Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்


         தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என, நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%


           மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ் வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே, ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.


முறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை


         "பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள் செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.

இரயில்வே பாதுகாப்பு: ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதி உதவி


         மத்திய அரசாங்கம் 2013- 2014 க்கான இரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

           இரயில்வே அமைச்சர் திரு. பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 1,52,000 காலி இடங்கள் நிரப்பப்படும் என்றும் 47,000 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்


          ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.8 கோடி: சிதம்பரம்


          நாடு முழுவதும் வேலைவாய்ப்ற்றவர்களின் எண்ணிக்‌கை 2.8 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

          இதுதொடர்பாக மேலும் அவர் கூறியதாவது: கடந்த‌ 2004-05ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த வேலைவாய்‌ப்பின்மை விகிதம், 2009-10-ம் ஆண்டில் 6.6 ஆக குறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2004-05-ல் 3.45 கோடியாக இருந்தது. அது 2009-10ம் ஆண்டில் 65 லட்சம் குறைந்து 2.8 கோடியாக உள்ளது.


உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?


         தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்; டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர் வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால், இங்கே நடப்பதென்ன...?

மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு


        வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

         இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு: ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள், அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு செய்யப்பட்டனர்.

சென்னை பல்கலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு


       சென்னை பல்கலைக்கழகத்தின், முதுகலை மற்றும் தொழில் கல்வி படிப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.

அண்ணாமலைப் பல்கலை பல் மருத்துவ கல்லூரியில் சி.பி.ஐ., ரெய்டு


        சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.

           காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில் உயர் படிப்பிற்கு அனுமதி பெற்றுத் தர, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர், முருகேசன் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.பி.ஐ., விசாரணை செய்து வருகிறது.

மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வு 10 சதவீதம் பாஸ்!


       மாநில விரிவுரையாளர் தகுதித் தேர்வில் 10.64 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை குறைவாக இருந்தாலும்கூட, கடந்த தேர்வுடன் ஒப்பிடும்போது தற்போதைய தேர்ச்சி விகிதம் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.


பாடத் திட்டங்களை மாற்றியமைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு


      ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்கான பாடத் திட்டங்களை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
 

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.


      பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி, சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திருமதி. கோகுல இந்திரா ஆகிய
மூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.


செப்., 30 தேதி அரசு விடுமுறை ரத்து செய்து அரசு உத்தரவு


        வங்கிகள் அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக, செப்., 30ம் தேதி அறிவிக்கப்பட்ட விடுமுறை, ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
      

அரசுப் பணிகளில் சேர்ந்தவர்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்தியது ஏன்? - Dinamalar


          தமிழக அரசின் பல்வேறு துறைகள், காலிப் பணியிடங்கள் குறித்த விவரங்களை, டி.என்.பி.எஸ்.சி.,க்கு சரிவர தராததன் காரணமாக, பெரும் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. இதனால், குரூப்-4 தேர்வில் தேர்வு பெற்று, பல்வேறு துறைகளில், பணியில் சேர்ந்தவர்களை, தேர்வாணையம், நேற்று மீண்டும் அழைத்து, கலந்தாய்வு நடத்தி, புதிய உத்தரவை வழங்கியது.


பள்ளிக்கு மின் இணைப்பு பெறுவதில் தாமதம்: பயன்படாத புதிய கட்டடம் - Dinamalar


         திருக்கச்சூர் உயர்நிலைப் பள்ளிக்கு, புதிய வகுப்பறை கட்டடம் கட்டும் பணி நிறைவு பெற்று, மூன்று மாதங்களுக்கு மேலாகியும், மின் இணைப்பு பெறாததால், கட்டடம் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டி கிடக்கிறது.

கிராமப்புற நூலகங்களின் பரிதாப நிலை: புத்துயிர் அளிக்கப்படுமா?


          விழுப்புரம் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட நூலகங்கள் பெரும்பாலும் காட்சிப் பொருளாகவே மாறிவிட்டன. இவற்றை செயல்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு: ஏற்பாடுகள் தயார்


            தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை மறுநாள், துவங்குகிறது. 8.5 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வு எழுதுகின்றனர். தேர்வை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும், தேர்வுத்துறை முழுவீச்சில் முடித்து, தயார் நிலையில் உள்ளது.


குரூப்-4: 2,899 இடங்களை நிரப்ப தேர்வாணையம் அறிவிப்பு


         குரூப்-4 இரண்டாம் கட்ட கலந்தாய்வு, நாளை துவங்கி, மார்ச், 4ம் தேதி வரை நடைபெறும்; இதில், 2,899 இடங்கள் நிரப்பப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.


கல்வி துறையில் எகிறும் செலவினம்: எதிர்பார்ப்புகளை நிறைவேறுமா?


