Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஐ.ஓ.எஸ்.8.1 அப்டேட் பைலை வாபஸ் பெற்றது ஆப்பிள்.

 
       மொபைல் சாதனங்களுக்கான தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐ.ஓ.எஸ்.8, ஆப்பிள் நிறுவனம் அண்மையில் வெளியிட்டது. அடுத்து ஒரு வாரத்தில் இதற்கான அப்டேட் பைல் ஒன்றை ஐ.ஓ.எஸ்.8.1 என்ற பெயரில் தன் சர்வர் வழியாக வழங்கியது. ஆனால், தொடர்ந்து வந்த பலவிதபுகார்களை அடுத்து, ஏறத்தாழ 90 நிமிடங்களில், அப்டேட் பைலை வாபஸ் பெற்றது.

இணையதள வசதி இந்திய கிராமங்களில் இலவசம்: வழங்க முன்வருகிறார் பேஸ்புக் தலைவர்

        இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

லஞ்சம் வாங்கினாலும், கொடுத்தாலும் மரண தண்டனை விதித்த மன்னன்: 700 ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டில் தகவல்

  • பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.
         பென்னேஸ்வர மடம் கோயிலில் உள்ள கல்வெட்டை   காட்டுகிறார் வரலாற்று ஆய்வாளர் சுகவன முருகன்.

TET பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிப்பு

    ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.) இருந்து விலக்கு அளிக்கப்பட்டும் தகுதிகாண் பருவம் மற்றும் பணப் பலன் கிடைக்காமல் 18 ஆயிரம் ஆசிரியர்கள் சிக்கலில் தவிக்கின்றனர். தமிழகத்தில் 2010 முதல் டி.இ.டி., தேர்வு நடைமுறையில் உள்ளது.

எம்.பில்., ஊக்கத்தொகை பெறுவதில் சிக்கல் : குழப்பத்தில் பட்டதாரி ஆசிரியர்கள்

           தமிழகத்தில் எம்.பில்., முடித்த பட்டதாரி ஆசிரியர்கள் அதற்கான ஊக்க தொகை பெறுவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு ஊக்க தொகை வழங்குவதற்கான அதிகாரம் தலைமையாசிரியருக்கு உள்ளதா அல்லது இணை இயக்குனருக்கு உள்ளதா என்ற குழப்பம் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
 

அகவிலைப்படி உயர்வு: அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி

      தமிழக அரசு அறிவித்துள்ள 7 சதவீத அகவிலைப்படி உயர்வுக்கு தலைமைச் செயலக சங்கம் உள்பட அரசு ஊழியர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளனஇதுகுறித்து தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர்
பீட்டர் அந்தோணிசாமி வெளியிட்ட அறிவிப்பு:

வந்தாள் மகாலட்சுமியே...! இன்று சர்வதேச பெண் குழந்தைகள் தினம் by எம்.டி.விஜயலட்சுமி,

                                                Shy Beggar Girl
   
         'வந்தாள் மகாலட்சுமியேஇனி என்றும் அவள் ஆட்சியே...' என பெண் குழந்தை பிறந்தவுடன் குடும்பங்களில் ஏற்படும் குதுாகலத்தை யாராலும் அளவிட முடியாது.பெண் குழந்தைகளை 'மகாலட்சுமி' எனவும் 'ஆதி பராசக்தி' எனவும் அவரவர் மதம், இனத்திற்கு ஏற்ப ஒவ்வொரு வகையான பெயர்களில் ஏற்றுக் கொள்ளும் பக்குவம் நமக்கு உண்டு.  
 

நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்: தாகூர் முதல் கைலாஷ் வரை

இந்தியக் குடிமக்கள்

       மகாகவி ரவீந்திரநாத் தாகூருக்கு, இலக்கியத்துக்கான நோபல் பரிசு 1913-இல் வழங்கப்பட்டது. இதுவே இந்தியர் ஒருவருக்குக் கிடைத்த முதல் நோபல் பரிசு.

அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வு பெற்றவர் பட்டியல் வெளியீடு

           அறிவியல் உதவியாளர் பணிக்கு தேர்வானவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நேற்று வெளியிட்ட அறிவிப்பு: 

அமைதிக்கான பரிசு: இந்தியாவின் கைலாஷ், பாகிஸ்தானின் மலாலாவுக்கு நோபல்

          இந்தியாவைச் சேர்ந்த குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மலாலா யூசஃப்சாய் ஆகியோருக்கு இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

கைலாஷ் சத்யார்த்தி - மலாலா


மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தாற்காலிக விரிவுரையாளர் பணி: 13 இல் நேர்முகத் தேர்வு

            திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தாற்காலிக விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு இம் மாதம் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது.

TET Article: TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல

          TET என்பது ஒரு தகுதி தேர்வு மட்டுமே அன்றி போட்டித் தேர்வு அல்ல என்பதை இங்கு தெளிவாக தெரிவிக்க வேண்டியது உள்ளது.
 

ஒவ்வொரு நோய்க்கும் செய்ய வேண்டிய முதல் உதவி சிகிச்சை முறை

 
       எதைச்செய்தாலும் உரிய நேரத்தில், முதலில் செய்ய வேண்டும் என்பார்கள். உதவியும் அப்படித்தான். முதலில் செய்தால்தான் அது பயன் உள்ளதாக இருக்கும். எனவே தான் முதல்- உதவி முக்கியத்துவம் பெற்றுள்ளது. வாய்கிழிய பேசுபவர்களிடம்,வயிற்று வலிக்கு என்ன முதல் உதவி செய்வது என்று கேட்டால், பதில் சொல்ல திணறி போவார்கள். 



தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 7% உயர்த்திட அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
 
         "மக்கள் பணியாற்றும் அரசு ஊழியர்களையும், கல்வி போதிக்கும் ஆசிரியர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு சலுகைகளை வழங்கியதோடு, மத்திய அரசுக்கு இணையான அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்களுக்கும் அவ்வப்போது தமிழக அரசு வழங்கிவந்துள்ளது.

Flash News:DA 7% Announced

ஆசிரியர்கள் & அரசு ஊழியர்களுக்கான 7% அகவிலைப் படியினை அறிவித்தது தமிழக அரசு

ஆதிதிராவிடர் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் : தற்போதைய நிலை தொடர மதுரை ஐகோர்ட் உத்தரவு

                 அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமனத்தை எதிர்த்து தாக்கலான வழக்கில், 'தற்போதைய நிலை தொடர வேண்டும்' என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

கல்விச் சுற்றுலா செல்பவர்கள் மாவட்ட நீதிபதிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு

            மாணவர்களை கல்விச் சுற்றுலாவிற்காக அழைத்துச் செல்லும் பள்ளிகள் அது தொடர்பாக எழுத்துப் பூர்வமான தகவலை மாவட்ட நீதிபதிக்கு தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளிகள் மூலம் மாணவர்களை சுற்றுலா அழைத்துச் செல்வது தொடர்பாக சில கட்டுப்பாடுகளை கல்வித்துறை விதித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும்

அக்டோபர் 16 முதல் மீண்டும் "கிஸான் விகாஸ்' திட்டம்

          "கிஸான் விகாஸ்' பத்திர சேமிப்புத் திட்டம் அக்டோபர் 16-ஆம் தேதி முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தமிழக தலைமை தபால் துறைத் தலைவர் டி.மூர்த்தி தெரிவித்தார்.

வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?

                  வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும்,
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.

பள்ளிகளில் கொடி நாள் நிதியை வசூல் செய்ய தேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு அனுமதியளித்து ஆணை வெளியீடு

            பள்ளிக்கல்வி - அகில இந்திய பார்வையற்றவர்களுக்கான கொடி நாள் - பள்ளிகளில் கொடி நாள் நிதியை வசூல் செய்ய தேசிய பார்வையற்றோர் சங்கத்திற்கு அனுமதியளித்து ஆணை வெளியீடு

இலவச பேருந்து அனுமதி சீட்டுகள் வழங்குவது குறித்த விவரம் கோரி உத்தரவு

               தொடக்கக் கல்வி - 2014-15ம் ஆண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியர்களுக்கு இலவச பேருந்து அனுமதி சீட்டுகள் வழங்குவது குறித்த விவரம் கோரி உத்தரவு

ஆசிரியர் பணி வழங்ககோரி மாற்றுத்திறனாளி மனுதாக்கல் :அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.

       விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் தாலுகா பெருமாள்பட்டியை சேர்ந்த ராமர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
 
              மாற்றுத்திறனாளியான நான், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதித்தேர்வில் வெற்றி பெற்றேன். மேலும், தகுதி தேர்வில் 64.23 மதிப்பெண் பெற்றுள்ளேன். தேர்வாணையம் இடைநிலை ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தது. நானும் சென்றேன். வேலை கிடைக்கும் என காத்திருந்தேன்.

அரசு பள்ளிகளில் - ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு..

             பள்ளி அலுவலகம், வகுப்பறைகளில் ஒட்டடை அடித்து, தூய்மையாகவைத்திருக்க வேண்டும்,” என, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வரமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகங்களையும் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்ற முடிவு.

