Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒதுக்கிய இடங்கள் 900 : விண்ணப்பமோ 14;2ம் ஆண்டு இன்ஜி., நிலை

         பி.எஸ்சி., முடித்து இன்ஜி., நேரடி இரண்டாம் ஆண்டில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை காட்டிலும் வெகுவாக குறைந்துள்ளது.

சிறுபான்மையினருக்கான நலத்திட்ட உதவிகளை பெற சுய சான்றளிக்கப்பட்ட சாதி சான்றிதழ் போதுமானது: மத்திய அரசு அறிவிப்பு

         முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சிகள் மற்றும் ஜெயின் சமூகத்தினரை சிறுபான்மையினராக மத்திய அரசு அறிவித்து உள்ளது. இத்தகைய சிறுபான்மையினருக்காக மத்திய-மாநில அரசுகள் அவ்வப்போது பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றன.  
     

ஆசிரியர்களின் கற்பிக்கும் திறனை உயர்த்த தண்டிப்பதைவிட, கற்றுத்தந்து பயிற்சியளிப்பதே சிறந்தது!

         அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகக் கல்வியியல் கல்வித் துறைத் தலைவர் டெபோரா லோவன்பர்க் பால் சிறந்த கல்வி நிபுணர். ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளில் பெறும் பயிற்சியைவிட, பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் பெறும் பயிற்சியைத்தான் அதிகம் மேம்படுத்த வேண்டும் என்று கருதுகிறார். ஆசிரியராக வேலைக்குச் சேர்ந்தவுடன் அவர்கள் சிறப்பாகப் பணிபுரிய பயிற்சித் திட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து ஒரு பாடத்திட்டத்தை அவர் வகுத்திருக்கிறார்.

ஆக., 1ல் போராட்டம்: ஜாக்டோ குழு அறிவிப்பு.

       அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 30 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' கூட்டுக்குழுவை அமைத்து உள்ளன. இக்குழு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம்; 50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்த்தல் உள்ளிட்ட, 15 கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப்ரவரி முதல் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது.

தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக்குறைவான சம்பளம்: காற்றில் பறக்கும் ஏஐசிடிஇ விதிமுறை

        பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு மிகக் குறைவான சம்பளம்கொடுக்கப் படுவதாக புகார் எழுந்துள்ளது. சம்பள விஷயத்தில், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) விதிமுறைகள் முறை யாக பின்பற்றப்படுவதில்லை என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

காலி பணியிடங்களை வெளியிட ஆசிரியர்கள் கோரிக்கை

        போடியில், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக செயற்குழு கூட்டம் மாவட்டதலைவர் சிவக்குமார் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் பாண்டிதுரை, பொருளாளர் நாகராஜன் முன்னிலை வகித்தனர்.ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வை மே மாதத்தில் நடத்தாமல் ஜூன், ஜூலையில் நடத்துவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

சிறப்பு பயிற்றுனர்கள் உண்ணாவிரதம்.

           சிறப்பு பயிற்று னர்களை, அரசு ஆசிரியர் களாக அறிவித்து பணி நியமனம்செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நேற்று டாடாபாத் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தின் கீழ், மாற்றுத்திறன் மாணவர்களுக்காக உள்ளடங்கிய கல்வி திட்டம் செயல்பாட்டில் உள்ளது.


இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம்: சிறப்பாசிரியர்கள் திட்டம்

          தமிழகத்தில் சிறப்பாசிரியர்கள் தொடர்ந்து புறக்கணிப்படுவதால் இந்திய மறுவாழ்வு குழுமத்திடம் சான்றிதழ்களை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும்என்று அனைத்து மாவட்ட சிறப்புக் கல்வியியல் பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 140 இடங்களில் ஹெல்மெட் சோதனை: அதிகாரிகளுக்கு போக்குவரத்து ஆணையரகம் உத்தரவு

         தமிழகம் முழுவதும் 140 இடங்களில் வரும் 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்வது தொடர்பாக சோதனை நடத்துமாறு ஆர்டிஓக்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சோதனை தொடர்பாக தினமும் அறிக்கை அனுப்பவும் போக்கு வரத்து ஆணையரகம் தெரிவித் துள்ளது.

'பயோ-மெட்ரிக்' வருகைப்பதிவு: பள்ளி ஆசிரியர்களுக்கு அவசியம்.

                   ஆசிரியர்களின் முறையான வருகைப்பதிவை உறுதிசெய்யும் விதத்தில், பள்ளிகளில், 'பயோ-மெட்ரிக்' எனும் கைரேகை பதிவு முறையை அறிமுகம் செய்யவேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகைப்பதிவை முறைப் படுத்தி கண்காணிக்கும் நோக்கில்,   'எஸ்.எம்.எஸ்' முறை திருச்சிமாவட்டத்தில் மட்டும் முன்னோட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது

            2014-15-ம் ஆண்டுக்குரிய மாநில அளவிலான டாக்டர். இராதாகிருஷ்ணன் விருது பெறத் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் 10.08.15 க்குள் கருத்துருக்களை பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்பிவைக்கும் வகையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசு விளையாட்டு விடுதிகளில் ஜூலை 3ல் மாணவர் சேர்க்கை

       தமிழகத்தில், பள்ளி மாணவ, மாணவியரை விளையாட்டுத் துறையில் சாதிக்க வைக்கும் வகையில், விளையாட்டு மேம்பாடு மற்றும் இளைஞர் நலத்துறை சார்பில், 28 இடங்களில், பயிற்சி, தங்கும் இடம், உணவு வசதியுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் உள்ளன. இதற்கான சேர்க்கை, ஜூலை 3ம் தேதி நடக்கிறது.

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்

           தமிழகத்தில், ஆறு அரசு கல்லுாரிகளில், சித்தா (பி.எஸ்.எம்.எஸ்.,), ஆயுர்வேதா (பி.ஏ.எம்.எஸ்.,), யுனானி (பி.யு.எம்.எஸ்.,), நேச்சுரோபதி மற்றும் யோகா (பி.என்.ஒய்.எஸ்.,), ஓமியோபதி (பி.எச்.எம்.எஸ்.,) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகள் உள்ளன.நடப்பாண்டில், இந்த படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், ஆறு மருத்துவக் கல்லுாரிகளில் இன்று துவங்குகிறது.
 

70 லட்சம் மாணவ, மாணவியருக்கு ஆதார் அட்டை வழங்க சிறப்பு முகாம்

        தமிழகத்தில், 70 லட்சம் மாணவ, மாணவியருக்கு, ஆதார் அட்டை வழங்கும் சிறப்பு முகாம்களை, ஜூலையில் நடத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.
 

நர்சு வேலைக்கு போட்டி தேர்வு

            தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், தொகுப்பூதிய அடிப்படையில், 451 ஆண் நர்சுகள் உட்பட, 7,243 நர்சுகள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்காக, 40,432 பேர் விண்ணப்பித்தனர்.இவர்களுக்கான போட்டித்தேர்வு, சென்னை, மதுரை, கோவை, நெல்லை, மற்றும் திருச்சி நகரங்களில், 89 மையங்களில் நேற்று நடந்தது. 
 

பள்ளிக்கல்வி துறையில் தேங்கும் வழக்குகள்.

        கோவை மாவட்டத்தில், சட்டம், நீதிமன்றம் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு இன்மையால், நாளுக்கு நாள் அதிரித்து வரும் நிலுவை வழக்குகளை சமாளிக்க முடியாமல், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் திணறி வருகின்றனர்.
 

மதுரை மருத்துவ கல்லூரியில் முதலில் சேர்ந்த பழைய மாணவி

      மதுரை மருத்துவக் கல்லூரியில் நடப்புக் கல்வியாண்டில் முதல் மாணவியாக, கடந்த ஆண்டு பிளஸ் 2 முடித்த பழைய மாணவி சனிக்கிழமை சேர்ந்தார்.
 

உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்


உலகில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர் 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள்

     உலக அளவில் கொடுமையான வறுமையில் வாழும் மக்களில் கால்வாசி பேர், 8 இந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்


நுழைவுத்தேர்வுக்கான அடையாள அட்டையில் நாயின் படம்: அதிர்ச்சியடைந்த மாணவர்
 
  மேற்கு வங்கத்தில் உள்ள மிட்னாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர் ஒருவர், தனக்கான நுழைவுத்தேர்வு அடையாள அட்டையில், தனது புகைப்படத்துக்கு பதில் நாயின் புகைப்படம் இருந்ததால் அதிர்ச்சியடைந்தார். 
 
 

என்ஜினீயரிங் படிப்பு கலந்தாய்வு தொடங்கியது: விளையாட்டு வீரர்கள் தேர்வு

    தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளது. இதில் 2 லட்சத்து 615 இடங்கள் உள்ளது. என்ஜினீயரிங் கல்லூரியில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களில் சேர 1 லட்சத்து 54 ஆயிரத்து 238 மாணவ–மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களின் தரவரிசை பட்டியல் கடந்த 19–ந்தேதி வெளியிடப்பட்டது.
 