         மாநிலம் முழுவதும், 55 ஆயிரம் பள்ளிகள், 1.35 கோடி மாணவ, மாணவியர் உள்ளனர். இவர்களுக்கு, கல்வி கற்பிக்கும் பணியில், 5.5 லட்சம் ஆசிரியர்கள் இருக்கின்றனர். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக, ஆண்டுதோறும், பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு, ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது. கடந்த நிதி ஆண்டில், 14,552 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. வரும் பட்ஜெட்டில், இது, 16 ஆயிரம் கோடியை தாண்டலாம்.


தேர்வு நேரத்தில் ஜெனரேட்டர் நிதி கேட்டு அதிகாரிகள் கடிதம்

 
     மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்குகின்றன. மின்வெட்டை சமாளிக்க, தேர்வு மையங்களில், ஜெனரேட்டர் உபயோகத்திற்கான நிதி கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர்கள், அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

கோவை மாநகராட்சி பள்ளிகளுக்கு வரப்போகுது "ஸ்கைப்" வசதி


       கோவை மாநகராட்சியில், ஐந்து மண்டலத்தில் தலா ஒரு பள்ளியை தேர்வு செய்து, "ஸ்கைப் கால்" மற்றும் "டிஜிட்டல் ஸ்டோரி" திட்டத்தை நடைமுறைபடுத்த மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.


கருணை அடிப்படை பணி நியமனம்


        கருணை அடிப்படை பணி நியமனம் - பணிக்காலத்தில் மரணமடைந்த ஆசிரியர் / ஆசிரியரல்லாத வாரிசுதாரர் கள் பணிவாய்ப்பு கோரி விண்ணபித்த நபர்கள் சார்பான விவரம் கோரி உத்தரவு.

 

பிஎப் கணக்குக்கு 8.5% வட்டி நிர்ணயிக்க பரிந்துரை


         நடப்பு ஆண்டுக்கான பி.எப் வட்டி விகிதம் 8.5 சதவீதமாக நிர்ணயிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஏற்று, விரைவில் நிதியமைச்சகம் உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக, தொழிலாளர் நலத் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
 
 

கடைசிநேர படிப்பு - அதிக மதிப்பெண்களைத் தருமா?


          நம்மில் பலருக்கு ஒரு பழக்கம் உண்டு. நெருக்கடியில் இருக்கும்போதுதான், ஒரு காரியத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதே அது. நெருக்கடி என்பது நமது சிறந்த நண்பர் என்று நினைக்கிறோம்.
 

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உறுதி ஏற்பு


       அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சிபிஎஸ்சி தவிர்த்து மற்ற அனைத்து பாடத் திட்டங்களும் தற்போது சமச்சீர் கல்வி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.

தமிழகத்திற்கு அறிவிக்கப் பட்டுள்ள 14 புதிய ரயில்களின் முழு விவரம்.

எக்ஸ்பிரஸ் ரயில்கள் விவரம்:1.பாலக்காடு- ஈரோடு 
2.மதுரை- கச்சிகுடா (ஹைதராபாத்) வாராந்திர எக்ஸ்பிரஸ்
3.சென்னை- ஷாலிமார் (கொல்கத்தா) வாரந்திர ரயில்
4.மன்னார்குடி- திருப்பதி (வாரம் 3 முறை- திருவாரூர், விழுப்புரம், காட்பாடி வழியாக)
5.கோவை- பிகானீர் (ராஜஸ்தான்) ஏசி எக்ஸ்பிரஸ் வாரந்திர ரயில்
6.சென்னை- பெங்களூர் ஏசி டபுள் டெக்கர் தினசரி
7.திருச்சி- திருநெல்வேலி தினசரி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (மதுரை, விருதுநகர் வழியாக)
8.விசாகபட்டினம்- சென்னை வாரந்திர ரயில்
9.சென்னை- பூரி (ஒரிஸ்ஸா) வாரந்திர ரயில்
10.சென்னை- அசன்சோல் (மேற்கு வங்கம்) வாரந்திர ரயில்.

TET Tamil Material

TET - Tamil Study Material (6th Standard)

மாணவ, மாணவியருக்கு புதிய முறையில் அறிவியல் கற்பிப்பு


      அரசு நடுநிலைப் பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர், அறிவியல் பாடத்தை எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும், அறிவியல் மீது, அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையிலும், புதுமையான திட்டத்தை, தொடக்க கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது.


பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம்



      பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.


பி.டி.எஸ்., மாணவர்களுக்கு தனி தேர்வு நடத்த கோரிக்கை

     
        தங்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தனித் தேர்வு நடத்த, அரசு ஆவன செய்ய வேண்டும் என, ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படாத, பி.டி.எஸ்., மாணவர்கள் கோரி உள்ளனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive