Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விலையில்லா பொருள்கள் வழங்க தனி கழகம்


           "கல்வித்துறை மூலம் வழங்கப்படும், விலையில்லா பொருள்களை கொள்முதல் செய்து வினியோகிக்க, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகம் என்ற ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

Show Cause Notice to Computer BT's


                மேல்நிலைக்கல்வி - உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வில் 50% க்கு குறைவாக மதிப்பெண் பெற்று ஒப்பந்த அடிப்படையில் நியமனம் பெற்று பள்ளிகளில் பணியாற்றி வரும் 652 கணினி பயிற்றுனர்களுக்கு பணியிலிருந்து நீக்க காரணம் கேட்கும் தாக்கீது (show cause notice) அனுப்பப்பட்டுள்ளது.

பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம்... 3 மையங்களில் மாணவர்களுக்கு ஆலோசனை


             பிளஸ் 2க்கு பிறகு என்ன படிக்கலாம் என்பது குறித்து மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கும் வகையில் 3 மையங்களில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.
 

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை.,யில் பி.எட் விண்ணப்பங்கள் வழங்கல்


            தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை., பாளை கல்வி மையத்தில் பி.எட் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.
 

குரூப்-1 தேர்வில் 1,330 பேர் தேர்வு :டி.என்.பி.எஸ்.சி. தகவல்


                     "டி.என்.பி.எஸ்.சி., நடத்திய, குரூப்-1 முதன்மைத் தேர்வில், 1,330 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு பெற்றவர்கள், தகுதிச் சான்றிதழ்களை, தபால் மூலமாகவோ, தேர்வாணைய இணையதளத்திலோ, ஜூன், 7ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்" என டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீத கிருஷ்ணன் தெரிவித்தார்.
 

நர்சரி பள்ளி சேர்க்கை விவகாரம்: ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து அப்பீல்


              ஆறு வயது முதல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கல்வி கற்பதை கட்டாயமாக்கும் வகையில், கல்வி உரிமை சட்டத்தை, மத்திய அரசு கொண்டு வந்தது. அதே நேரத்தில், "நர்சரி பள்ளிகளில், மாணவர் சேர்க்கைக்கு, பள்ளிகளே முடிவு எடுத்துக் கொள்ளலாம்" என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது.
 

சிவில் சர்வீசஸ் விடைத்தாள்: ஆன்-லைனில் வெளியிட ஆலோசனை


             ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரியாகும் கனவுடன், சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுபவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்ற, மத்திய பணியாளர் தேர்வாணையம் தயாராகி வருகிறது. தேர்வில் பங்கேற்பவர்களின் விடைத்தாள்களை, ஆன் லைனில் வெளியிட ஆலோசித்து வருகிறது.
 

திறந்தவெளி பல்கலை., படிப்புக்கு வேலையில்லை: மக்கள் குழப்பம்


             திறந்தவெளி பல்கலையில் பட்டப்படிப்பு படித்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு அந்த தகுதி அங்கீகரிக்கப்படும் என்று 2012ல் அரசாணை வெளியிடப்பட்டாலும், திறந்தநிலை பல்கலை தகுதியுடையோருக்கு, வேலைவாய்ப்பு, பதவி உயர்வு அளிக்க முடியாது என்று அமைச்சர் முனுசாமி அறிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

அண்ணாமலை பல்கலையை அரசே ஏற்கும் சட்டம் நிறைவேற்றம்


               அண்ணாமலை பல்கலைக்கழகத்தை அரசே ஏற்று நடத்த வகைசெய்யும் சட்டமசோதா, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
 

கட்டண நிர்ணயம் குறித்து தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை


              ஒவ்வொரு பள்ளியும், மாணவர்களிடம் எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது குறித்து, ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது .இந்த விவரத்தை வெளியிடுவதற்கு முன், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களிடம் இருந்து கட்டணத்தை வசூலித்தால், குறிப்பிட்ட பள்ளியின் அங்கீகாரம், உடனடியாக ரத்து செய்யப்படும் என, மாவட்ட கல்வி துறை எச்சரித்துள்ளது.
 

விரும்பும் படிப்பா, வேலைக்கான படிப்பா? எது தேவை?


             பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், எதிர்கால வேலை வாய்ப்புக்கு தகுதியான பாடங்களை பெற்றோர்களும், மாணவர்களும் தொலை நோக்கு பார்வையுடன் தேர்வு செய்ய வேண்டும்; பெற்றோர் மாணவர்களை வற்புறுத்தியும், மாணவர்கள் பெற்றோர்களிடம் அடம் பிடித்தும், படித்தால் எதிர்கால வாழ்வு இருளில் மூழ்கும் நிலை ஏற்படும், என கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
 

இடமாறுதல் கவுன்சிலிங் ஆரம்பம்: பள்ளிகளில் மாணவர்கள் அலைக்கழிப்பு - நாளிதழ் செய்தி


           பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இடமாறுதல் ஆன்-லைன் கவுன்சிலிங் பணிகளுக்கு சென்று விடுவதால் மாணவ, மாணவிகள் தலைமையாசிரியர் கையெழுத்து பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.
 

சர்வர் பிரச்னையால் ஒரு நாள் தாமதம் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு தொடங்கியது - நாளிதழ் செய்தி


          அரசு, நகராட்சி பள்ளி ஆசிரியர் கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, சர்வர் பிரச்னையால் ஒரு நாள் தாமதத்துக்கு பிறகு தொடங்கியது.வரும் 2013&14ம் கல்வி ஆண்டுக்கு ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நடைபெற உள்ளது.
 

புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், சட்டமன்றத்தில் கோரிக்கை


            சட்டமன்ற தேர்தல் வாக்குறுதி படி முதல்வர் மத்திய அரசின் புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுதலைவர் அ.சவுந்தரராசன் கேட்டுக் கொண்டார்.
 

ஆசிரியர் பொது மாறுதல், ஆன்-லைன் பதிவு முறையில் மாற்றம் செய்ய ஆசிரியர்கள் கோரிக்கை


              ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர் அனைவரும், நாளை(17ம் தேதி), மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வர வேண்டும் என்பதற்கு, ஆசிரியர் மத்தியில், எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையால், ஒரே நாளில், 800க்கும் மேற்பட்ட ஆசிரியர், நீண்ட வரிசையில், காத்திருக்க நேரிடும் என, அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

பி.இ., விண்ணப்ப விற்பனை 2.26 லட்சமாக உயர்ந்தது


          பி.இ., விண்ணப்பம் விற்பனை, நேற்றுடன், 2.26 லட்சமாக உயர்ந்தது. கடந்த ஆண்டு, 1.86 லட்சம் விண்ணப்பங்கள் மட்டுமே விற்பனை ஆயின. இந்த ஆண்டு, விண்ணப்பம் விற்பனை துவங்கிய முதல் நாளே, 80 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்று தீர்ந்தன.
 

10ம் வகுப்பு பாட புத்தகம்: இந்திய வரைபடத்தில் இல்லை அருணாச்சல்


            மகாராஷ்டிரா மாநில, 10ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெற்றுள்ள, இந்திய வரைபடத்தில், அருணாச்சல பிரதேசம் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, அம்மாநிலம், சீனாவுக்கு சொந்தமானதாக காட்டப்பட்டுள்ளது.
 

தமிழ் பள்ளிகளுக்கு மலேசியாவில் தடை?


         மலேசிய கல்வித்துறையின் முன்னாள் டைரக்டர் ஜெனரல் அப்துல் ரஹ்மான், சமீபத்தில் கூறுகையில், "மலேசியாவில் மலாய் மொழி பள்ளிகள் மட்டுமே செயல்பட வேண்டும். தமிழ் மற்றும் சீன மொழி பள்ளிகளை தடை செய்ய வேண்டும். அப்போது தான் தேச ஒற்றுமை ஏற்படும்" என்றார்.
 
 

சி.ஏ., தேர்வு 24ம் தேதிக்கு தள்ளிவைப்பு


         சி.ஏ., படிப்பிற்கான, குரூப் - 2, 7ம் தாள் தேர்வு, இம்மாதம், 24ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கல்லூரி சீட்டுக்காக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்


         "பிரபல, நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ மற்றும் பொறியியல் கல்லூரிகளில், இடம் வாங்கித் தருவதாக கூறும், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்" என போலீசார் எச்சரித்துள்ளனர்.
 
 

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி? - Poll Related Article.


வாசகர்களே தயவு செய்து தனிப்பட்ட தாக்குதல்களை தவிர்த்து, இக்கட்டுரை ஆரோக்கியமான விவாதமாக அமைய ஒத்துழையுங்கள்.