இந்தியாவில் உள்ள மொத்த நீரில் 80 சதவீதம் மாசுபட்டது: சர்வதேச அமைப்பு

     இந்தியாவில் உள்ள மொத்த மேற்பரப்பு நீரில் 80 சதவீதம் மாசுபட்டது என சர்வதேச அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு நாளை வெளியீடு

       10-ம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இணையதளத்தில் நாளை (திங்கள்கிழமை) வெளியிடப் படும் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் கே.தேவரா ஜன், நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:
 

அரசின் நலத்திட்டங்களை பெற இனி 'மைனாரிட்டி' சான்றிதழ்கள் தேவையில்லை; மத்திய அரசு தகவல்



       சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் கொண்டு வரும் மத்திய அரசு நலத்திட்டங்களை பெறுவதற்கு இனி மைனாரிட்டி சான்றிதழ்களை வைத்திருக்க வேண்டியஅவசியமில்லை என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

PGTRB Study Materials

அண்ணாமலை பல்கலை.,யில் இன்ஜினியரிங் கவுன்சிலிங்

       சிதம்பரம்:சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், பொறியியல் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு நேற்று துவங்கியது. கலந்தாய்வை, நேற்று காலை, 9:00 மணிக்கு, துணைவேந்தர் மணியன் துவக்கி வைத்தார். பொறியியல் தர வரிசை பட்டியலில், 194.75 'கட் - ஆப்' மதிப்பெண்ணுடன் முதலிடம் பெற்ற, புவனகிரியைச் சேர்ந்த அருள்வேல் என்ற மாணவர், சிவில் இன்ஜினியரிங் படிப்பை தேர்வு செய்தார்.


Tentative JULY 2015 diary

>4 Gri day
>11 Pri CRC
>14 RL
>15 Kalvi valarchi naal

எந்த ஹெல்மெட் நல்லது?

          தமிழகத்தில் ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம்...‘மறுபடியும் மொதல்ல இருந்தா’ என பலரும் இந்த அறிவிப்பைக் கலாய்க்கலாம். ஆனால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றத்தின் அறிவிப்பு. ‘அரசு தரச் சான்றிதழான ஐ.எஸ்.ஐ முத்திரை பதித்த ஹெல்மெட்தான் அணிந்திருக்க வேண்டும். 

கோவை வேளாண் பல்கலையில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வில் 32 இடம் நிரம்பின

          கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் 13 பட்டப்படிப்புகள் உள்ளன. 2015-16ம் கல்வியாண்டின் இளங்கலை வேளாண்மை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று துவங்கியது.  இதில் சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்து கொண்டனர்.விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கு 5 இடம், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகளுக்கு 8 இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 18 இடம் மற்றும் சுதந்திர போராட்ட வீரர் வாரிசுகளுக்கு ஒரு இடம் என மொத்தம் 32 இடங்கள் ஒதுக்கப்பட்டன. 

தேர்வாணைய தடையை நீக்க கோரிய அரசு ஊழியருக்கு ஐகோர்ட் அபராதம்

         தேனியைச் சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர். இவர் 2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயாரித்த வினா, விடைத்தாளை திருடி முழு மதிப்பெண் பெற்றது தெரிந்தது. 
 

AADHAAR EMIS SEEDING

முடி கொட்டுமா, வியர்க்குமா, மூச்சு விட முடியுமா? 'ஹெல்மெட்' சந்தேகங்களுக்கு டாக்டர்களின் பதில்

        'ஹெல்மெட்டா... தலைவலிக்கும், வியர்க்கும், முடிகொட்டும், கழுத்து வலிக்கும், காது கேட்காது, பக்கவாட்டில் வாகனம் வந்தால் தெரியாது...' என்றெல்லாம் பல்வேறு எதிர்மறை சாக்கு போக்குகள், சந்தேகங்கள் வாகன ஓட்-டிகளுக்கு இருக்கிறது. அந்த சந்தேகங்களுக்கு துறை நிபுணர்களான டாக்டர்கள் பதில் இதோ...

அரசு ஊழியர்கள் ஜி.பி.எப்.,இனி 'ஆன்லைனில்' மட்டுமே!

      அரசு ஊழியர்களின், பொது சேம நல நிதியான - ஜி.பி.எப்., தொடர்பான, அனைத்து நடவடிக்கைகளும், 'ஆன்லைனில்' மட்டுமே மேற்கொள்ளப்படும்' என, இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறை அறிவித்துள்ளது.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive