தமிழ்நாடு
மேல்நிலைக்கல்விப் பணி - பணிவரன்முறை - பதவி உயர்வு மூலம் 513 அரசு
மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெற்ற
நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை.
தமிழகத்தில்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பிளஸ் 2
தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட 10
கட்டளைகள் பிறப்பித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டின் கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தம்
10 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
ராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள் தயாரிப்பதே
தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின்
ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.
வங்கிக்கான கிளரிகல் மற்றும் அதிகாரி பணியிடங்களை ஐ.பி.பி.எஸ்., அமைப்பு
நடத்தும் பொது எழுத்துத் தேர்வுகளின் மூலம் நிரப்பும் நடைமுறை அமலுக்கு
வந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகிவிட்டது.
ஐஐடி.,கள் மற்றும் ஐஐஎம்.,கள் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், 5
வருடங்களுக்கு ஒருமுறை, உள்ளார்ந்த துறை ஆய்வுகளை(Internal departmental
reviews) நடத்தும் மற்றும் எக்ஸ்டர்னல் பேனல்(External panel) மூலம்
மதிப்பீடு செய்யப்படும்.
கேட் தேர்வு முடிவுகள் ஜனவரி 9ம் தேதி வெளியாகிறது. கடந்த 2012ம் ஆண்டு
அக்டோபர் 11 முதல் நவம்பர் 6ம் தேதி வரை நடைபெற்ற கணினி மயமாக்கப்பட்ட கேட்
தேர்வில் நாடு முழுவதும் 2.15 லட்சம் பேர் எழுதினர். அதில் தமிழகத்தின்
பங்களிப்பு 13,121 பேர்.
பெண்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாட்டின்
பல்கலைகளுக்கு யு.ஜி.சி. உத்தரவிட்டதையடுத்து, அண்ணா பல்கலை அதற்கான
நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
தமிழ் மொழியைப் பாடமாகப் படித்து, பிளஸ் 2 வகுப்பில், அதிக மதிப்பெண்கள்
பெறும் முதல், 500 பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு,
பட்டப்படிப்பு முடியும் வரை, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என,
தமிழக அரசு அறிவித்து உள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, பாரத ஸ்டேட் வங்கியில்
மட்டும் இந்த நிதி ஆண்டுக்குள், 20 ஆயிரம் புதிய ஊழியர்கள் பணிக்கு தேர்வு
செய்யப்பட உள்ளனர். அதேபோல் 1,200 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட
இருக்கின்றனர்.
காந்தி கிராமம்: "ஒழுக்கம், நல்ல சிந்தனைகள் இல்லாத கல்வியறிவும், திறமைகளும் சமுதாயத்திற்கு, நன்மையை விட அதிகமான தீமையை விளைவிக்கும்" என காந்திகிராம பல்கலை வேந்தர் ரீனா ஜாப்வாலா பேசினார்.
தமிழ்நாட்டு பாடநூல் கழகத்தின் மூலமாக தமிழ் மற்றும் ஆங்கில வழி புவியியல் வரைபடம் வழங்கப்பட இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.09.01.2013 முதல் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு அது முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளிகளுக்கு விநியோகிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சிறப்பு பிஎட் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி, தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்க, உயர் கல்வி செயலாள ருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகல்வி துறையில் பணிபுரியும் தகுதியான இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் - தமிழ் உட்பட அனைத்து பாட பட்டதாரி உதவி ஆசிரியராக பதவி உயர்வு பெற 31.12.2012 முடிய உள்ளவர்களின் பட்டியல் தயாரித்து அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
டி.பி.ஐ., வளாகத்தில் இயங்கி வரும், கல்லூரி கல்வி இயக்குனரகத்துக்கு,
11 கோடி ரூபாயில் புதிய கட்டடம் உருவாகிறது. திருவல்லிக்கேணியில் உள்ள,
லேடி விலிங்டன் கல்வியியல் கல்லூரிக்கு அருகே உள்ள இடத்தில், புதிய கட்டடம்
கட்டப்படுகிறது.