Tamil
Nadu GO classifying pensioners into those who retired before and after
June 1, 1988 struck down. In fixing pension, no differential treatment
can be made among government employees who retired in different periods
while taking into consideration their ‘dearness pay’, the Supreme Court
has held.
"சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட் பயிற்சி பெறுவதற்கு வறுமை தடையாக
இருப்பதில்லை," என, இந்திய பட்டய கணக்கர்கள் சங்க (ஐ.சி.ஏ.ஐ.,) தேசிய
தலைவர் ஜெயதீப் நரேந்திர ஷா பேசினார்.
மாணவர்களின் மொழியறிவை வளர்க்கும் வகையில், 10 பல்கலைக்கழகங்களில், மொழி
பயிற்சி கூடங்களை, அரசு அமைக்க உள்ளது. இதற்காக, 1.5 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கியுள்ளது.
பள்ளிக் குழந்தைகளிடம் ஜாதி, மத அடிப்படையில், பாரபட்சம் காட்டப்படுவதாக
புகார் எழுந்துள்ளதற்கு, கவலை தெரிவித்துள்ள தேசிய ஆலோசனை குழு, "இதை
தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை
வலியுறுத்தி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளுக்கு, டிஜிட்டல் நூலக இணைப்பு
வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, 100
கல்லூரிகளில், இத்திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.
"பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர்
மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கான, 56 விடுதிகளுக்கு, 50 கோடி
ரூபாயில், சொந்த கட்டடம் கட்டப்படும்" என முதல்வர் ஜெயலலிதா
உத்தரவிட்டுள்ளார்.
"மைக்ரோசாப் நிறுவனம், இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் சயின்ஸ், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து கல்வித்திறன், பயிற்சியை மேம்படுத்த உள்ளது,''என, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணைத்தலைவர் ரிச்சர்ட் ரஷீத் கூறினார்.
வாழ்க்கையில் எல்லாமே ஒரு கணக்கு தான். இசை கூட ஒரு கணக்கின்
அடிப்படையிலேயே இயங்குகிறது. ஆனால் இந்த கணக்கு பாடம் மட்டும்
பெரும்பாலோருக்கு கசக்கும் மருந்தாகி விடுகிறதே ஏன்?
சாட்டை திரைப்படத்தை பார்த்தால் அரசு பள்ளிகள் ஒரு வித கிலியை
ஏற்படுத்துகின்றன. ஆனால், அரசு பள்ளிகளிலும் கடமையை தவறாமல் செய்யும்
ஆசிரியர்கள் உள்ளனர் என்பதற்கு, ஆசிரியை சசிகலா தேவி ஒரு எடுத்துக்காட்டு.
அனைத்துக் கல்லூரிகளிலும், ஒரே பாடத் திட்டத்தை அமல் செய்யும் முறை,
வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான, பணிகளை, பல்கலைக் கழக
பாடத் திட்டக் குழுக்கள் துவங்கியுள்ளன.
வேதாரண்யம் அருகே அரசு தொடக்கப்பள்ளியில் 5
வகுப்புகளுக்கும் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். கூடுதல்
ஆசிரியர் நியமிக்க வேண்டும், இல்லாவிடில் பள்ளிக்கு பூட்டு போடும்
போராட்டம் நடத்துவோம் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்
தகுதித் தேர்ச்சி பற்றி அரசு மறு ஆணை வெளியிட வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கழக
மாநிலத் தலைவர் ஆ. மரியதாசன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய செகண்டரி கல்வி போர்டு (சிபிஎஸ்இ)
நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் 99 சதவீத ஆசிரியர்கள் தோல்வியைத்
தழுவுகிறார்கள் என்ற தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது.
தமிழகத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களுக்கும்,
புதிதாக நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரிய, ஆசிரியைகளுக்கும் RMSA மூலமாக 311 மையங்களில்
வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் 23ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.
பூச்சியத்தை கண்டறிந்து
கணிதம் தழைத்தோங்க இந்தியா உதவினாலும் ஆர்யப்பட்டர், பாஸ்கரர்,
பிரம்மகுப்தர், சீனிவாச இராமானுஜம் போன்ற ஒரு சில இந்திய கணிதமேதைகளே புகழ்
அடைந்தனர் . அவர்களின் வரிசையில் கணிதத்தில் பல ஆய்வுகள்செய்த காப்ரேகர் எனும் இந்திய கணிதமேதையை கவனிக்க தவறிவிட்டோம் வாருங்கள் நண்பர்களே அவரின் வரலாற்றினை புரட்டிப்பார்ப்போம்
மாணவ, மாணவியரின் விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்வதற்கான கால
அவகாசம், 31ம் தேதியுடன் முடியும் நிலையில், மேலும் இரு வாரங்களுக்கு,
அவகாசத்தை நீட்டிப்பு செய்ய, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
"வெறும் வயிற்றுடன் இளைஞர்கள் கனவு காண முடியாது. தங்களுக்கு நன்மையானதை
இந்த அரசு செய்யுமா என்ற ஏக்கமும், சந்தேகமும் இளைஞர் பட்டாளத்திற்கு
உள்ளது. தேவையான சீர்திருத்தங்களை விரைந்து மேற்கொள்ள வேண்டும்" என
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
ஓய்வூதியதாரர்கள்
"ஆதார்' அடையாள அட்டை விவரங்களை சமர்ப்பிக்க வேண்டியதை தொழிலாளர் வருங்கால
வைப்புநிதி அமைப்பு (இ.பி.எஃப்.ஓ.) கட்டாயமாக்கியுள்ளது.
இதுகுறித்து
இ.பி.எஃப்.ஓ. வியாழக்கிழமை வெளியிட்ட செய்தியில்:ஓய்வூதியதாரர்களின்
விவரங்களை அறிந்து, அவர்களுக்கான சேவையை மேலும் மேம்படுத்தும் வகையில்
அனைவரின் "ஆதார்' அடையாள அட்டை விவரங்களை பெற முடிவு
செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் மாதம் தேர்வு செய்யப்பட்ட அரசு பாலிடெக்னிக்
விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு
விரைவில் பணி நியமனம் வழங்கப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்கக
வட்டாரங்கள் தெரிவித்தன.