Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசியா - இ-பல்கலை பட்டம் செல்லாது: யு.ஜி.சி., அறிவிப்பு


        'மலேசியாவின், ஆசியா - இ-பல்கலையின், தொலைதூரக் கல்வி மூலம் பெறப்படும் பட்டங்கள், மத்திய, மாநில அரசு பணிகளுக்கு செல்லாது' என, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

          "தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு புதுதிலிலியில் செயல்பட்டு வரும் விமானப்படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விருப்பமானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

PG Tamil Court Case Detail

        சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் மீண்டும் நாளை (12.03.14) முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் விசாரணைக்கு வருகின்றன

12th Public Exam | Expected Key Answers



March - 2014 Exam | Key Answers
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
  • Physics - March 2014 | Public Exam | Expected Key Answers - English Medium

இயக்குனர் எச்சரிக்கை.

              மேல்நிலை / இடைநிலைக் கல்வி பொதுத் தேர்வுகள் - மார்ச் / ஏப்ரல் 2014 - மைய மதிப்பீட்டுப் பணி - அரசு நிதியுதவி / சுயநிதிப் பள்ளிகள் பணிபுரியும் ஆசிரியர்களை விடைத்தாள் திருத்தம் பணியில் முழுமையாக ஈடுபடுத்தவும், இல்லையெனில் பள்ளிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என இயக்குனர் எச்சரிக்கை.

இயக்குனர் அறிவிப்பு

             தொடக்கக் கல்வி - பாராளுமன்ற தேர்தல் முன்னிட்டு பள்ளி வேலை நாட்களில் மாற்றம் I 23.4.14 முதல் 25.4.14 வரை விடுமுறை I 3ம் பருவத் தேர்வு ஏப்.,21ம் தேதி தொடங்கி ஏப்.,29வரை நடக்கிறது I மே1 முதல் கோடை விடுமுறை I தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

முதுகலை ஆசிரியர் தேர்வு , CHALLENGING KEY ANSWERS சார்பான வழக்குகள்அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஏப்., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு

மாநிலம் முழுவதும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத் தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

ஆசிரியர் நியமன தேர்வு மதிப்பெண் தவறான தகவல் அளித்தவர் மனு தள்ளுபடி


          முதுகலை ஆசிரியர் நியமன தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற தவறான தகவல் அளித்தவர் மனுவை மதுரை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது


எட்டாம் வகுப்பு,பொதுத்தேர்வை ஏ ப் ., 23, 24 தேர்வுகளை தேர்தலுக்கு பின் நடத்த முடிவு


  மாநிலம் முழுவதும், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, ஏப்., 23, 24ல் நடத்த வேண்டிய பொதுத்தேர்வை, தேர்தலுக்குப் பின் நடத்த, தொடக்கக் கல்வித் துறை, முடிவு செய்துள்ளது.
 

'சென்டம்' அதிகரிக்கும்: 'ஈசி'யான தேர்வால், மாணவர்கள் 'குஷி

 
          பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று நடந்த, இயற்பியல் தேர்வு, மிகவும் எளிதாக இருந்ததால், இந்த பாடத்தில், 'சென்டம்' எண்ணிக்கை அதிகரிக்கும் என, இயற்பியல் பாட ஆசிரியர்கள், நம்பிக்கை தெரிவித்தனர். எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக அமைந்ததால், மாணவர்களும், 'குஷி' அடைந்துள்ளனர். மொழிப்பாட தேர்வுகளுக்குப் பின், முக்கிய தேர்வுகள், நேற்று துவங்கின. நேற்று, இயற்பியல் மற்றும் பொருளியல் தேர்வுகள் நடந்தன. இயற்பியல் தேர்வு எப்படி இருக்குமோ என, மாணவர்கள், பதற்றத்தில் இருந்தனர். ஆனால், எதிர்பார்த்ததை விட, தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். ஒரு மதிப்பெண், ஐந்து மதிப்பெண், 10 மதிப்பெண் என, அனைத்துப் பகுதிகளுமே, எளிதாக இருந்ததாக, தேர்வு எழுதிய மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

125 மதிப்பென்களுக்கு வினாக்கள்


பள்ளிக்கல்வி இயக்ககம் வெளியிட்ட மாதிரி வினா-விடை புத்தகத்திலிருந்து 125 மதிப்பென்களுக்கு வினாக்கள்: இந்த ஆண்டு தேர்ச்சி அதிகரிக்கும்

PG Tamil Court Case Detail

            சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் இன்றைய (11.03.14) விசாரணைப் பட்டியலில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள்

தொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் தேர்வு தொடக்கம், மே 1 முதல் கோடை விடுமுறை


           மக்களவைத் தேர்தலையொட்டி தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமாக இந்தப் பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் கடைசி வாரத்தில் நடைபெறும். ஆனால், மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் ஏப்ரல் 24 -ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுவதால், தேர்வு தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு தனித்தேர்வர்கள்: இன்று முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்


          பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) முதல், அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி 21ல் தொடக்கம்: மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும்?


          பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி வரும் 21ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிளஸ் 2 தேர்வுகள் கடந்த 3ம் தேதி தொடங்கியது. வரும் 25ம் தேதி முடிகிறது. 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ மாணவியர் எழுதுகின்றனர்.
 

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள்: இன்று நடக்க இருந்த நேர்முக தேர்வு ஒத்திவைப்பு

 
          சென்னை பல்கலையில், உதவி பேராசிரியர்களுக்கான நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில், பல்வேறு துறைகளில் காலியாக உள்ள, உதவி பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு, இன்று நடப்பதாக இருந்தது.
 

பிளஸ் 2 இயற்பியல் தேர்வு: ஏராளமானோர் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்பு

 
         பிளஸ் 2 தேர்வில் இயற்பியல் பாடத்தின் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்ததால் ஏராளமான மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள்: கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க தடை

 
           தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்று அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால், தமிழக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. 
 

12th Latest Study Material

Physics Study Material

Physics 1,2,5 Mark Lesson wise guide | Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium

10th Revision Test Question & Key Answers


10th Revision Test Question & Key Answers ( Krishnagiri Dt) - Click Here

Thanks to GHS GUNDIYALNATHAM


பி.டி.எப். கோப்பு உருவாக்கிட, PDF பக்கங்களை Scrap செய்து சேமித்திட ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்


          ஆன்ட்ராய்ட் போன்களில் பி.டி.எப் கோப்புகளை உருவாக்க, அவற்றை எடிட் செய்திட, குறிப்புகள் எழுத, PDF Page -ல் உள்ள குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியே பிரித்தெடுத்து புதிய கோப்பாக மாற்றிட, குறிப்பிட்ட பகுதியை மட்டும் கட்செய்து வேண்டிய இடத்தில் ஒட்டிட, இப்படி பல்வேறு வழிகளின் பயன்படும் ஓர் அற்புதமான PDF Slicer, Maker, Scraper அப்ளிகேஷன் உள்ளது.

கற்றவற்றைக் காட்சிப்படுத்துங்கள்!

           நல்ல மதிப்பெண்ணுக்கு கற்றவற்றைக் காட்சிப்படுத்துங்கள்! ஆயிரம் வார்த்தைகளால் சொல்ல முடியாததை ஒரு படம் சொல்லிவிடும்!!

அமெரிக்காவில் ஆங்கில ஸ்பெல்லிங் போட்டியில் அசத்திய இந்திய மாணவன்

          அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்தில் நடந்த, ஆங்கில வார்த்தைகளை எழுத்துக்கூட்டி உச்சரிக்கும் (ஸ்பெல்லிங்) போட்டியில்இந்திய வம்சாவளி மாணவர் குஷ் ஷர்மா (13) வெற்றி பெற்றார். 

12ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு அஞ்சல் துறையில் பணி

இந்திய அஞ்சல் துறை Postal Assistant/Sorting Assistant பணிகளுக்கு விண்ணபங்களை வரவேற்கிறது. 

கல்வித் தகுதி: 12ஆம் வகுப்பு

வயதுத் தகுதி: 18-27 வயது வரை எஸ்.சி., எஸ்.டி.,ஓ.பி.சி பிரிவினருக்கு மத்திய அரசின் வயது வரம்புச் சலுகையும் உண்டு.

சம்பளம்: ரூ. 5200 - 20200

காலியிடங்கள்: 8243

         விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 400. எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு கட்டண விலக்கு உண்டு.

எம்.எஸ்.சி படித்தவர்களுக்கு மத்திய அரசுப் பணி


          இந்திய ஜியாலஜிகல் சர்வே துறையில் பணியாற்ற மத்திய அரசின் தேர்வாணையம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

தமிழ் அறிஞர்கள் அறிவோம்: கவிக்கோ அப்துல் ரகுமான்


மரபுக்கவிதையின் வேர் பார்த்தவர்
புதுக்கவிதையின் மலர் பார்த்தவர்
என்று பாராட்டப்பெறும் சிறப்புக்குரியவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.
      'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கியவர். பால்வீதி என்ற கவிதைத் தொகுதி மூலம் தம்மை ஒரு சோதனைப் படைப்பாளியாக இனங்காட்டிக் கொண்டார். அத்தொகுதி வெளிவந்த போது கவிதையை நேரடியாகத் தராமல் உவமைகள், உருவகங்கள், படிமங்கள், குறியீடுகள் ஆகியவற்றின் வழி வெளியீட்டு முறையை அமைத்துக் கொண்டார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

கல்வி தகவல் மேலாண்மை முறை: தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

 
        தமிழ்நாடு தொடக்கக் கல்வி துறையில் கல்வி தகவல் மேலாண்மை முறை என்ற பெயரில் தனி நபர் தகவல் தொகுப்பு முறைக்கு ஆசிரியர்களின் பணி விவரங்கள் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

One Day Strike -Regarding | இயக்குனரின் செயல்முறை

            7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முறையே 26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டதற்கான சான்று பெறுதல் சார்பான தொடக்கக்கல்வி இயகுனரின் செயல்முறை

கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

           தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இளங்கலை / முதுகலை / பட்டயப்படிப்புகள் முடித்த கணினி தெரிந்தவர்களின் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அனைத்து ஏழைப் பெண்களும் கல்வியறிவு பெற இந்தியாவிற்கு 56 ஆண்டுகள் தேவை - அறிக்கை

 
           இந்தியாவில் அதிகளவிலான ஏழை இளம் பெண்களுக்கு, கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே, இந்த வகை இளம் பெண்களின் கல்வியில் ஒரு வளர்ச்சி நிலையை எட்ட, குறைந்தபட்சம் இன்னும் 56 ஆண்டுகள் தேவைப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் ஏப்ரல் 15ம் தேதி தொடங்கும்

 
          பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிப்பிற்கான, 2014 அகடமிக் ஆண்டின் வகுப்புகளை, ஏப்ரல் 1ம் தேதிக்கு பதிலாக, ஏப்ரல் 15ம் தேதியிலிருந்து தொடங்குமாறு தனது பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது.

பிளஸ் 2 விடைத்தாள் திருத்த அடிப்படை பணிகள் இன்று துவக்கம்.

     கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள் திருத்துவதற்கான அடிப்படை பணிகள் இன்று முதல் துவங்குகின்றன.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தில் மாற்றமா?; ஆசிரியர்களும், மாணவர்களும் குழப்பம்.


             பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நேர மாற்றம் குறித்து தெளிவான அறிவிப்புஇல்லாததால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர். தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு நடந்து வருகிறது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive