Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தொடக்கம்

       டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஆன்லைன் முறையில் விண்ணப்பப்பதிவு சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் தொடங்கியது. சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இம்மையத்தில் டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள டி.இ.டி வழக்குகள் விரைவாக முடிப்பதில் இழுபறி....

           தமிழக அரசு டி.இ.டி வழக்கினை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஆகிறது. இருப்பினும் கடந்த விவாதத்தின் போது இரண்டு வார காலம் அவகாசம் கேட்டு கொண்டமையால் இவ்வழக்கு வரும் 13.04.2015 அன்று விசாரணைக்கு வரவுள்ளது. இதிலும் வாதம் நடைபெற வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மேலும் கால அவகாசம் கேட்பதால் வரும் மே மாதம் நீதிமன்ற விடுமுறை என்பதாலும் இவ்வழக்குகள் மே மாதத்திற்குள் முடிவதில் சிக்கல் நீடிக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரம் இடங்கள் காலி அமைச்சர் பழனியப்பன் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 83 ஆயிரத்து 415 இடங்கள் காலியாக உள்ளன என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.பழனியப்பன் தெரிவித்தார். 

மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியீடு

          தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணி - 01.01.2015 அன்றைய நிலவரப்படி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான உத்தேச முன்னுரிமை பட்டியல் வெளியீடு

புதிதாக 7461 நர்ஸ்கள் விரைவில் நியமனம் : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

       தமிழக சட்டப்பேரவையில் நேற்று மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கொண்டுவந்தன. இதற்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக பதிலளித்து பேசியதாவது:
 

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக தயாராவது எப்படி: வழிகாட்டுகிறார் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு

        "உயர் கல்வி படிப்பில் சேரும்போதே மாணவர்கள் தனக்கென இலக்கை ஏற்படுத்திக்கொண்டு படித்தால் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., என்பது அவர்களுக்கு தொட்டு விடும் தூரமாக இருக்கும்," என தமிழக கடலோர காவல் படை ஏ.டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.

கப்பல் துறையில் காத்திருக்கு ஏராளமான பணியிடங்கள்: கேப்டன் பால் பென்னட் சிங் தகவல்

      "கடல்சார் மற்றும் நாட்டிகல் சயின்ஸ் படித்தால் கப்பல் துறையில் ஏராளமான பணியிடங்கள் காத்திருக்கின்றன" என மாஸ்டர் மரைனர் கேப்டன் பால் பென்னட் சிங் தெரிவித்தார்.

எந்த படிப்பு சம்பளத்தை அள்ளிக் கொட்டும்: கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனை

       "உயர் கல்வியில் எந்த படிப்பை தேர்வு செய்தால் அதிக சம்பளத்தில் உடனடி வேலைவாய்ப்பு கிடைக்கும்" என கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி ஆலோசனைகள் வழங்கினார்.

நேரடி மானியத் திட்டத்தில் இணைய ஜூன் 30 வரை கூடுதல் அவகாசம்

    சமையல் எரிவாயு நேரடி மானியத் திட்டத்தில் இணையாத வாடிக்கையாளர்களுக்கு ஜூன் 30-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஏப். 6 முதல் புத்தகங்கள்

       அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் பிளஸ் 2 படிக்க உள்ள மாணவர்களுக்கு வரும் திங்கள்கிழமை (ஏப்.6) முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்பட உள்ளன.

தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது: அமைச்சர் கே.சி.வீரமணி

          தேர்வு முறைகேடுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பள்ளி கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும், ஒசூரில் "கட்செவி அஞ்சல்' ("வாட்ஸ் அப்') மூலம் பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

வேதியியல் தேர்வில் தவறான கேள்விகள்: உரிய மதிப்பெண் வழங்க உத்தரவு

             பிளஸ் 2-க்கு 23ம் தேதி வேதியியல் பாடத் தேர்வு நடந்தது. அதில் ஏ வகைகேள்வித்தாளில் ஒரு மதிப்பெண் கேள்வியில் 10, 22வது கேள்விகள் பிழையாககேட்கப்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர். 

பிளஸ்-2 தேர்வில் கருணை மதிப்பெண் வழங்குவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை : அரசு தேர்வு இயக்குனர் கு.தேவராஜன் பேட்டி

          பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 5-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி முடிந்தது.இந்த தேர்வில் கணிதத்தேர்வில் ஒருகேள்வி குழப்பமான முறையில் கேட்கப்பட்டிருந்தது. அந்தக்கேள்வியில் கேட்பப்பட்டது மைனசா, பிளஸா என்று தெரியாமல் மாணவர்கள் விழித்தனர்.

பிளஸ்-2 தேர்வில் கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம்!

          'பிளஸ்-2 தேர்வு இப்போதுதானே முடிஞ்சது. தேர்வு முடிவுகள் கூட இன்னும் வெளியாகவில்லையே...அதற்குள்ளாக கடலூர், வேலூர் மாவட்டங்கள் முதலிடம் என்று சொல்லுறாங்களே!' ன்னு நீங்கள் தலையை பிய்த்து கொள்வது புரிகிறது. கொஞ்சம் பொறுங்க பாஸ். பிளஸ் 2 தேர்வில் காப்பி அடித்து பிடிபட்ட மாணவர்கள் எண்ணிக்கையில்தான் சார் இந்த இரண்டு மாவட்டங்களும் முதலிடத்தை பிடித்திருக்கின்றன.

44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளது ஏன்?

         தமிழகத்தில் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியிருப்பது ஏன் என, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் ஆய்வு நடத்தப்பட உள்ளது.

இயக்குநர்களுடன் ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் சந்திப்பு.

           01.04.2015 தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன், பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச. கண்ணப்பன், RMSA இயக்குநர் முனைவர் க. அறிவொளி, தேர்வுத்துறை இயக்குநர் திரு. கு. தேவராஜன், SCRT இயக்குநர் முனைவர் வி.சி. ராமேஸ்வர முருகன், ஆசிரியர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் திருமதி. தன். வசுந்தராதேவி ஆகியோரை ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் வா. அண்ணாமலை அவர்கள் சந்தித்தார்.

அரசுப் பள்ளிக்கு சீர்வரிசை வழங்கிய கிராம மக்கள்

      காஞ்சிபுரம் அருகே முசரவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில், மாணவர்களுக்குத் தேவையான பொருள்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டன. காஞ்சிபுரம் அருகே முசரவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கீழ்ஒட்டிவாக்கம், முசரவாக்கம் உள்ளிட்ட பள்ளிகளைச் சேர்ந்த 390 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

விடைத்தாள்கள் மாயமான விவகாரம்: பல்கலை ஊழியர்கள் 8 பேர் 'சஸ்பெண்ட்'

      அண்ணாமலை பல்கலைக் கழகத்தில், விடைத்தாள் மாயமான விவகாரம் தொடர்பாக, ஊழியர்கள், எட்டு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். 24 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

உதவி பேராசிரியர் பணி: டி.ஆர்.பி., பட்டியல் அறிவிப்பு

       அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு, நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்றோர் பட்டியலை, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

இயற்கை முறையில் கொசு ஒழிப்பு கருவி: கோவை பேராசிரியர் கண்டுபிடிப்பு

அதிகரிக்கும் கொசு உற்பத்தியை தடுத்து ஒழிக்க, உணவுக்கு பயன்படும் இயற்கை பொருள்களை மருந்தாக மாற்றி, புதிய கொசு ஒழிப்புக்கருவியை கண்டுபிடித்துள்ளார் கோவை பேராசிரியர்.

CTET-EXAM RESULT 2015 FEB

CENTRAL TEACHER ELIGIBILITY TEST (CTET) - FEB 2015

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு

         ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 652 கணினி பயிற்றுனர்களுக்கான நியமன கலந்தாய்வு வருகிற ஏப்ரல் 4ம் தேதி நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கலந்தாய்வில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு அனறைய தினமே பணி நியமன ஆணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

பள்ளிகளுக்கு முன்னெச்சரிக்கை: வீரமணி

          வாட்ஸ்அப் மூலம் வினாத்தாள் அவுட் ஆன விஷயம் சட்டசபையில் எதிரொலித்தது. இது குறித்த விவாதத்தின் போது பேசிய அமைச்சர் வீரமணி, ' வாட்ஸ்அப் மூலம் பிளஸ்2 வினாத்தாள் அவுட் ஆன விஷயத்தில் அரசு சட்டரீதியான நடவடிக்கை எடுத்து வருகிறது.
 

பள்ளிக்கல்வித்துறை செயலர் சபீதா மன்னிப்பு கேட்டார்

         தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில், சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில்,  ‘’ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குனரகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வியியல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவைகளுக்கு விரிவுரையாளர் பதவிகளுக்கு கடந்த 2009–ம்ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.  

இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும்

image             இதய நோய்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றான இரத்த குழாய்கள் கொழுப்பால் அடைபடுதலை, தினமும் 3 முதல் 5 காப்பிகள் வரை அருந்துவதன் மூலம் தவிர்க்க முடியும் என்று தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

    

இன்வெர்ட்டர் - ஒரு சிறிய அலர்ட்!


         ஒரு இனிய வெள்ளி மாலைப் பொழுது, வீட்டில் கணவர், இரண்டு வயது மகள், எல்லோரும் அமர்ந்திருக்கையில், பள்ளி முடிந்து வந்தான் மகன். வருகையிலேயே, என்ன வீட்டில் நாறுது என்று கேட்டவாறே அமர்ந்தான். எனக்கும், கணவருக்கும், குழந்தைக்கும் வெயிலின் தாக்கத்தால் ஜலதோஷம் என்பதால், ஒன்றும் தெரியவில்லை.
 

உயிரியல் தேர்வு மிகக் கடினம்: எம்.பி.பி.எஸ். கட்-ஆஃப் மதிப்பெண் குறையும்

          பிளஸ் 2 தேர்வில் கடைசிப் பாடமான உயிரியல் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததால், இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive