மனிதனுக்கு அதிகமா கோபம் வருதால் எந்த நற்பயணும் இருக்காது என்பதற்க்கு இந்த சிந்தணை கதை ஒரு எடுத்துக்காட்டு..
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர் கலந்தாய்வை முறையாக நடத்த வலியுறுத்தல்
ஆசிரியர் கலந்தாய்வை ஒளிவு மறைவற்ற முறையில் முறையாக நடத்த வேண்டும் என
தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்
வலியுறுத்தியது.
முதுநிலை ஆசிரியர்களுக்கு பணிவரன் முறை வழங்க தாமதம்
பணி நியமனம்
செய்யப்பட்ட முதுநிலை ஆசிரியர்களுக்கு, பணிவரன் முறை வழங்காத மேல்நிலைக்
கல்வித்துறை இணை இயக்குநரைக் கண்டித்து, வரும் 17-ஆம் தேதி முதுநிலை
பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
'ஜாக்டா' குழுவினர் இன்று இயக்குனருடன் சந்திப்பு
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து உட்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி 19 ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் இன்று பள்ளிக்கல்வி இயக்குனர்
அலுவலகத்தில் மனு கொடுக்க உள்ளனர்.
அரசு மானியங்கள் பெற ஆதார் கட்டாயம் விவசாயிகளுக்கு வேளாண் துறை உத்தரவு
மாநிலம் முழுவதும், ஒரு கோடிக்கும் மேலான விவசாயிகள் உள்ளனர். இதில், 81
லட்சம் பேருக்கு, ஒருங்கிணைந்த விவசாய கையேடு வழங்க திட்டமிட்டு, 65
லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்பு:புதிய திட்டம் இன்று அறிமுகம்
பள்ளிகளில் மாணவிகள் சந்திக்கும் பாலியல்,
ஈவ் டீசிங் போன்ற தொல்லைகளிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில்
புதிய திட்டம் திங்கள்கிழமை திருநெல்வேலி மாவட்டத்தில் அறிமுகம்
செய்யப்படுகிறது.
18 வயதுக்குட்பட்டோர் வாகனம் ஓட்டினால் பெற்றோர் மீது வழக்கு: ஓட்டுனர் உரிமமும் ரத்து
பெங்களூருவில்
விதிமுறையை மீறி 18 வயதுக்கு உட்பட்டோர் வாகனங்கள் ஓட்டினால் அவர்களது
பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்வதுடன், அவர்களது ஓட்டுனர் உரிமத்தையும்
ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் சிபாரிசு செய்துள்ளனர்.
கூடுதல் சி.இ.ஓ., பணியிடங்களை கலைக்க முடிவு?
தமிழகத்தில், அனைவருக்கும் கல்வி இயக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
பணியிடங்கள், 10க்கும் மேற்பட்டவை காலியாக இருந்தும், அவை நிரப்பப்படாமல்
இருப்பதால், அப்பணியிடங்களை கலைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்
பரவியுள்ளது.கல்வி அலுவலகங்கள்தமிழகத்தில் உள்ள பள்ளிகளை மேலாண்மை செய்யும்
வகையில், கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில், கல்வி
அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
போலி மருந்து பற்றி புகார் செய்வது எப்படி? மருந்து கடைகளில்'ஸ்டிக்கர்' ஒட்ட முடிவு
:''போலி மருந்துகள் குறித்து, புகார் செய்வது எப்படி என்பது பற்றி, அனைத்து
மருந்து கடைகளிலும், 'ஸ்டிக்கர்' ஒட்டப்படும்,'' என, மத்திய மருந்து
உற்பத்திதுறை செயலர் சுப்புராஜ் தெரிவித்தார்.சென்னையில் துவங்கிய இரண்டு
நாள்,
அரசு உரிமம் பெற்றவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்க கோரிக்கை
அரசு உரிமம் பெற்ற புத்தக விற்பனையாளர்களுக்கு, உடனடியாகப்
பாடப் புத்தகங்கள் வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழ்நாடு வணிகர்
சங்கங்களின் பேரமைப்பு சார்பில், முதல்வர் அலுவலகத்தில், மனு
கொடுக்கப்பட்டு உள்ளது.
சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும்
மாணவர்களுக்கு, தமிழக அரசின் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்காமல், இரண்டு
ஆண்டாக லட்சக்கணக்கான மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
பி.எஸ்சி. நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை முதல் வழங்கப்படுகிறது
பி.எஸ்சி.நர்சிங், பிஸியோதெரபி படிப்பில் சேர விண்ணப்பம் நாளை(திங்கட்கிழமை) முதல் வழங்கப்படுகிறது.
மாணவர்களுக்கு தேவை 'ஏழு'
நாட்டின் எதிர்காலம், மாணவர் கையில் தான் உள்ளது. அந்த பொறுப்புணர்ந்து
மாணவர்கள் செயல்பட வேண்டும். மாணவப் பருவத்தில், நல்ல வழிகாட்டியைக்
கொண்டிருப்பவர்கள் முன்னேறி விடுவர். எந்த வழிகாட்டுதலும் இல்லாமல், அல்லது
வழிகாட்டுதல்களை புறக்கணிக்கும் மாணவர்கள் திசைமாறி நிற்கிறார்கள். நல்ல
விஷயங்களை பார்த்தோ, படித்தோ, கேட்டோ தெரிந்து கொள்ள வேண்டும்.
இரண்டு டிப்ளமோ படிப்புகளுக்கு பல் மருத்துவ கவுன்சில் அனுமதி
ஜூலை 5-பல் மருத்துவ, 'டிப்ளமோ' படிப்புகள் இரண்டுக்கு, இந்திய பல்
மருத்துவக் கவுன்சில் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில், பல் மருத்துவம்
சார்ந்த, 24 படிப்புகள் உள்ளன. இதில், 'டென்டல் மெக்கானிக்கல், டென்டல்
ஹைஜீனிஸ்ட்' என்ற இரு, டிப்ளமோ படிப்புகளுக்கு, அனுமதி கிடைக்காமல்
இருந்தது. தற்போது, இந்திய பல் மருத்துவக் கவுன்சில் உரிய அனுமதி
அளித்துள்ளது.
எட்டு ஆண்டுகளில் 4,667 குழந்தைகள் தத்தெடுப்பு
தமிழகத்தில், 8 ஆண்டுகளில், 4,667 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளன.
இவற்றில், 3,610 பேர் பெண் குழந்தைகள்.தமிழகத்தின், சில மாவட்டங்களில்,
பெண் சிசுக்கொலைகள் அதிகம் நடந்தன.
தஞ்சை பெரிய கோவிலில் இலவச 'வை- - பை' வசதி
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு, உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்
ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். அவர்கள் பயனடையும் வகையில்,
தற்போது, 'வை-பை' வசதி செய்யப்பட்டு உள்ளது. இதற்கான கருவிகள் கடந்த
வியாழக் கிழமை பொருத்தப்பட்டன.