CLICK HERE TO DOWNLOAD HALL TICKET......
மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ சார்பில் மத்திய ஆசிரியர்
தகுதித் தேர்வு வரும் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் 1
முதல் 8-ஆம் வகுப்பு வரை கற்பிக்க இந்தத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி
பெற்றிருக்க வேண்டும்.
துறை வாரியாக எழுத்துத் தேர்வு நடந்த பிறகு தேவைப்படும் பணிகளுக்கு மட்டும்
நேர்காணல் நடத்தப்படும். கடைநிலை பணிகளுக்கு நேர்காணல் ரத்து செய்ய
வேண்டும் என்று மாநில அரசுகள், பொதுத் தேர்வு ஆணையம், அரசு ஊழியர் தேர்வு
ஆணையம் ஆகியவற்றிற்கு தகவல் அனுப்பி உள்ளோம்.
தமிழக வேளாண் துறையில், தோட்டக்கலை துறை அதிகாரிபதவிக்கான, 183
காலியிடங்களுக்கு, 2013 ஜூலையில் தேர்வு அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு
மார்ச்சில் எழுத்துத் தேர்வு நடந்தது.சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
நேர்முகத் தேர்வு, கடந்த ஜூனில் நடந்தது.இந்நிலையில்,
புள்ளியியல் உதவி இயக்குனர் பணிக்கான, இரண்டாவதுதேர்வுபட்டியலை, தமிழக அரசு
பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது.தமிழக
புள்ளியியல் துறையில், 51 இயக்குனர் பணியிடங்களுக்கு, 2014 பிப்ரவரியில்
தேர்வுநடந்தது.
இணையதளம் மூலம் விண்ணப்பித்து, அலைச்சல் இல்லாமல், சுலபமாக புதிய மின்
இணைப்பு பெறும் திட்டத்தை, முதல்வர் ஜெயலலிதா விரைவில் துவக்கி
வைக்கிறார்.தமிழகத்தில், பிறப்பு, இறப்பு, வருமானம், சாதி சான்றிதழ்
மற்றும் கடை துவக்குவதற்கான அனுமதி போன்றவற்றை பெற, இணையதளம் மூலம்
விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல்,
தங்களுக்கு வேண்டிய ஆவணங்களை, உரிய கட்டணம் மட்டும் செலுத்தி, சுலபமாக
பெறுகின்றனர்.
Bulletin No. | View/Download |
Bulletin No. 7 dated 16th March 2015(contains results of Departmental Examinations, December 2014) | View |
Bulletin No. 6 dated 7th March 2015 - Extraordinary(contains results of Departmental Examinations, December 2014) | View |
மவுலானா ஆசாத் கல்வி உதவித்தொகை பெற 11-ம் வகுப்பு பயிலும் சிறுபான்மையின மாணவியர்கள் விண்ணப்பிக்கலாம்
SEVENTH
PAY COMMISSION RECOMMENDATIONS EXPECTED TO BE EFFECTIVE FROM JANUARY 1,
2016, IF DELAYS, PAY REVISIONS WOULD BE DONE WITH RETROSPECTIVE EFFECT
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற இருந்த சமையலர் பணிக்கான நேர்முகத் தேர்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
HSE SEP / OCT - 2015 SUPPLYMENTARY EXAM
SSLC SEP / OCT - 2015 SUPPLYMENTARY EXAM
காவல் உதவி ஆய்வாளர் பதவிக்கான நேர்காணல் தேர்வில் திருநங்கையை அனுமதிக்க
வேண்டும் என்று, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்துக்கு சென்னை
உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதொடர்பாக சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த
திருநங்கை பிரித்திகா யாஷினி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத்
தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:
வேளாங்கண்ணி
திருவிழாவையொட்டி நாகை மாவட்டத்திற்கு இன்று(08-09-15)உள்ளூர் விடுமுறை
அளித்து நாகை கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏர்வாடிதர்ஹா
சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் இன்று
உள்ளூர் விடுமுறை அளித்து ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகள் திறந்து 3 மாதங்களுக்கு மேலாகியும் 10 ம் வகுப்பு
வழிகாட்டிவராததால், ஆசிரியர்கள் அறிவியல் பாட செய்முறை பயிற்சி அளிக்க
முடியாமல் தவிக்கின்றனர்.பத்தாம் வகுப்பு மாணவர்கள் அறிவியல் பாடத்தில் 75
மதிப்பெண்களுக்கு எழுத்துத்தேர்வும், 25 மதிப்பெண்களுக்கு செய்முறை
தேர்வும் எழுத வேண்டும்.
கல்பாக்கம் சுற்றுப்புற பகுதி அரசு பள்ளிகளில், காலி
பணியிடங்களில்,தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, சென்னை அணுமின் நிலையம்
ஏற்பாடு செய்துள்ளது. கல்பாக்கம் சுற்றுப்புற கிராமங்களில் இயங்கி வரும்
பள்ளிகளில், அறிவியல் உட்பட பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, ஆசிரியர்கள்
இல்லாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வந்தது.
பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான கடிதப் போட்டியை இந்திய அஞ்சல் துறை
அறிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் மெர்வின்
அலெக்சாண்டர் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் இந்திய புள்ளியியல் பணித்தேர்வில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர் வெற்றி பெற்று சாதனை
படைத்துள்ளார்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு துணைத் தேர்வுகளுக்கு, 'தத்கல்' மூலம்
விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு தேர்வுகள் துறை
இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:
வெப்பச் சலனத்தால், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், திருவண்ணாமலை
மாவட்டங்களில், இன்று கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில், மாலை
அல்லது இரவு நேரத்தில், மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
உச்ச நீதிமன்றம் "ஆதார் எண் கட்டாயமல்ல' எனக் கூறி வந்தபோதிலும், ஆதார் எண்
கொடுத்தால்தான் ஊதியம் என சில தமிழக பொறியியல் கல்லூரிகள் கூறியிருப்பது
பேராசிரியர்களிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.நாடு முழுவதும்
மக்களுக்கு ஒரே அடையாள அட்டை வழங்கும் வகையில் ஆதார் அட்டை திட்டத்தை
மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.
ஒருவர் சமூக, பொருளாதார வளர்ச்சி பெறுவதற்கு எழுத்தறிவு அவசியம். உலகில்
இனம், மொழி, வயது, சமூக பாகுபாடின்றி அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும்
என்ற நோக்கத்தோடு ஐ.நா., சார்பில் செப்., 8ம் தேதி உலக எழுத்தறிவு தினம்
கடைபிடிக்கப்படுகிறது.
ஒவ்வொருவரும் இவ்வுலகை காண உதவுவது கண். சில காரணங்களால் (பிறவியிலோ அல்லது
விபத்தின் மூலமாகவோ) நாட்டில் லட்சக்கணக்கானோர் பார்வையின்றி
தவிக்கின்றனர். கண்தானம் செய்வதன் மூலம் அவர்களும் பார்வை பெற முடியும்.
நாம் மறைந்தாலும் கண்கள் மறைவதில்லை. இதனை தானமளிப்பதன் மூலம்
பார்வையற்றவர்களின் கண்ணுக்கு கண்ணாக இருந்து ஒளி ஏற்றலாம். இது பற்றி
விழிப்புணர்வு ஏற்படுத்த செப்., 8ம் தேதி தேசிய கண் தான தினம்
கடைப்பிடிக்கப்படுகிறது.
மத்திய அரசின், தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு
குறைக்கப்பட்டுள்ளது.ஆண்டுதோறும், ஜன., 12ம் தேதி, விவேகானந்தர் பிறந்த
நாளை முன்னிட்டு, தேசிய இளைஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமூக
நலன் மற்றும் தேச வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு செயல்படும், தனி நபர்கள்,
தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
அண்ணா பல்கலையின் தொலைதுாரக் கல்வி மையம் மூலம் எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., -
எம்.எஸ்சி., ஆகிய படிப்புகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், எம்.பி.ஏ.,
சேருவதற்கான, தொலைதுாரக் கல்வி நுழைவுத் தேர்வு, ஆகஸ்ட், 30ல் நடந்தது.
நாட்டிலேயே முதன்முறையாக தம் மாநில ஆசிரியர்களுக்காக ஒரு 'மொபைல் ஆப்' மத்தியப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'எம் ஷிக்ஷா
மித்ரா (கைபேசி கல்வி நண்பன்)' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆப்,
அவர்களுக்கு பணி நிமித்தமான விஷயங்களில் உதவியாக இருக்கும் வகையில்
அமைக்கப்பட்டுள்ளது.
நாடு
முழுவதும் ரூ.500, ரூ.1000 கள்ள நோட்டுகள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக
ரிசர்வ் பாங்கிக்கு புகார்கள் வந்துள்ளன. வங்கி ஏ.டி.எம்.களில் எடுக்கும்
பணத்திலும் கள்ள நோட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
வெவ்வேறு
தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்)
அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலை செய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத
பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த
கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப்
பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர்.
தருமபுரியில் கூடுதல் கல்வி மாவட்டம் உருவாக்கும் திட்டம் நீண்ட காலமாக
கிடப்பில் இருப்பதால் கல்வித்தரத்தை மேம்படுத்துவதில் சிக்கல்
ஏற்பட்டிருப்பதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அடிப்படை ஆய்வக வசதிகள் இல்லாமல்செயல்பட்டு வருவதால் அங்கு படிக்கும் மாணவர்கள் செய்முறைத் தேர்வுக்கு அருகேயுள்ள தனியார் கல்லூரிகளின் தயவை நாட வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள 900 காலி பணியிடங்களில், பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்கும் பொருட்டு பணி மாறுதல் கலந்தாய்வை எதிர்நோக்கியுள்ளனர்.
10th Maths Study Material
Prepared by Mr. S. Nagarajan,
மாணவர்களின் சராசரி எண்ணிக்கை, அரசு தொடக்கப் பள்ளிகளைவிட தனியார் நர்சரி, பிரைமரிப் பள்ளிகளில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.
இந்திய வம்சாவளி சிறுமி லிடியா பாஸ்டின்(12), லண்டனில் நடைபெற்ற 'மென்ஸா அறிவுக்கூர்மை போட்டியில் 162 புள்ளிகள் பெற்று, இயற்பியல் வல்லுனர்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஸ்டீபன் ஹாக்கிங்கை பின்னுக்குதள்ளி முதலிடம்
பெற்றார்.