தேசிய அளவிலான தகுதித் தேர்வில் (நெட்) தேர்ச்சி பெறாதவர்களுக்கு
ஆராய்ச்சி உதவித் தொகை வழங்குவதை நிறுத்துவது தொடர்பாக ஆய்வு செய்ய குழு
ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
குறைந்தது எம்.எட். சேர்க்கை: தேதியை நீட்டிக்கும் கல்லூரிகள்
முதுநிலை ஆசிரியர் கல்வியியல் படிப்பில் (எம்.எட்.) சேர்க்கை குறைந்ததைத்
தொடர்ந்து, படிப்புக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்கும் நிலைக்கு
கல்லூரிகள் தள்ளப்பட்டுள்ளன. தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில்
(என்.சி.டி.இ.) புதிய வழிகாட்டுதலின்படி, பி.எட்., எம்.எட். படிப்புகளின்
படிப்புக் காலம் நிகழாண்டு முதல் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
போனஸ் 'ஸ்டிரைக்' அறிவிப்பு '108' ஊழியர் 40 பேர் 'டிஸ்மிஸ்'
தமிழக அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், ஜி.வி.கே., நிறுவனம், அவசர கால,
'108' ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்துகிறது; இதில், 3,500 ஊழியர்கள்
உள்ளனர். தீபாவளிக்கு, 20 சதவீத போனஸ் தர, நிர்வாகம் மறுத்ததால், நவ., 8
முதல், காலவரையற்ற ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். இந்நிலையில்,
ஊழியர்கள், 40 பேருக்கு, ஜி.வி.கே., நிறுவனம், 'டிஸ்மிஸ்' நோட்டீஸ்
அளித்துள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு 'ஷூ': நடிகர் விஷால் அறிவிப்பு
ஒரு, 'ஷூ' வாங்கினால், 1,000 'ஷூ'க்களை, குழந்தைகளுக்கு தானம் செய்ய முடிவு
எடுத்திருப்பதாக, நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். சென்னை, புதுப்பேட்டை,
புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில், விஷால் நற்பணி மன்றம் சார்பில்,
நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது. நடிகர் விஷால்,
இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாம் சார்பில் பூங்கோதை உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.
தீபாவளி முதல் டெலிபோன் அழைப்புகளை செல்போனிலும் பெறலாம்
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய வசதியை தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம்
செய்ய உள்ளது. அதன்படி வாடிக்கையாளர் ஒருவர் பிஎஸ்என்எல் நிறுவனத்தின்
டெலிபோன், செல்போன் இணைப்புகளை வைத்திருக்க வேண்டும். அவர்கள், இரவு
நேரத்தில் வீடு அல்லது அலுவலகத்துக்கு வரும் டெலிபோன் அழைப்புகளை
செல்போனுக்கு வரும்படி மாற்றிக் கொள்ளலாம்.
உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை
உயர்கல்வியில்
மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று
சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.
பள்ளிகளில் மாணவர்களை கொண்டு மின் சாதனங்களை இயக்கக் கூடாது: கல்வித்துறை உத்தரவு
தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்க பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள்,
கழிவுநீர் தொட்டிகள் மற்றும் நீர்த்தேக்க தொட்டிகள் மூடப்பட்ட நிலையில்
உள்ளதா என உறுதி செய்யவேண்டும்.
Seventh Pay Commission Likely To Allow Work From Home For Disabled, Women Employees
New Delhi: Seventh pay commission is likely to ask the government to consider allowing disabled and women central government employees to work from home.The commission may recommend government to ask Information and Technology department, whether it is possible to have systems in placefor monitoring and supervising workbeing done remotely by disabled and women central government employees .“Allowing disabled and women central government employees a choice in where and how they work can increase employee loyalty and job satisfaction, and the government needs to apply it for a big win to boost their confidence, which will also give the productivity,” said a pay panel official.The studies revealed those disabledand women employees who have the option of working outside of the office also reported somewhat lower levels of stress and exhaustion. And studies have suggested that employees tend to get higher performance evaluations.
மாணவர்களுக்கு நல் ஒழுக்கத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு புத்தகங்கள்; ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் ஏற்பாடு
பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு பாடத்துடன் நல் ஒழுக்கத்தை கற்பிக்க
ஆசிரியர்களுக்கு இந்தியாவில் முதல் முதலாக புத்தகம் தமிழ்நாடு முழுவதும்
ஆசிரியர் பயிற்சி இயக்குனரகம் சார்பில் அச்சடிக்கப்பட்டு உள்ளன.
ONLINE- ல் வாக்காளர் பட்டியலில் தங்களது வாக்காளர் அடையாள அட்டையின் விவரங்களை சரி பார்த்து கொள்ள வழிமுறைகள்
- இணைய தள முகவரிக்கு செல்லவும்.
உலகிலேயே முதன் முறையாக ரூ.999-க்கு ஸ்மார்ட்போன்: இந்தியாவில் அறிமுகம்
உலகிலேயே விலை குறைந்த ஸ்மார்ட்போன் வருகிற டிசம்பர் மாதம் இந்தியாவில்
அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.999-க்கு விற்பனை
செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போனை அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்
நிறுவனமும், கனடாவின் பிரபல மொபைல் மற்றும் டேப்லட் நிறுவனமான டேட்டா
வைண்ட் நிறுவனமும் இணைந்து வெளியிட உள்ளது.
Election 2016 - Teachers Detail Form
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக, ஆசிரியர் விவரம் கோரும் படிவம்....
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு வினாத்தாள் தயாரிப்பில் மாற்றம்
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2
பொதுத்தேர்வுகள், மார்ச்சில் நடைபெற உள்ளன. அதற்கான, வினாத்தாள்
தயாரிக்கும் பணியை, தேர்வுத் துறை துவங்கியுள்ளது. இதற்காக, ஐந்துக்கும்
மேற்பட்ட ரகசிய குழு அமைத்து, ஒவ்வொரு பாடத்துக்கும், பகுதிவாரியாக
கேள்விகள் தயாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வினாத்தாள்கள் கடினமாக
இருக்கும்படி அமைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை: முதல்வர் தகவல்
2500 அரசுப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் என்.ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
குரூப்-2 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொகுதி - 2-இல் (குரூப் 2)
உள்ளடங்கிய பதவிகளை நிரப்பிட வேண்டி, தகுதியுடைய பட்டதாரிகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள்தற்செயல் விடுப்பு எடுக்க வற்புறுத்தல்
சிவகங்கை: ஆசிரியர் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்களுக்கு பிறபணி
விடுப்பு இன்றி, தற்செயல் விடுப்பு தான் வழங்க முடியும் என தலைமை
ஆசிரியர்கள் கூறுவதாக புகார் எழுந்துள்ளது.அரசு, உதவி பெறும் பள்ளி
பட்டதாரி, முதுநிலை பட்டதாரி , இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் கோடை
விடுமுறையில் மாவட்டம் விட்டு மாவட்டம், மாவட்டத்திற்குள் இடமாறுதல்
கலந்தாய்வு நடக்கும்.
குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனில் ஆசிரியர்கள் அதிக அக்கறை கொள்ள வேண்டும்-பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.
குறைவாக மதிப்பெண் பெறும் மாணவர்கள் நலனின்
ஆசிரியர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார் பள்ளிக் கல்வித்
துறை இயக்குநர் ச. கண்ணப்பன்.
அனைத்து நாள்களிலும் பள்ளிகளில் ஆதார் சிறப்பு முகாம்கள்: பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவு
பள்ளிகளில்
விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் மாணவர்களுக்கு ஆதார் அட்டை
பதிவுக்கான சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம்
உத்தரவிட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவு இன்று வெளியீடு
பத்தாம்
வகுப்பு துணைத் தேர்வு முடிவு புதன்கிழமை (அக். 28) வெளியிடப்படுகிறது.
இதை தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேசிய திறனாய்வு தேர்வு இன்று 'ஹால் டிக்கெட்'
மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வு தேர்வு, நவ., 8ல் நடக்கிறது. இதற்கான, 'ஹால் டிக்கெட்' இன்று வெளியாகிறது.
கணினி தகுதித்தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு
தமிழக
தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் நடத்தும், கணினி தகுதித்தேர்வுக்கு, நவ.,
16ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது.