Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

200க்கு 200 மதிப்பெண்கள் எத்தனை பேர்?


               அதிகளவில், கணித பாடத்தில் 2352 மாணவர்கள் 200/200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 
பாடவாரியாக முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை விபரம்;
கணிதம் - 2352 பேர்
இயற்பியல் - 36 பேர்
வேதியியல் - 1499 பேர்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!


               பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்திலேயே முதலிடத்தை, 1189 மதிப்பெண்கள் பெற்று, ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற 2 மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர். 
 

பிளஸ் 2 தேர்வின் ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 88.1%

 
       பிளஸ் 2 தேர்வெழுதி ஒட்டுமொத்த மாணவர்களில், 88.1% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டைவிட, 1.4% அதிகம்.

பன்னிரெண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்


            மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

எந்த மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரி கிடைக்கும்?


           பிளஸ் 2 தேர்வுகள் முடிந்து, இன்று வெளியாகவுள்ள தேர்வு முடிவுகளை எதிர் நோக்கி மாணவர்கள் காத்திருப்பீர்கள். தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்வதற்கு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கவுன்சிலிங்கான விண்ணப்பங்கள் கடந்த மே 4 முதல் வழங்கப்படுகிறது. விண்ணப்பங்களை வாங்குவதில் மாணவர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்

தமிழகத்தில் இன்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவுகளில் பாட வாரியாக முதலிடம் பெற்றவர்களின் விவரம்:

ஆங்கிலப் பாடத்தில்
1. எஸ்.பி. ரெங்கா 197 மதிப்பெண்
2. கே.எம். பாலாஜி 196 மதிப்பெண்
3 எம்.ஆர். கதீஜா பாய் 196 மதிப்பெண்

இந்த ஆண்டு முதல் ஸ்கேன் செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை அறிமுகம்


              விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த தேவர்களின்  ஸ்கேன்  செய்யப்பட்ட விடைதாள் நகல் இணையதளத்தில் வெளியிடும் முறை இந்த ஆண்டு முதல் அறிமுகம் .
 

அரசு பள்ளி மாணவி 1186 / 1200 பெற்று சாதனை


           சென்னை அண்ணாநகரை சேர்ந்த ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி 1186 / 1200 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இம்மாணவி சாதனை படைக்க பேருதவியாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோருக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பிளஸ் 2 தேர்வில் இரண்டு மாணவர்கள் 1189 பெற்று முதலிடம்

 
          பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் 1189 மாணவர்கள் எடுத்து நாமக்கல் மாணவர்கள் ஜெயசூர்யா, மற்றும் அபினேஷ் முதலிடத்தை பிடித்துள்ளனர். 
 

பள்ளிகளில் தடையற்ற மின்சாரம்: மின்துறை அமைச்சர் அறிவிப்பு


             "பிளஸ் 2 தேர்வு முடிவை, எந்த பிரச்னையும் இன்றி மாணவர்கள் அறிவதற்காக, மாநிலம் முழுவதும், அனைத்துப் பள்ளிகளிலும், இன்று காலை, 9:00 மணி முதல், பிற்பகல், 1:00 மணி வரை, தடையற்ற மின்சாரம் வழங்கப்படும்" என மின்துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவித்தார்.

ஐ.டி.ஐ.,க்களில் பயோ மெட்ரிக் முறை: அமைச்சர் தகவல்


              "ஐ.டி.ஐ.,க்களில், ஆசிரியர், மாணவர் வருகையை முறைப்படுத்த, "பயோ மெட்ரிக்" வருகைப் பதிவு முறை, வரும் கல்வி ஆண்டில் இருந்து அமல்படுத்தப்படும்" என, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செல்லபாண்டியன் அறிவித்தார்.

பிளஸ் 2 தேர்வு முடிவுகளைக் காண...


            பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நாளை காலை, 10:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன. நான்கு அரசு இணையதளங்களில் மட்டுமே, தேர்வு முடிவு வெளியாவதால், சிக்கல் இல்லாமல், தேர்வு முடிவை அறிய முடியுமா என, கேள்வி எழுந்துள்ளது.
 

மாணவர்களுக்கு தடையில்லா மின்சாரம்


            பிளஸ் டூ தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன. இதனையடுத்து, நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சட்டசபையில் கூறினார்.
 

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை காண பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாடு


              நாளை வெளியாக உள்ள ப்ளஸ் 2 தேர்வு முடிவுகளை, தொலைபேசியின் மூலம் தெரிந்துகொள்ள வசதியாக, பி.எஸ்.என்.எல்., சிறப்பு ஏற்பாட்டு செய்துள்ளது.
 

பணி நிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் பேரணி


            பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி' பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் திருச்சியில் கவன ஈர்ப்பு பேரணி நடத்தினர்.தமிழ்நாடு பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், கவன ஈர்ப்பு பேரணி நேற்று திருச்சியில் நடந்தது.பேரணிக்கு மாநில பொதுச் செயலாளர் சேத்துராஜா தலைமை வகித்தார்.
 

மெட்ரிக் பள்ளிகளில் ஏழை குழந்தை சேர்க்கை: விண்ணப்பிக்க நாளை கெடு


               தனியார் மெட்ரிக் பள்ளிகளில் அரசு இட ஓதுக்கீட்டில் சேர, நாளைக்குள் (9ம் தேதி) விண்ணப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
 

பெற்றோருக்கு உதவாத பிள்ளைகள்: ஐகோர்ட் நீதிபதி வருத்தம்


          "பெற்றோருக்கு உதவி செய்ய மனம் வராமல், கோர்ட் படியேறும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது," என, கர்நாடக ஐகோர்ட் நீதிபதி வருத்தம் தெரிவித்தார்.
 

வேலை வாய்ப்பு அலுவலகம் மாற்றுத்திறனாளிகளால் முற்றுகை


             காதுகேளாதோர் மற்றும் வாய்பேச முடியாத, மாற்றுத்திறனாளிகள் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி, மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை, முற்றுகையிட்டனர்.
 

JEE தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழகத்தில் 3,198 பேர் தேர்வு


           ஜெ.இ.இ., முதன்மை தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. தமிழகத்தில் இருந்து, 3,198 மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்கள், இணையதளங்கள் மூலம், இன்று முதல் இரண்டாம் கட்ட தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
 

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க பணி மூப்பு வெளியீடு


               இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெறுவதற்கான பணிமூப்பு பட்டியல் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.
 

IGNOU B.Ed. Prospectus for the January 2014 Admission


APPLICATION FEE RS.1000
COURSE FEE RS.20000
LAST DATE 15.07.2013
ENTRANCE DATE : 18.18.2013

CLICK HERE FOR IGNOU B.Ed. Prospectus for the January 2014 session

நீதிமன்ற தீர்ப்பாணைக்குட்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988-க்கு முந்தைய பணிக்காலத்தை தேர்வு நிலை / சிறப்புநிலை வழங்குவதற்கான அரசாணை நடைமுறைப்படுத்த அரசு விவரம் கோரி தொடக்கக் கல்வி இயக்ககம் உத்தரவு

           ஐந்தாவது ஊதியக் குழுவின் காலமான 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளின் தலைமையாசிரியராக பதவியுயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு 01.06.1988 முந்தைய பணிக்காலத்தை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை/ சிறப்பு நிலை நிர்ணயிக்க விவரம் கோரியுள்ளதாக அறியப்படுகிறது.

நாசா அறிவியல் போட்டி: இந்திய மாணவர்கள் சாதனை


             அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான, நாசா சார்பில் நடத்தப்பட்ட, "கிரேட் மூன்பக்கி ரேஸ்" எனப்படும், அறிவியல் போட்டிகளில், இரு பிரிவுகளில் பங்கேற்ற இந்திய மாணவர்கள், முதல் பரிசை வென்றுள்ளனர். அத்துடன், இந்திய மாணவர் வடிவமைத்த வாகனத்திற்கு, சிறப்பு பரிசும் கிடைத்துள்ளது.

ஓவிய கலையில் விருப்பமா? காத்திருக்கிறது அரசு கவின் கலை கல்லூரி


              நன்றாக ஓவியம் வரையும் திறன் உடைவர்கள் தங்கள் திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள, சென்னை, அரசு கவின் கலை கல்லூரியில் பட்ட படிப்புகள் காத்திருக்கின்றன.

மே 24ல் சென்னை பல்கலை தொலைநிலை கல்வி தேர்வு


             சென்னை பல்கலைக்கழகத்தின், தொலைநிலை கல்வி இளங்கலை தேர்வுகள், இம்மாதம், 24ம் தேதி துவங்குகிறது.

அடுத்த கல்வியாண்டு புத்தகங்கள்: பள்ளி வாரியாக அனுப்பும் பணி தீவிரம்


           ஈரோடு மாவட்டத்தில் அடுத்த கல்வியாண்டில் கல்வி பயிலும், எஸ்.எஸ்.எல்.ஸி., மற்றும் ப்ளஸ் 2 வகுப்பினருக்கு பள்ளி வாரியாக இலவச புத்தங்கள் அனுப்பும் பணி தீவிரமாக நடக்கிறது.

நாளைமுதல் எம்.பி.பி.எஸ். விண்ணப்பம்


                தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க வியாழக்கிழமைமுதல் (மே 9) விண்ணப்பம் விநியோகிக்கப்பட உள்ளது.
 

VIT UNIVERSITY - EEE Department கலந்தாய்வு தேதி வெளியீடு


            வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனத்தில் பி.டெக். படிப்பில் மாணவர்களை சேர்க்க மே 15ம் தேதி முதல்  கலந்தாய்வு துவங்க உள்ளது.
 

2013-14ஆம் ஆண்டுக்கான கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு சேர்கை அறிவிப்பு


விண்ணப்பம் விநியோகம் : மே13-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை
விண்ணப்பக்கட்டணம் : பொது: ரூ.600, எஸ்.சி/எஸ்.டி: ரூ. 300
விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் ஜூன் 3ந்தேதி
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive