"மாணவர்கள் தங்கள் தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும்,"
என இஸ்ரோ இந்திய விமானவியல் ஆராய்ச்சி நிறுவன (மிஷன்) இயக்குனர்
சுந்தரமூர்த்தி தெரிவித்தார்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர்: அமெரிக்க தூதரக அதிகாரி
"அமெரிக்காவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் தற்போது
படித்து வருகின்றனர்" என சென்னை அமெரிக்க தூதரகத்தின் அதிகாரி ஜெனிபர் மெக்
இன்டையர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே துப்பாக்கிக் கலாச்சாரம்; தேவை விழிப்புணர்வு
சென்னையில் மாணவர்கள் துப்பாக்கியுடன் மோதிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
10ம் வகுப்பு விடைத்தாள் மாயமான விவகாரம்: மறுதேர்வு கிடையாது
செஞ்சி அருகே, 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல்தாள் விடைத்தாள்கள் மாயமான
விவகாரத்தில், அஞ்சலக புறநிலை ஊழியர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.
மாயமான விடைத் தாள்களுக்கு மறுதேர்வு கிடையாது.
பிளஸ் 2 இயற்பியல் தேர்வு முறைகேடு: தனியார் பள்ளி நிர்வாகம் மீது வழக்கு
பிளஸ் 2, இயற்பியல் பொதுத் தேர்வின் போது, முறைகேட்டில் ஈடுபட்ட,
நாமக்கல் தனியார் பள்ளி நிர்வாகத்தினர் மீது, மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு
போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அரியலூர் பள்ளி குழந்தைகளுக்கு லட்டு, அல்வா: தமிழக அரசு அறிவிப்பு
"ஊட்டச்சத்து பற்றாக்குறை அதிகமாக உள்ள அரியலூரில், பள்ளி
குழந்தைகளுக்கு, லட்டு, அல்வா, கார வகைகள் வழங்கப்படும்&' என, தமிழக
அரசு அறிவித்துள்ளது.
"டான்செட்" நுழைவு தேர்வு: தகவல் அறிய மையங்கள் அமைப்பு
முதுகலை தொழில்நுட்ப படிப்புகளுக்கு, தமிழக அரசின் பொது நுழைவுத் தேர்வு
(டான்செட்), வரும் 6, 7ம் தேதிகளில் நடக்கிறது. தேர்வு பற்றி தகவல்களை, 15
மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் மாணவர்கள் பெறலாம் என,
டான்செட் செயலர் கூறியுள்ளார்.
கல்லூரி கோடை விடுமுறை நாட்கள் குறைய வாய்ப்பு
கல்லூரிகளில், குறைந்த அளவு வேலை நாட்கள் உள்ளதால், சிறப்பு வகுப்புகள்
மூலம், வேலை நாட்களை ஈடு செய்ய, ஆசிரியர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால்,
கோடை விடுமுறை காலம் குறையும் என, கூறப்படுகிறது.
பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களுக்கும் லேப்டாப்: ஐகோர்ட் உத்தரவு
பல்கலை கல்லூரி மாணவர்களுக்கும் இலவச "லேப்டாப்" வழங்க, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
மாயமான விடைத்தாள்களை தேடும் அதிகாரிகள்
நேற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே 10-ம் வகுப்பு
ஆங்கில தேர்வு விடைத்தாள் அடங்கிய பார்சல் மாயமானது. இதற்கு
அஞ்சல்துறையினரின் அலட்சியப்போக்கு காரணம் என கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு சார்பான முடிவு, நிதி அமைச்சரின் வெளிநாட்டு பயணத்தால் நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எட்டப்படவில்லை.
மத்திய அரசு
ஊழியர்களுக்கான ஜனவரி 2013 முதல் 8% அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் 2ந்
தேதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் கிடைக்கும் என்றும்,
இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்தன. ஆனால் பிரதமர் தலைமையில் நடைபெற்ற நேற்றைய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிதி அமைச்சர் 3 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளதால்,
அகவிலைப்படி உயர்வு பற்றிய முடிவு அடுத்த நடைபெற உள்ள அமைச்சரவை
கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று செய்தி மற்றும்
ஒளிப்பரப்பு துறை அமைச்சர் மனீஷ் திவாரி தெரிவித்தார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில் நடைபெற உள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு.
ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் ஊதிய
பிரச்சனைகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்
பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 04.04.2013 அன்று மாவட்ட தலைநகரங்களில்
நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் எந்தவித அசாம்பவித சம்பவம் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள
அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
நோய் அல்ல குறைபாடு: இன்று உலக ஆட்டிசம் தினம்
ஆட்டிசம் என்பது, குழந்தையின் மூளையிலுள்ள
நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. இது பற்றி பெரும்பாலான
பெற்றோர்கள் கண்டு கொண்டாலும், சரியான நேரத்தில் டாக்டரை அணுகுவதில்லை.
இக்குறைபாடு உள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்
என்பதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, ஏப்., 2ம் தேதி உலக
ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு
சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம்
பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை
கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும்
வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு
செய்யப்பட்டுள்ளது.