Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

SABL & ALM Time Table

SABL TIME TABLE
8.50-9.10 CLEANING
9.10-9 .30 PRAYER
9.30-9.35 MEDITATION
9.35-12.10 SUBJECT 1 
12.10-12.40 VALUE EDUCATION, YOGA ETC

கரூரில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க ரூ.229 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வர் உத்தரவு

        கரூரில் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுதல் மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் மற்றும் நிதி ஒப்பளிப்பு வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அரசு பஸ் முதல் பெண் டிரைவர் மாற்றுப்பணி தராததால் தவிப்பு:


         தமிழகத்தில், அரசு பஸ்சை இயக்கிய, முதல் பெண் டிரைவர் என்ற பெருமைக்கு உரியவர் வசந்தகுமாரி, 57. துவக்கத்தில், பஸ் டிரைவர் பணியில் சேர முயன்ற போது, உயரம் குறைவு எனக்கூறி ஓரம் கட்டப்பட்டார்; தொடர் முயற்சியால், தன், 34 வயதில், அரசு பஸ் டிரைவரானார்.
 

தேசிய கொடியில் சாதனைஉ.பி., மாநில அரசு முடிவு:

         உ.பி.,யில், நாட்டின் மிகப் பெரிய கொடிக் கம்பத்தில், மிகப் பெரிய தேசிய கொடியை பறக்க விட, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.டில்லி, கன்னாட் பிளேஸ் என்ற இடத்தில், 207 அடி உயர கொடிக் கம்பத்தில், 60 அடி உயரமும், 90 அடி நீளமும் கொண்ட தேசியக் கொடி பறக்க விடப்படுகிறது. 
 

சபரிமலை மண்டலப் பூஜை நவ. 16-இல் தொடக்கம்: ஜனவரி 12 வரை தரிசனத்துக்கான முன்பதிவு செய்யலாம்:

       சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை நவம்பர் 16-ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து, நவம்பர் 17 முதல் ஜனவரி 12 வரை தரிசனம் செய்ய விரும்புவோர் www.sabarimalaq.com என்ற இணையதளத்தில் இப்போதே முன்பதிவு செய்யலாம்.
 

2000 ஆயிரம் மாணவர்களுக்கு போட்டித்தேர்வு பயிற்சி

   போட்டித்தேர்வில் பங்கேற்பதற்காக 2000 மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி கல்வித்துறை பயிற்சி அளித்து வருகிறது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி: பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் சென்னை மாநகராட்சி பயிற்சிகளை அளித்து வருகிறது. இதன்படி, மத்திய தேர்வாணயம் நடத்தும் போட்டித் தேர்வுக்கு ஷெனாய் நகர் அம்மா அரங்கத்தில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.


21 வயதுக்குள்பட்டோருக்கு மதுபானங்கள் விற்கப்படாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

     மதுபானங்களை 21 வயதுக்குள்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

      தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது.
 

அங்கன்வாடிகளுக்கு 'ஸ்மார்ட் போன்

        புதுடில்லி": சிறு குழந்தைகளை பராமரிக்கும் அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த வும், அவற்றின் செயல்பாட்டை தீவிரப்படுத்தவும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
 

அரசு ஊழியர்களுக்கு மாநில தீர்ப்பாயம் சங்க தலைவர் வலியுறுத்தல்

        சிவகங்கை: ''அரசு அலுவலர், ஆசிரியர் பிரச்னைகளுக்கு தீர்வு காண மாநில நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் சம்பளக்குழுவை உருவாக்க வேண்டும்,'' என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் சண்முகராஜன் கூறினார்.
 

அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை

       தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனரின் அனுமதியின்றி, ஆசிரியர்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு, பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள், பாஸ்போர்ட் பெறுவதிலும், வெளிநாடு செல்வதிலும் பல கட்டுப்பாடுகள் உள்ளன. 

நவ.16ம் தேதி முதல் 2ம் பருவ இடைத்தேர்வு துவக்கம்

      தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, நவ., 16ம் தேதி முதல், இரண்டாம் பருவ இடைத்தேர்வு நடத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது. சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ தேர்வு மற்றும் கற்பித்தல் முறை அமலாகிறது. 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை ஆண்டு தேர்வு நடத்தப்படுகிறது. 

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் கட்டடங்கள் கட்டும் பணி தொடக்கம்

        தமிழகம் முழுவதும் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளில் ரூ.555 கோடியில் கட்டடம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன. இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது.

அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ரூ.6 ஆயிரம் குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை

       குரூப் 2 பணியிடங்களுக்கு இணையான பணியிடங்களில் பணிபுரிந்து வந்த அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.15,600 ஊதியத்தை ரூ.9,300 ஆக குறைக்க பரிந்துரைத்த நிதித்துறையின் உத்தரவுக்கு ெசன்ைன ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.  

குரூப் - 2 ஏ: விண்ணப்ப தேதி நீட்டிக்கப்படுமா

        தமிழக அரசின், 33 துறைகளில், குரூப் - 2 ஏ பதவியில் காலியாக உள்ள, 1,863 இடங்களுக்கு, டிசம்பர், 27ல் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே தேதியில், மத்திய அரசின், 'நெட்' தேர்வு நடக்க உள்ளதால், குழப்பம் ஏற்பட்டது.

திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் பதவி உயர்வு கேட்ட மனுவை பரிசீலிக்க வேண்டும் டி.என்.பி.எஸ்.சி.க்கு, ஐகோர்ட்டு உத்தரவு

         திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு கேட்டு வழங்கப்பட்ட மனுவை 6 வாரத்துக்குள் பரிசீலிக்கவேண்டும் என்று டி.என்.பி.எஸ்.சி. செயலாளருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில், வெங்கடேசன் உள்பட 4 பேர் ஒரு மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–

ஆர்.கே. நகரில் ஐ.டி.ஐ.: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

      ஆர்.கே. நகரில் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.) தொடங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இது குறித்து, தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பார்வையிழந்த மாணவி சிகிச்சைக்காக தவிப்பு

    பார்வை இழந்த, 10ம் வகுப்பு மாணவி, அறுவை சிகிச்சை செய்ய வசதியின்றி தவிக்கிறார்.திருப்பூர் மாவட்டம், இடுவம்பாளையம், நாச்சம்மாள் காலனியை சேர்ந்தவர் ஜெயலட்சுமி. கணவரை இழந்த இவர், பனியன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கு, பிரியங்கா, 15, விக்னேஷ், 13, என, இரு குழந்தைகள். பிரியங்கா, இடுவம்பாளையம் அரசு பள்ளியில், 10ம் வகுப்பும், விக்னேஷ் எட்டாம் வகுப்பு படிக்கின்றனர்.

பாடத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு! அரசுக்கு கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை

        பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், காலாண்டுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள், பொதுத்தேர்விலும் அதிக மதிப்பெண் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதுபோன்று, படிப்பில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கும் நடத்த வேண்டும் என கல்வி ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆய்வக உதவியாளர் பணி 7 லட்சம் பேர் காத்திருப்பு

         பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான தேர்வு முடிவு கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஏழு லட்சம் பேர், ஐந்து மாதங்களாக காத்திருக்கின்றனர். அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகஇருந்த, 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு, மே, 31ல் எழுத்துத் தேர்வு நடந்தது; ஏழு லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான அறிவிப்பே குளறுபடியாக இருந்ததால், ஆரம்பத்திலேயே பிரச்னைகள் ஏற்பட்டன.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள் அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்

       வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். அரசு விடுமுறை என்பதால் ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். 

பள்ளி சான்றிதழில் ‘பகீர்’ மோசடி : போக்குவரத்து கழக ஊழியர் 13 பேர் அதிரடி பணிநீக்கம்

      போக்குவரத்துக்கு கழகங்களில் வேலைக்கு சேர்பவர்கள் பணி நியமனத்தின்போது தரும் பள்ளி சான்றிதழ், சென்னையில் உள்ள பள்ளிக்கல்வி துறைக்கு அனுப்பப்பட்டு உண்மை நிலை அறியப்படும். காரைக்குடியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் கடந்த 1991ம் ஆண்டு முதல் 2002 வரையிலான ஆய்வில் 15 பேர், 8ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்பது தெரியவந்தது. 

சிறந்த மாற்றுத் திறனாளி ஆசிரியர்களுக்கான விருதுகள் - புதிய நெறிமுறைகள்:தமிழக அரசு உத்தரவு

      சிறந்த ஊழியர், பணியாளர் உள்பட பல்வேறு பிரிவுகளில், அரசு விருதுக்கு மாற்றுத் திறனாளிகளைத் தேர்வு செய்வதற்கான புதிய உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுத் திறனாளிகள் நலத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதீன் வெளியிட்ட உத்தரவு:

டிச.4ல் ஆசிரியர்கள் போராட்டம் -நக்கீரன் செய்தி

         சென்னையில் பள்ளிக் கல்வி இயக்குனர் அலுவலகம் முன்பு டிசம்பர் 4ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது. 


10th Maths New Study Material

ICT - Basic Computer Training | District wise Date Schedule

     கணினி வழி கற்றல் கற்பித்தலை எளிதாக்கும் வகையில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு "Basic Computer Training" வழங்க முடிவு - இயக்குநர் செயல்முறைகள் 

RIE Bangalore Training

Festival Advance Form Download

ரூபாய் 5000/- பண்டிகை முன்பணம் கோரும் விண்ணப்பம்

வீட்டில் சூரிய ஒளி மின்சாரம் குறைந்தது கட்டணம்

        காரைக்குடி:மொட்டை மாடியில் சோலார் அமைத்ததால் ஆயிரம் ரூபாய் மின் கட்டணம் செலுத்தியவர்கள், 10ல் ஒரு மடங்கு மட்டுமே கட்டணமாக செலுத்துகின்றனர்.தமிழகத்தில் 250 முதல் 300 நாட்கள் வரை முழுமையான சூரிய ஒளி கிடைக்கிறது. மின்வெட்டு பிரச்னை தீவிரமாகி வரும் நிலையில், மாற்றான சூரிய ஒளி மின்சாரத்தை தயாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மலேசியாவுக்கு இந்திய ஆசிரியர்கள்

     மலேசியாவின் கிராமப்புறங்களில் வசிக்கும் மலேசியர்களின் திறனை அதிகரிப்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த ஆங்கில ஆசிரியர்களை நியமிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
 

போனஸ் சம்பள உச்சவரம்பு ரூ.21 ஆயிரமாக உயர்த்த ஒப்புதல் : மத்திய அமைச்சரவை அனுமதி

       புதுடெல்லி: தொழிற்சாலை ஊழியர்களுக்கான போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.21 ஆயிரமாக உயர்த்தி மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தற்போதுள்ள போனஸ் சம்பள உச்சவரம்பை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.21 ஆயிரமாக உயர்த்துவது என முடிவு செய்யப்பட்டது. 

எதிர்காலத்தில் எந்த துறைக்கு மவுசு?

* வேலை வாய்ப்பை பொறுத்தவரை, இளநிலை அல்லது முதுநிலை படிப்பை எந்த பல்கலைக்கழகத்தில் படிக்கிறோம்? என்பது மிக முக்கிய பங்கு வகிக்கும்!

* துறை சார்ந்த சர்வதேச அறிவு அவசியம். அதன் அடிப்படையிலேயே, வரும் 2020ம் ஆண்டிற்குள் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். அதேசமயம், நாம் பெற்றுள்ள திறனில் 40 சதவீதம், நாம் சார்ந்த தொழில், துறை அல்லது தொழில்நுட்பத்திற்கு சம்பந்தமே இருக்காது என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும்.


Tips for Blocking all Annoying Ads on Android Devices

Pop-up ads that keep appearing on the screen while browsing on your Android phone can be a source of frustrations and annoyance.
       If you choose to do nothing about the pop-up ads, be ready to use an Android device that not only surfs slowly but also costs a lot of money. Blocking the pop-up ads that keep showing up on the device is the best and most effective method through which to make it surf faster and save some money in the process.

இந்த அப் தான் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் செயல்திறன் அதிகம் பாதிக்கிறது

       எவ்வளவு விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் வாங்கினாலும் நாளடைவில் அதன் பேட்ரி லைப்பும், செயல்திறனும் குறைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம் நாம் பயன்படுத்தும் சில அப்ஸ்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive