கடந்த பொதுத் தேர்வில், மின்வெட்டு பிரச்னை கடுமையாக எதிரொலித்தது.
ஜெனரேட்டர்களை வைத்துக் கொண்டு, தேர்வை நடத்தி கல்வித்துறை சமாளித்த
போதும், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதேபோல், விடைத்தாள்
திருத்தும் மையங்களிலும், மின்வெட்டு பிரச்னை எதிரொலித்தது. இந்த ஆண்டு,
விரைவில் துவங்க உள்ள பொதுத்தேர்விலும், பிரச்னை வெடிக்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்க உதவியாளர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வில் தேர்ச்சி
பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு வரும், 23ம் தேதி
கிருஷ்ணகிரி மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நேர்காணல் நடக்கிறது.
அரசின் போட்டித்தேர்வில் தேர்ச்சி பெற்று, வனத்துறை அதிகாரிகளாக
பொறுப்பேற்கும் இளம் அதிகாரிகளுக்கு, நீலகிரியில் களப்பயிற்சி
அளிக்கப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும், இப்பயிற்சியில்
பங்கேற்பதில்லை என கூறப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்காக சிறந்த சேவை
புரிந்த பெண்களுக்கு, 2012-13ம் ஆண்டுக்கான அவ்வையார் விருது வழங்க
தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அண்மையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 20 ஆயிரம்
பட்டதாரி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களின் பெயர்கள் வேலைவாய்ப்பு அலுவலக
பதிவு மூப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது.
TET சான்றிதழ் இது போன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி
பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில்
விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10
விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த
வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில், அனைத்து மெட்ரிக் பள்ளிகளிலும், 2013-14ம்
கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை, மே மாதம் முதல் மேற்கொள்ள வேண்டும் என,
மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் வசுந்தராதேவி (பொறுப்பு) உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவில் கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் சுமார் 33 ஆயிரம்
சிறுவர்கள் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை
அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
ஆட்டிசம் பாதித்த குழந்தைகள்,
பிறந்து நான்கு வயது வரை சரியாக பேசாது; பார்வை நேரடியாக இருக்காது;
பிடிவாதமாக இருக்கும்; எந்த பொருளை பார்த்தாலும் உடனே கேட்கும்; சில
குழந்தைகளுக்கு, எச்சில் ஒழுகும்; அதிகம் பாதித்த குழந்தைகள், நிமிர்ந்து
நடப்பதற்கே சிரமப்படும்.
"காற்று இருந்தால்தான், காற்றாலை இயங்கும். காற்று இல்லாமலே தன்னால்
காற்றாலையை இயக்கி மின்சாரம் தயாரிக்க முடியும்," என பத்தாம் வகுப்பு வரை
மட்டுமே படித்துள்ள கிராமத்து இளைஞர் கூறுகிறார்.
தமிழகத்தில் அதிகரித்துவிட்ட லஞ்சம் மற்றும் கெடுபிடியால், பாதிக்கும்
மேற்பட்ட தனியார் பள்ளிகள் நடத்த முடியாமல் திணறி வருகின்றனர். இதில்
பலரும் தங்களது பள்ளியை விற்கவும், மூடவும் தயாராகி வருகின்றனர்.
ஓராண்டில்
அதிகப்படியாகப் பேசுபவர்கள் யார் என்று ஒரு கணக்கு எடுத்தால், அதில்
மேடைப் பேச்சாளர்களுக்கு இணையாக முன்னணியில் இருப்பார்கள் ஆசிரியர்கள்.
மேடைப் பேச்சாளர்களுக்குக்கூட சம்பந்தப்பட்ட மேடையுடன் பேச்சு
முடிந்துவிடும். ஆனால், ஆசிரியர்களுக்கு பேச்சே வாழ்க்கையாகிப்
போயிருப்பதால், குரல் வளம் அவர்களுக்கு பெரும் சொத்தாக இருக்கிறது.
ஐ.ஐ.டி., அகில இந்திய மருத்துவக் கழகம் போன்றவற்றிற்கு மட்டும்
நடத்தும் பொது நுழைவுத்தேர்வு நடத்தலாமென்றும், மாநில அளவில்
நுழைவுத்தேர்வு தேவையில்லையென்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வு மதிப்பெண்
அடிப்படையில், தொழிற்படிப்பு சேர்க்கை செய்யலாமென்றும் அகில இந்திய
தொழிற்கல்விக் கழகத்தின் செயலாளர் அனுராதா குப்தா கூறியிருப்பது
வரவேற்கத்தக்கது.