( நினைவில் கொள்ளுங்கள் - இன்று பிற்பகல் 9 மணியுடன் வாக்கெடுப்பு முடிவடைகிறது )

அன்பான பாடசாலை வாசகர்களே,
  • ஆங்கில வழிக்கல்வி திட்டதின் மூலமாக அரசுப்பள்ளிகளில் எந்தளவிற்கு சேர்க்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?
  • ஆங்கில வழிக்கல்வி எனும் ஒரு காரணம் மட்டுமே கிராமத்து பெற்றோர்களை சுண்டியிழுத்து விடுமா? 

பள்ளிக்கல்வித் துறையின் 2013-2014 ம் ஆண்டிற்கான பள்ளி நாள்காட்டி வெளியீடு


       தமிழகத்தில் வரும் கல்வி ஆண்டில் 183 கற்பித்தல் நாட்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் விபரத்தை கல்வித் துறை அறிவித்துள்ளது.

பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் விபரம்: புதிய மென்பொருள் மூலம் கண்டுபிடிப்பு


           திருவள்ளூர் மாவட்டத்தில், இதுவரை பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்கள், 4,826 பேர் என, கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்கினால் விருது: முதல்வர்


          "தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, கணினித் தமிழுக்காக சிறந்த தமிழ் மென்பொருள் உருவாக்குவோருக்கு, புதிய விருதுகள் வழங்கப்படும்," என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
 
சட்டசபையில் நேற்று, 110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிவிப்பு:

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு கல்வித்துறை சார்பில் முதல்முதலாக வழிகாட்டுதல் நிகழ்ச்சி


           தமிழக முதல்வர் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பிளஸ் 2 முடித்த மாணவர்கள் மேல் படிப்பு என்ன படிக்கலாம் என்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்குவதை கைவிடக் கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! - நாளிதழ் செய்தி


          அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கும் முடிவை தமிழக முதல்வர் கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழக மாணவர் முன்னணியினர் ஊர்வலமாக சென்று வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உதவி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
 
 

1108 மதிப்பெண்கள் பெற்றும் மேற்படிப்பை தொடர முடியாத மாணவர்


           சிதம்பரத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரின் மகன் பிளஸ் 2 தேர்வில் 1108 மதிப்பெண்கள் பெற்று பொறியியல் துறையில் சேர்ந்து படிக்க விரும்புகிறார். ஆனால் சீட் கிடைத்தாலும் கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ளார்.
 
 

டி.இ.டி : அறிவிக்க தயங்கும் டி.ஆர்.பி - கையை பிசையும் பயிற்சி மையங்கள் - Dinamalar


          ஆசிரியர் தகுதி தேர்வு நடக்கும் தேதியை அறிவிக்காமல், ஆசிரியர் தேர்வு வாரியம், காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், ஜூனுக்குள் பயிற்சியை முடித்து விடலாம் என, கணக்குப் போட்டிருந்த பயிற்சி மையங்கள் தற்போது கையை பிசைந்து வருகின்றன.

1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் : தமிழக முதல்வர்


         பள்ளிகளைத் தரம் உயர்த்தி, அதற்கேற்ப ஆசிரியர்களை பணியமர்த்த புதிதாக 1000 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
 


 

Employment Online Registration - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


           தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.


பகுதி நேர கணினி ஆசிரியர் பணியிடத்திற்கு பதிவுமூப்பு பரிந்துரை


              ராமநாதபுரம் கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ள பகுதி நேர கணினி ஆசிரியர் பணி காலியிடத்திற்கு பதிவு செய்தவர்கள் பதிவுமூப்பு மற்றும் தகுதியுடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படவுள்ளனர்.
 
 

பாடநூல் கழகம் பெயர் மாற்றம்


            பாடநூல்கழகம் பெயர் மாற்றம் செய்யப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாடநூல் கழகம் இனிமேல்,கல்வியியல் கழகம் என்ற பெயரில் செயல்படும் எனவும், மாணவர்களுக்கு இலவச பொருட்களை வழங்கும் பணியை, கல்வியியல் கழகம் செய்யும் எனவும் அறிவித்தார்.

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்


               2013-2014ம் கல்வி ஆண்டில் இருந்து அரசு ஆரம்பப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு ஆரம்ப கல்வி பிரிவு தொடங்கப்படும்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive