Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உபரி பணியிட மாறுதல்களை கைவிட வலியுறுத்தி ஜூன் 12-ல் ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
உபரி பணியிட மாறுதல்களை முற்றிலுமாக கைவிட
வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 12-ம் தேதி
தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது
என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு
செய்யப்பட்டது.
தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை பி.எட். படிப்பு நாளை முதல் விண்ணப்பம்
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில், பி.எட். சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் நாளை முதல் வினியோகம் செய்யப்பட உள்ளன.
மாணவரை கண்டித்த ஆசிரியர் மீது, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக வீண்பழி! போலீஸ் விசாரணை!!
வேப்பங்கொட்டையை மாணவி மீது வீசிய, எட்டாம்
வகுப்பு மாணவனை கண்டித்ததே, மாணவியரை ஆபாச படம் பிடித்ததாக, ஆசிரியர் மீது,
வீண்பழி சுமத்தியது, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பி.இ., 'ரேங்க்' பட்டியலுக்கு முன் பிளஸ் 2 மறு மதிப்பீடு முடிவு
வரும், 16ம் தேதி, பி.இ., 'ரேங்க்' பட்டியல்
வெளியிடப்படுகிறது. இதற்கு, மூன்று நாளுக்கு முன், பிளஸ் 2 மறு மதிப்பீடு
முடிவு வெளியிடப்படும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன்
தெரிவித்தார்.
10/6/14 அன்று.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது
10/6/14 அன்று.மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களுக்கான கூட்டம் சென்னையில்
நடைபெற உள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் வேலை: விரைவில் அமல்?
வாரத்தில்,
ஐந்து நாட்கள் மட்டுமே வேலைபார்த்து வந்த, மத்திய அமைச்சகங்களின்
அதிகாரிகள் மற்றும் ஊழியர் களுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான
அரசு, கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. இனி, ஆறு நாட்கள் வேலை செய்ய வேண்டும்
என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆறு நாள் வேலை, இதர மத்திய அரசு
ஊழியர்களுக்கும், விரைவில் அமலாகலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சொந்தப்பணத்திலிருந்து வழங்கினார்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. கி. வீரமணி அவர்கள் தான் எம்.எல்.ஏ வாக தேர்ந்தெடுக்கப்பட்ட வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் பயின்று 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு தனது சொந்தப்பணத்திலிருந்து ரூ.5000 முதல் ரூ.1000 வரை ஊக்கத்தொகையை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறார்.
நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியீடு; 123 நாள் லீவு; மாணவர்களுக்கு"லக்'
கல்வித்துறை சார்பில், நடப்பு கல்வியாண்டு காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிமாணவர்களுக்கு மொத்தம் 123 நாட்கள் விடுமுறை கிடைக்கும். கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. புதிய
கல்வியாண்டு உதயமாகியுள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை 2014-15ம்
கல்வியாண்டுக்கான காலண்டர் தயாரித்துள்ளது.
அழைப்பு கடிதம் இல்லாவிட்டாலும் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கலாம்
காஞ்சிபுரம்:
''அழைப்பு கடிதம் இல்லாவிட்டாலும், பொறியியல் கலந்தாய்வில் கலந்து
கொள்ளலாம்,'' என, அண்ணா பல்கலையின் சேர்க்கை பிரிவு இயக்குனர் நாகராஜன்
பேசினார்.
மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க கோரிக்கை
ஆரம்ப
கல்வி முதல் +2 வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவம்,
பொறியியல், சட்டம் போன்ற படிப்புகளுக்கான கலந்தாய்வில் முன்னுரிமை வழங்க
அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர்.தி.தேவநாதன் யாதவ்
கேட்டுக்கொண்டுள்ளார்.
பி.எப்., வட்டி9 சதவீதம்
கடந்த
நிதியாண்டில், 8.75 சதவீதமாக வழங்கப்பட்ட, பி.எப்., வட்டி வீதம், நடப்பு
நிதியாண்டில், 9 சதவீதமாக வழங்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
சீருடை அணிந்திருந்தால் மாணவர்களுக்கு அனுமதி: அரசு பஸ்சில் சலுகை
பழைய பஸ் 'பாஸ்' இல்லாத மாணவர்கள் சீருடை அணிந்திருந்தால், அரசு டவுன் பஸ்சில் இலவசமாக செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மழைநீர் சேகரிப்பு வாரம்: பள்ளி கல்வித்துறை இயக்குனர் சுற்றறிக்கை
பள்ளி
கல்வித்துறை இயக்குனர், ராமேஸ்வர முருகன், மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 'அனைத்து வகை பள்ளிகளிலும்,
மழைநீர் சேகரிப்பு வாரம் கொண்டாட வேண்டும்' என, முதல்வர்,
உத்தரவிட்டுள்ளார்.
