1,100 உதவி பேராசிரியர் பணி நியமனத்தை, விரைந்து முடிக்குமாறு, ஆசிரியர் தேர்வாணையத்திற்கு (டி.ஆர்.பி.,), உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.மேலும், உயர் கல்விக்கான பணி நியமனங்களை உடனுக்குடன் முடிப்பதற்கு வசதியாக,..
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு
குழந்தை திருமணம் தடைச்சட்டம் 2006 குறித்த விழிப்புணர்வை பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் உரிய முறையில் பள்ளி தொகுப்பெடுகள் மற்றும் கலண்டர்களில் இடம்பெறச் செய்தும் கலந்தாய்வுகள் நடத்தியும் மேம்படுத்தவும் . குழந்தை திருமணத்திற்கு உடந்தையாக செயல்படுவோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை என்பதை அரசு / அரசு சாரா நிறுவனங்கள் மூலம் விளம்பரப்படுத்தவும் - பள்ளிகல்வி முதன்மை செயலாளர் உத்தரவு
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு
click here & download [Press Release No.358] ( Honble Chief Minister announces D.A rate hike for State Government employees )
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவில், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வானது கடந்த ஜூலை 1-ம் (1.7.2012)தேதி முதல் கணக்கீட்டு ரொக்கமாக வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வினால் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பன்பெறுவர். இதன் மூலம் அரசுக்கு ரூ. 1,443. 52 கோடி செலவாகும்.இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
ஆசிரியர் நியமன விதிமுறை தயார்?ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் நியமன விதிமுறைகள், இறுதி செய்யப்பட்டுள்ளன. இது குறித்த அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. "டி.இ.டி., தேர்வு என்பது, ஒரு தகுதித் தேர்வே; அதில் தேர்ச்சி பெறுபவரை, பணி நியமனம் செய்வதற்கு, உரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, சென்னை, ஐகோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது.
கீ-ஆன்சர் குளறுபடிக்கு நிபுணர் குழுவே பொறுப்பு: டி.ஆர்.பி. திட்டம்
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான கேள்விகள், அதற்கான, கீ-ஆன்சர் ஆகியவற்றை, சம்பந்தபட்ட துறைகளைச் சேர்ந்த, பேராசிரியர் அடங்கிய நிபுணர் குழு தயாரிக்கிறது. இவற்றில் ஏதேனும் குளறுபடி நடந்தால், சம்பந்தபட்ட நிபுணர் குழுவே பொறுப்பாகும் வகையில், விதிமுறையில் திருத்தம் கொண்டு வர டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் - வேலூர் மாவட்டம் - நாளை மற்றும் 12.10.2012 நடைபெறவுள்ள EDUSAT PROGRAMME நடைபெறாது என அறிவிப்பு.
05.10.2012 மற்றும் 12.10.2012 ஆகிய நாட்களில் நடைபெற வேண்டிய நடைபெறாது என்பதையும், அதற்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதையும் அனைத்து வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
140 சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு கல்வித்துறை அனுமதி
மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்துவதில், பல்வேறு தொடர் நெருக்கடிகள் இருந்து வருவதால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை துவங்க, தனியார் பள்ளி நிர்வாகிகள், ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மட்டும், 140 சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, பள்ளிக் கல்வித்துறை, தடையில்லா சான்று வழங்கியுள்ளது.
ஆசிரியர்கள் தேர்வு வாரியம் ஏற்கனவே அறிவித்த முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் தேர்வு பெற்றவர் பட்டியல் ரத்து செய்து, புதிய மதிப்பெண் பட்டியலோடு, தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை, மூன்று வாரத்திற்குள் வெளியிட வேண்டும் என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.புதிய பட்டியல் ஓரிரு நாளில் வெளியிடப்படும் என தெரிகிறது.
Japan Jenesys Programme to 9-11th Std Students
The Japan-East Asia Network of Exchange for Students and Youths Programme (JENESYS).
| ||
Letter Inviting nomination for JENESYS 2012-2013 | ||
Annexure I | ||
Annexure II & III | ||
Supporter's 20Guide-2010. | ||
JENESYS Entry Form 2012-2013. | ||
VISA form. | ||
Sample of Visa Application. | ||
Letter of Consent | ||
Declaration of Parental Control | ||
LTPI details list. | ||
Procedure to obtain passport under Tatkal Scheme. | ||
General Information on JENESYS Programme. | ||
JENESYS Introduction. |
பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு"டாப்- அப்' சலுகை
மொபைல் போன் "பிரீபெய்டு' பயனீட்டாளர்கள் வாங்கும், "டாப்-அப்' கூப்பன்களுக்கான மொத்த விலையில், அதிக பட்சம் 10 சதவீதம் அல்லது மூன்று ரூபாய் மட்டுமே நிர்வாகக் கட்டணமாக பிடித்துக் கொள்ள வேண்டும்' என,
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 அங்கன்வாடி, சத்துணவு பணியாளர் நியமனங்கள் ரத்து செய்து - மதுரை ஐகோர்ட்
தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட 26,000 பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. நியமனத்துக்கு வகை செய்யும் ஏப்ரல் 30 தேதியிட்ட பணி நியமன அரசாணை எண் 72 ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
மதுரை பாப்பையபுரம் முத்து லெட்சுமியின் மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் கிளை நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.மாவட்டம் தோறும் சத்துணவு அமைப்பாளர்கள், உதவியாளர்கள், சமையலர் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கன் வாடி உதவியாளர் மற்றும் அமைப்பாளர்கள் நாடு முழுவதும் நியமிக்கப்பட்டனர். பணியாளர் நியமனம் அரசியல் சட்டத்தின் 14 , 16 வது பிரிவுகளுக்கு விரோதமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.3 கி.மீ உள்ளவர்கள் மட்டுமே பணி நியமனத்திற்கு தகுதி உள்ளவர் என்பது தவறு என்றும், வட்டார அடிப்படையில் தகுதி நிர்ணயிப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது. 3 கி.மீ வசிப்பிட வரம்பால் இட ஒதுக்கீட்டை செயல்படுத்துவது சாத்தியமாகாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.
VILLAGE ADMINISTRATIVE OFFICER (VAO) - Tentative Answer Keys published by TNPSC
Sl.No.
|
Subject Name
|
VILLAGE ADMINISTRATIVE OFFICER
(Date of Examination:30.09.2012)
| |
1
| |
2
| |
3
| |
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 08th October 2012 will receive no attention.
|
ஆசிரியர் தகுதித் தேர்வு: அடுத்த வாரம் நுழைவுச்சீட்டு
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வுக்கான நுழைவுச் சீட்டு அடுத்த வாரம் வெளியிடப்படும்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பித்தவர்களுக்கு அடுத்த வாரம் முதல் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு பெற்று கொள்ளலாம் என்று டி.ஆர்.பி. தெரிவித்துள்ளது.