குகூள்
நிறுவனத்தின் யூ டியூப் சேவை தனது அடுத்த பாய்ச்சலுக்காக, கல்வியை தேர்வு
செய்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிறுவங்கள் என ஒவ்வொன்றுக்கும்
தனித்தனி சேனல்கள் யூ டியூப்பில் அறிமுகமாகியுள்ளன.
Deduction in tax will be given for amount upto Rs.1 lakh invested in tax savings under 80C.
50
% deduction on investment upto Rs.50,000 directly in equities for
taxpayers with annual income upto Rs. 10 lacs will be given under Rajiv
Gandhi Equity Savings Scheme.
With the new slab salaried employees will have minimum Rs. 2000 tax relief.
கேரளாவில்
உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசு, அரசு ஊழியர்களுக்கு
அவர்களின் பங்களிப்புடன் கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது. இந்த
திட்டத்திற்கு கேரள அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு
தெரிவித்தனர். மேலும் இத்திட்டத்தை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி
8-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம்
என்றும் எச்சரித்தனர்.
பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், ஆங்கிலத் தேர்வுகள்
விடுமுறையின்றி வருகின்றன. எனவே ஆங்கிலம் இரண்டாம் தாளை, ஒருநாள் இடைவெளி
விட்டு நடத்த வேண்டும் என ஆசிரியர், மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மாணவர்களுடன் உரையாடினார்.
கேள்வி: நதிகள் தேசியமயமாதல் குறித்து?
அப்துல்கலாம்: நாட்டில் உள்ள ஒவ்வொரு ஆறு, குளம், ஏரி உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் இணைக்கும் போது, பல மடங்கு நீர் கடலில் கலந்து வீணாவதை தடுக்க முடியும். நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மகாராஷ்டிரா மாநிலத்தில், புனே அருகே, ஒரு துவக்க பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியரை,ஆசிரியர்களுக்கு டீ போட்டு தருவது, சாப்பாடு பரிமாற வைப்பது, பாத்திரங்களை கழுவுதல் என, அன்றாட வேலைகளை, ஆசிரியர்கள் செய்ய வைக்கின்றனர். இந்த கொடுமைகளை வெளிச்சம் போட்டு காட்டிய, மனசாட்சியுள்ள ஆசிரியை, சக ஆசிரியர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
"மிகப்பெரிய லட்சியம், அறிவைத் தேடித்தேடி பெறுவது, கடும் உழைப்பு, விடா
முயற்சி ஆகியவை மாணவர்களுக்கு வெற்றியை தேடித் தரும்" என, முன்னாள்
ஜனாதிபதி அப்துல்கலாம் பேசினார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படுவதை, உறுதி செய்கிறார், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டேவிட். பிரான்ஸ் நாட்டினர் தமிழ் பேச ஆர்வமாக இருப்பதாகவும், அங்கு 2.50 லட்சம் பேருக்கு நன்றாக தமிழில் பேசவும், எழுதவும் தெரியும், என அவர் கூறியது வியப்பை ஏற்படுத்தியது.
"ஊதியம் வாங்கும் அனைவரும், மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டும். அதை
கண்காணிக்கும் அதிகாரிகள் பொறுப்புடன் நடந்து, தவறு செய்பவர்கள் மீது
நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது" என, ஆய்வுக்கூட்டத்தில், தமிழக
பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குனர் லதா கூறினார்.
மார்ச் 2013, மேல்நிலைத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் சரிபார்ப்புப் பெயர்ப்பட்டியலில் ஆன்-லைன் மூலம் திருத்தங்கள் பதிவு செய்ய இயலாத பள்ளிகள் மற்றும் மாணாக்கரின் புகைப்படத்தினை அப்லோடு செய்ய இயலாத பள்ளிகள், இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்திட, அவ்விவரங்களை குறுந்தகட்டில் பதிந்தோ (அல்லது) dgeonline@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ 17.01.2013-ற்குள் அனுப்பிட சம்பந்தப்பட்ட பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம்அறிவுறுத்தியுள்ளது.