                     தமிழ்நாட்டில் அனைத்து வேலை வாய்ப்பு அலுவலகங்களும் விரை வில் வேலைக்கு வழிகாட்டும் மையங்களாக மாற்றப்பட இருக்கின்றன. முதல்கட்டமாக கோவை, வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங் கள் மாதிரிமையங்களாக மத்திய அரசால் தேர்வுசெய்யப் பட்டுள்ளன.

பிஇ, பிடெக், கேள்வித்தாளில் மாற்றம்.

             அண்ணா பல்கலைக்கழகம் பிஇ, பிடெக் மாணவர்களின் கேள்வித்தாளில்மாற்றம் கொண்டுவர முடிவு செய்துள்ளது. பொறியியல் படிக்கும் மாணவ&மாணவிகளுக்கு தற்போது வழங்கப்படும் தேர்வுக்கான கேள்விதாளில்100 சதவீதம் கேள்விகள் “சப்ஜட்டிவ்“ கேள்விகளாக உள்ளன.
 

அவமதிப்பு வழக்கில் கல்வி அலுவலர்களுக்கு ரூ.30 ஆயிரம் அபராதம் : ஐகோர்ட் உத்தரவு

         கோர்ட் அவமதிப்பு வழக்கில், கன்னியாகுமரி முதன்மைக் கல்வி அலுவலர், குழித்துறை கல்வி மாவட்ட அலுவலருக்கு 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது

TNUSRBகாவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள்: எஸ்.ஐ. தேர்வுக்கு காத்திருக்கும் இளைஞர்கள்..

             காவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக உடலை தயார் செய்துகொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

அரசு ஊழியர்களை உருவாக்கும் அரசு ஊழியர்கள்: ஏழை பட்டதாரிகளுக்காக கட்டணமின்றி சேவை!!

           அரசு, வங்கிப் பணிக்கான தேர்வுகளை மையப்படுத்தி வணிக ரீதியாகப்  புற்றீசல் போல தனியார் பயிற்சி மையங்கள் பெருகி வரும் வேளையில், ஏழை பட்டதாரி மாணவர்களை அடையாளம் கண்டறிந்து எவ்விதக் கட்டணமும் வாங்காமல் அவர்களை அரசு ஊழியர்களாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் 

ஓய்வுபெற்ற பிறகும் ஆசிரியர்கள் ஊக்க ஊதியம் பெறலாம்: உயர்நீதிமன்றம் உத்தரவு

               ஓய்வுபெற்ற பிறகும் ஊக்க ஊதியம் பெற ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளித்தாளாளர் மற்றும் செயலர் என்.பாலசெüந்தரி. அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். எம்.ஏ.,எம்.எட்., படித்ததற்காக 3வது ஓய்வூதியம் கோரி விண்ணப்பித்தார். இந்த கோரிக்கையை பள்ளிக் கல்வித் துறை நிராகரித்தது. இதைத் தொடர்ந்து, பாலசெüந்தரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி, அவருக்கு 3ஆவது ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட்டிருந்தார்.

TNUSRB 14,623 சீருடைப் பணியாளர் காலிப் பணியிடங்களைப் நிரப்ப அரசு உத்தரவு

            காவல்துறையில் 20 ஆயிரம் காலியிடங்கள் உள்ள நிலையில், உதவி ஆய்வாளர் தேர்வுக்காக உடலை தயார் செய்துகொண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். தமிழகத்தில் 1,450 காவல் நிலையங்கள், 200 போக்குவரத்து காவல் நிலையங்கள், 190 மகளிர் காவல் நிலையங்கள், 70 புறக்காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 1.22 லட்சம் பணியிடங்கள் உள்ளன. ஆனால் ஒரு லட்சம் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள சுமார் 22 ஆயிரம் பணியிடங்கள் எப்போதும் காலியாகவே இருக்கின்றன.

‘பள்ளி படிப்பின்போதே போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டும்’

            ‘பள்ளியில் படிக்கும்போதே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் எண்ணத்தை மாணவர்களுக்கு உருவாக்க வேண்டும்,‘ என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வலியுறுத்தினார்.

  

வாகன விபத்தை தவிர்க்கும் தொழில் நுட்ப கருவி: ஊட்டி அரசு பள்ளி மாணவன் கண்டுபிடிப்பு

        டில்லியில் நடந்த தேசிய அறிவியல் கண்காட்சியில், தென் மாநில அளவில், இரண்டாம் இடம் பிடித்து, ஊட்டி அரசுப்பள்ளி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

          நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் கோகுல்; அவர் 7ம் வகுப்பு வரை, ஊட்டி அருகே ஆர்.கே.,புரம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் படித்தார்.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive