.பி.பி.எஸ்.,
மற்றும், 250 பி.டி. எஸ்., இடங்கள், இந்த நுழைவுத்தேர்வு மூலம்
நிரம்புகிறது. நாடு முழுவதும், 50 நகரங்களில், 929 மையங்களில், 5.5 லட்சம்
மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழகத்தில், சென்னையில் அமைக்கப்பட்டிருந்த,
35 தேர்வு மையங்களில், 22 ஆயிரம் மாணவர்கள் தேர்வில் பங்கேற்றனர்.
சத்துணவு மையங்களில் 28,000 காலிபணியிடங்கள்: தரமான உணவு கிடைக்காமல் மாணவர்கள் அவதி
சத்துணவு
மையங்களில், சுமார் 28 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல்
உள்ளதால், மாணவர்களுக்கு தரமான உணவினை, உரிய நேரத்திற்குள் வழங்க முடியாத
நிலை ஏற்பட்டுள்ளதாக சத்துணவு அமைப்பாளர்கள் அரசின் மீது குற்றம்
சாட்டியுள்ளனர். தமிழகத்தில் துவக்கப்பள்ளிகளில் 27,108 மையங்கள்,
உயர்நிலைப்பள்ளிகளில் 15,043 மையங்கள், தேசிய
குழந்தை தொழிலாளர்கள் சிறப்பு பள்ளிகளில் 339 மையங்கள் உள்பட மொத்தம்
65,000 சத்துணவு மையங்கள் உள்ளன. ஆண்டுக்கு 220 நாள் மாணவர்களுக்கு
சத்துணவு வழங்கப்படுகிறது. இதற்காக, ஒவ்வொரு மையங்களிலும், ஒரு அமைப்பாளர்,
ஒரு சமையலர், ஒரு உதவியாளர் நியமிக்கப்படுகின்றனர். இதில் சுமார் 40
ஆயிரம் சத்துணவு அமைப்பாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உலகின் பணக்காரக் கிராமம்......மதாபர்!
இந்தியா என்பது கிராமங்களின் தொகுப்புதான். இந்திய கிராமங்களைப் பற்றி
எழுதுவது என்றால், ஒவ்வொரு கிராமத்தைப் பற்றியும் எழுதலாம். அவ்வளவு
பொக்கிஷங்களை அவை புதைத்துவைத்திருக்கின்றன. எனினும், குஜராத்தின் மதாபரும்
தேசாரும் எதனாலோ திரும்பத் திரும்ப ஞாபகத்துக்கு வந்துகொண்டிருக்கின்றன.
சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்!
சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசித்திரமான பொதுநல வழக்கொன்று
வந்தது. உயர் நீதிமன்ற வளாகத்திலுள்ள மனுநீதிச் சோழன் சிலையை அகற்ற
வேண்டுமென்று கோரப்பட்டது. மனுநீதிச் சோழன் பற்றிக் கூறப்படும் கதையிலுள்ள
சம்பவங்கள் தற்போதைய சட்டத்துக்கு ஒவ்வாதவை என்றும் கூறப்பட்டது. உயர்
நீதிமன்றம் அவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்துவிட்டது.
உண்மையிலேயே மனுநீதிச் சோழன் தனது மகனைக் கொல்ல உத்தரவிட்டது தற்போதைய
நீதிமன்ற நடைமுறையில் சாத்திய மில்லை. மன்னராட்சியில் நிர்வாகத்தையும்
நீதித் துறையையும் அரசன் ஒருவனே கையாண்டிருந்தாலும், தற்போதைய அரசமைப்புச்
சட்டப்படி நீதித் துறைக்கும், நிர்வாக இயந்திரத்துக்கும் அதிகாரப்
பங்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, நீதிபதியே விரும்பினாலும் தன்னுடைய
மகனுடைய வழக்கை அவர் விசாரிக்க முடியாது.
7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் இரட்டைப்பட்ட வழக்கு விசாரணை
இரட்டைப்பட்ட வழக்கு வருகிற 7 ஆம் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. பிரபல மூத்த வழக்கறிஞர் இரட்டைப்பட்டம் சார்பாக வாதாடுகிறார்
பாட வாரியாக தேர்ச்சி விவரப் பட்டியல்: டி.இ.டி., தேர்ச்சி பெற்றவர் எதிர்பார்ப்பு
'பாடங்கள் வாரியான தேர்ச்சி விவரப்
பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வேண்டும்,' என, டி.இ.டி.,
தேர்ச்சி பெற்றவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஓட்டு எண்ணும் ஊழியர்கள் குலுக்கல் முறையில் தேர்வு
தமிழகத்தில், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபட உள்ள, 16 ஆயிரம் ஊழியர்கள், குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆர்.டி.இ., சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை: புதிய அட்டவணை வெளியிடாததால் குழப்பம்
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின்
(ஆர்.டி.இ.,) கீழ், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை நடத்த ஏதுவாக,
மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், புதிய அட்டவணையை வெளியிடவில்லை. இது, தனியார்
பள்ளிகளுக்கு, சாதகமாக அமைந்துள்ளது.
10ம் வகுப்பில் முப்பருவ கல்வி முறை இல்லை: இந்த ஆண்டிலும் பழைய பாட திட்டமே தொடரும்
வரும், கல்வி ஆண்டில், பத்தாம் வகுப்பில்
(எஸ்.எஸ்.எல்.சி.,) முப்பருவ கல்வித்திட்டம் கொண்டு வரப்படும் என, பள்ளிக்
கல்வித்துறை அறிவித்த நிலையில், அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்திட்டத்தை
செயல்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதால், பழைய பாடத்திட்டத்தின்
படி, பள்ளிகளுக்கு புத்தகம் அனுப்பும் பணியை கல்வித்துறை துவக்கி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க கோரிக்கை
ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்க ஆயக்குடி இலவசப் பயிற்சி மையம் கோரிக்கை விடுத்துள்ளது.