மாணவியரின் தற்கொலை எண்ணம் தடுக்க 'மொபைல் வேன் கவுன்சிலிங்': பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு
பொதுத்தேர்வுகளில்
தோல்வியடைந்த மாணவியர் பலர், தற்கொலை செய்து கொண்டதால்
அதிர்ச்சியடைந்துள்ள கல்வித்துறை, 'மொபைல் வேன் கவுன்சிலிங்' திட்டத்தை
முழுமையாகப்பயன்படுத்த பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் பட்டியல் வெளியீடு தாமதம்
பிளஸ்
1 வகுப்பு, வரும் 16ம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், தரம்
உயர்த்தப்பட உள்ள, மேல்நிலை பள்ளிகளின் பட்டியல் குறித்த, அறிவிப்பு இதுவரை
வெளியிடப்படாததால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இலவச நோட்டு, புத்தகம் வினியோகம்: தலைமை ஆசிரியருக்கு 'நோட்டீஸ்'
சிவகங்கையில்,
இலவச நோட்டு, புத்தகம் வினியோகம் தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியருக்கு
'நோட்டீஸ்' அனுப்ப பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார்.
டிரான்ஸ்பரை தவிர்க்க லஞ்சம்: பள்ளி ஆசிரியை தற்கொலை
நெல்லையில் டிரான்ஸ்பருக்கு லஞ்சம் கேட்டதாக, ஆசிரியை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கும் முடிவு: எதிர்த்த வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழ்
மொழி பாடத்தை, 10ம் வகுப்புக்கு கட்டாயமாக்க, மெட்ரிகுலேஷன் பள்ளிகளின்
இயக்குனர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்
தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி, விசாரணையை,
வரும், 10ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு 'பிடிவாரன்ட்'
கோர்ட்
அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத, கோவை பாரதியார் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு
அலுவலருக்கு, 'பிடிவாரன்ட்' பிறப்பித்து, ஆஜர்படுத்த, மதுரை ஐகோர்ட் கிளை
உத்தரவிட்டது.
தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க கல்வித்துறை அதிரடி ! : சிறப்பு வகுப்பைக் கண்காணிக்க குழு அமைப்பு
கடலூர்:
மாவட்டத்தில் உள்ள 209 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பொதுத்
தேர்வு தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை சிறப்பு குழு
நியமித்துள்ளது.
Initial தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் பெயரின் தலைப்பெழுத்துக்களை (Initial) தமிழில் மட்டுமே எழுத தொடக்கக்கல்வி இயக்ககம் உத்தரவு
மழை நீர் சேகரிப்பு கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு
09.06.2014 முதல் 13.06.2014 வரை மழை நீர் சேகரிப்பு வாரத்தினை பள்ளிகளில் கட்டுரை, ஓவியம் போட்டி மற்றும் கண்காட்சிகள் நடத்தி கொண்டாட பள்ளிக்கல்வி இயக்ககம் உத்தரவு
சாதனை மாணவிகளை உருவாக்கும் அரசுப் பள்ளிகளின் முயற்சிகள் தொடரட்டும்!
‘குடிசையில் வாழ்க்கை… கோபுரத்தில் மதிப்பெண்’
என்ற தலைப்பில் கடந்த இதழில் வெளியான கட்டுரையில், பன்னிரண்டாம் வகுப்புப்
பொதுத்தேர்வில் 1,139 மதிப்பெண்கள் பெற்ற அரசுப் பள்ளி மாணவி இசைவேணியைச்
சந்தித்திருப்பீர்கள்.
”11-ம் வகுப்புக்கு தனியார் ஸ்கூல்லதான்
சேருவேன்னு அடம்பிடிச்சேன். வசதி இல்லாத காரணத்தால அரசாங்க
பள்ளிக்கூடம்தான் வாய்ச்சது. ‘ம்… அரசாங்க பள்ளிக்கூடத்துல நல்லா
சொல்லித்தர மாட்டாங்களே’ங்கற நினைப் போடதான் ஸ்கூல்ல கால் வெச்சேன். ஆனா,
அடுத் தடுத்த நாட்கள்ல, அந்த நினைப்பு நொறுங்கிடுச்சி. அங்க இருந்த
ஆசிரியர்கள் எல்லாரும், பெற்றோர்கள் மாதிரியே அக்கறை காட்டினது… நெகிழ
வெச்சிடுச்சி’’ என்று அதில் சொல்லியிருந்தார் இசைவேணி.
விடைத்தாள் நகல்கள் மாற்றி மாற்றி வெளியீடு: பிளஸ் 2 மாணவர்கள் அதிர்ச்சி
பிளஸ்
2 மாணவர்களுக்கு, இணையதளம் வழியாக, விடைத்தாள் நகல் அளிப்பதில், பெரும்
குளறுபடி ஏற்பட்டுள்ளது. உரிய மாணவரின் விடைத்தாள் நகலுக்குப் பதில், வேறு
மாணவர்களின் நகல், இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.