Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்வு நாளில் பாட ஆசிரியருக்கு விடுப்பு: முறைகேடு நடக்காமல் இருக்க உஷார்

         'இன்று துவங்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் முறைகேடுகளை தடுக்க, தேர்வு நாளில் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியர்களை, தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டாம்' என, கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.
 

கணினி அறிவியலில் அதிக மதிப்பெண் எளிது: மாணவர்கள் மகிழ்ச்சி

   "பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில், வினாக்கள் பெரும்பாலும் எளிமையாக அமைந்ததால், அதிக மதிப்பெண் பெற முடியும்," என மாணவர்கள் தெரிவித்தனர்.

அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை தேர்வு - பிப்ரவரி 2014 கட்டணம் செலுத்த அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

TET Case update News (25.03.14)


            சென்னை உயர்நீதிமன்றத்தில் TET வழக்கு விசராணை (25.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. விசாரணை 26.03.14 ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் இறுதி விடக்குறிப்பு தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.

            சென்னை உயர்நீதிமன்றத்தில் முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் இறுதி விடக்குறிப்பு தவறு என தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி.முதுகலை தமிழாசிரியர் C வகை வினாத்தாளில் வினா எண்கள் 45, 70 and 104 க்கு டிஆர்பி யின் இறுதி விடக்குறிப்பு தவறு என கே ஆர்விஜயா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி நாகமுத்து அவற்றுக்கு Trb வெளியிட்ட இறுதி விடக்குறிப்பு (final key ) சரியே எனக் கூறி அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஓய்வூதிய பலன்கள் பெற்று தருவதில் கால தாமதத்தை ஏற்படுத்தும் பணியாளர் மீது நடவடிக்கை -பள்ளிகல்வித்துறை எச்சரிக்கை.


           தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குனர் பணி அவர்கள் ,ஓய்வு வருங்கால வைப்புநிதி இறுதி பணம் பெறுதல், ஓய்வூதியம் மற்றும் இறுதி பணம் பெறுவதற்கான விண்ணப்பம் சென்னை மாநில கணக்காயருக்கு தாமதமின்றி அனுப்புதல் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது .

TNPSC:துறை தேர்வுகள் அறிவிப்பு


              2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

TRB | TET | TNPSC - Free Online Quizes Available Now.

           TRB | TET | TNPSC தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் தினந்தோறும் பல்வேறு இலவச ஆன்லைன் வினா விடைகள் Quiz Format -ல் www.TrbTnpsc.com வலைதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து பார்வையிடுங்கள்! பயன் பெறுங்கள்!

வெயில் தாக்கம்: 1/2மணி நேரம் முன்னதாக தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு

           8 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வு இன்று முடிந்தது. இதைத் தொடர்ந்து எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வு நாளை (26–ந் தேதி) தொடங்கி ஏப்ரல் 9–ந் தேதி வரை நடைபெறுகிறது.

கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

          பிளஸ்–2 பரீட்சை கடந்த 3–ந்தேதி முதல் தொடங்கி நடந்து வந்தது. இன்று பிளஸ்–2 தேர்வு முடிந்தது. இன்று கடைசி பரீட்சை எழுதிவிட்டு மாணவ–மாணவிகள் உற்சாகத்துடன் வெளியே வந்தனர்.

எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு: காப்பி அடித்தால் 5 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது

                எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வு நாளை தொடங்க உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையை சேர்ந்த 10 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். குழப்பங்கள் ஏதும் இல்லாமல் தேர்வை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகிறது. பிளஸ் 2 தேர்வுகள் இன்றுடன் முடிகின்றன. இதைத் தொடர்ந்து, 10ம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடங்குகின்றன. ஏப்ரல் 9ம் தேதி தேர்வு முடியும். இந்த ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6 ஆயிரம் பள்ளிகள் மூலம் சுமார் 10 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். 3 ஆயிரம் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் முறையாக 10ம் வகுப்பு தேர்வுகள் காலை 9.15 மணிக்கு தொடங்கும். முதல் தேர்வாக நாளை தமிழ் முதல்தாள் தேர்வு நடைபெறுகிறது. 

TNPSC-GROUP I: குரூப்-1 தேர்வு முடிவு வெளியீடு


           டிஎன்பிஎஸ்சியின் குரூப் 1 பிரதான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. 2013 அக்டோபர் 25 முதல் 27-ஆம் தேதி வரை குரூப் 1 பிரதான தேர்வு நடைபெற்றது. 

44 நிகர்நிலை பல்கலைகள் அந்தஸ்து தப்புமா?

            நாடு முழுவதும் 44 நிகர்நிலை பல்கலைகள் தொடர்ந்து செயல்படுவதற்கு அனுமதிப்பது தொடர்பான கூட்டம், டில்லியில் உள்ள பல்கலை மானிய குழுவின் (யு.ஜி.சி.,) தலைமை அலுவலகத்தில், இன்று முதல், மூன்று நாட்கள் நடக்கிறது.கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட, மாணவர்களுக்கான கட்டமைப்பு வசதிகள், சிறந்த பாடத்திட்டம் மற்றும் ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பது, யு.ஜி.சி.,யின் விதி. இந்த விதிகளை பின்பற்றி, செயல்படும் கல்வி நிறுவனங்களுக்கு, "நாக்" குழுவின் அங்கீகாரம் அளிக்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட் அளித்த உத்தரவின்படி, நாடு முழுவதும் நிகர்நிலை கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு பாடத் திட்டம் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டது.இதில் 44 பல்கலைகளின் தரம், மிகவும் மோசமாக இருப்பது கண்டறியப்பட்டது.

வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள்.

          வாக்காளர் தங்கள் விவரங்களை தெரிந்து கொள்ள நவீன வசதிகள் செய்துதரப்பட்டு உள்ள தாக திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.நடராசன் தெரிவித்துள் ளார்.
 

செல்போனில் பணப்பரிமாற்றம்: சென்னையில் அறிமுகம்.

          வோடஃபோன் மற்றும் ஐசிஐசிஐ வங்கி இணைந்து, எம்-பேசா என்ற பணப்பரிமாற்ற சேவையை சென்னையி்ல அறிமுகப்படுத்தியுள்ளன. இத்திட்டத்தின் கீழ் செல்ஃபோனில் ஒரு கணக்கைத் தொடங்கி அதில் பணத்தை இருப்பு வைத்து அதிலிருந்து பல்வேறு பணப்பரிமாற்றங்களை செய்யலாம் என வோடஃபோன் நிறுவனம் தெரிவித்துள்ளது.இதைக் கொண்டு செல்ஃபோன் ரீசார்ஜ், டிடிஎச் ரீசார்ஜ் மற்றும் மின்சாரம், தொலைபேசி, வீட்டு வரி போன்ற பல சேவைகளுக்கான கட்டணங்களை இருந்த இடத்திலிருந்தே செலுத்தலாம்.

சேற்றில் சிக்கி மாணவி மரணம்; தலைமையாசிரியர் உட்பட மூவர் “சஸ்பென்ட்”

              தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த ஜம்மனஅள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமை படை சார்பில், 78 மாணவ, மாணவிகளை களப்பணிக்காக பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதிக்கு சென்றனர்.
 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: காலை 8.15 மணிக்குள் மையத்துக்குள் செல்ல வேண்டும்

            பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது; அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படை குழுககளும் அமைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், கடந்த சில நாட்களாக ஏற்படும் மின்வெட்டால், தேர்வுக்கு தயாராக முடியாமல், மாணவ - மாணவியர் அவதிப்படுகின்றனர். பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்றுடன் நிறைவடைகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை (26) துவங்குகிறது. 
 

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு

         அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசு தகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு: 11 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.


         11 லட்சம் மாணவ–மாணவிகள் எழுதும் எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்கி ஏப்ரல் 9–ந்தேதி வரை நடைபெற உள்ளது.இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்குனர் கு.தேவராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஆதார் அடையாள அட்டை

        அரசு சேவைகளைப் பெற ஆதார் அடையாள அட்டையை கட்டாயமாக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தால் அதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட பணிகள் தகவல் தொகுப்பு மையத்திடம் ஒப்படைப்பு

             அரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட விவரங்களைப் பெற இனி அரசுதகவல் தொகுப்பு மையத்தையே தொடர்பு கொள்ள வேண்டும் என மாநில முதன்மை கணக்காயர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

Income Tax - விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

           வருமான வரி பிடித்தம் செய்யாமல் அல்லது வரியில் ஒரு பகுதி பிடிக்கப்படாமல் விடுபட்டுப் போன தொகையைச் செலுத்துவது எப்படி?

7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது


7 ஆவது ஊதிய குழுவிற்காக மத்திய நிதி அமைச்சகம் புதிய இணையதளம் ஒன்றை தொடங்கி உள்ளது

http://finmin.nic.in/7cpc/index.asp

Resolution on Terms of Reference of 7th CPC (2 MB)

http://finmin.nic.in/7cpc/7cpcGazetteNotification.pdf

சென்னை பல்கலையின் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று வெளியிடப்படுகிறது.


            சென்னை பல்கலையின் முதுகலை பட்டம், நூலகவியல் தேர்வுகளுக்கான முடிவுகள்,இன்று இரவு வெளியிடப்படுகிறது.இதுகுறிதது சென்னை பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 

TET | TRB Court Case Detail

            25.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.

மாற்றுத் திறனாளிகள் தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.

   தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகள் வரும் நிதியாண்டிலும்(2014-15) தொடர்ந்து பலன் அடைய தங்களது இலவச பஸ் பயணஅட்டையை புதுப்பித்துக் கொள்ளலாம்.இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட மறுவாழ்வு நல அலுவலர்டி.சீனிவாசன் கூறியதாவது:

TNPSC முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று சென்னையில் துவங்கியது.

         TNPSC: 5,855 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் - 4 தேர்வில்,தேர்வு பெற்றவர்களுக்கு, முதல்கட்டசான்றிதழ் சரிபார்ப்பு, நேற்று,சென்னையில் துவங்கியது.

முறைகேடுகளுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளி அங்கீகாரம் ரத்து

           நாளை தொடங்க உள்ள பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழகம் புதுச்சேரியில் உள்ள 11,552 பள்ளிகளில் படிக்கும் 10 லட்சத்து 38 ஆயிரத்து 876 மாணவ மாணவியர் எழுதுகின்றனர். தேர்வில் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாக இருக்கும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
 

விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தடை

           பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் மையங்களில் வாயில் கூட்டம் நடத்த கூடாது என்று தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. மொழித்தாள் மற்றும் முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் 20ம் தேதியுடன் முடிந்தன. இதையடுத்து 21ம் தேதி முதல் 66 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.
இந்த பணியில் தமிழகம் முழுவதும் சுமார் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். தொடக்கத்தில் முதன்மை தேர்வாளர்கள், சிறப்பு அதிகாரிகள் விடைத்தாள் திருத்தினர். இன்று துணை தேர்வாளர்கள் திருத்துகின்றனர். ஏப்ரல் 1ம் தேதி முதல் பாட ஆசிரியர்கள் திருத்துகின்றனர்.

தமிழக பள்ளிகளில் மதிப்பீடு முறை பற்றிய கட்டுரை; புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்ளலாமா?

          கடந்த 2009ல், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 'கன்டினுவஸ் அண்ட் காம்ப்ரிஹென்சிவ் எவால்யுவேஷன்' (சி.சி.இ.,) எனப்படும் மதிப்பீட்டு முறை அமலுக்கு வந்தது. அப்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் கபில் சிபல், இந்த மதிப்பீட்டு முறை, முந்தைய முறையை விட சிறந்தது என்ற, காரணத்தால் இதனை வலியுறுத்தினார்.
 

நாளை 10ம் வகுப்பு தேர்வு: 7.31 லட்சம் பேருக்கு கட்டணம் ரத்து

           ''நாளை, 10ம் வகுப்புத் தேர்வு துவங்குகிறது. தமிழ் வழியில் படித்து, பத்தாம் வகுப்பு தேர்வை எழுத உள்ள, 7.31 லட்சம் மாணவ, மாணவியருக்கு, தேர்வு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்து உள்ளார்.

ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்

அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்

பொது அறிவு - தெரிந்து கொள்வோம் - நீர்


#நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜனின் எடை இயைபு விகிதம் - 1:8

# நீரில் ஹைட்ரஜன் ஆக்சிஜன் கன அளவு இயைபு விகிதம் - 2:1

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive