Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பு!

இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட மூன்று பாடப்பிரிவுகள் தமிழில் துவங்கப்படும்' என, அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.


அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரி செயல்பாடுகள் மற்றும் வருங்கால புதிய திட்டங்கள் குறித்து, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி நேற்று ஆலோசனை நடத்தினார்.



இதில், உயர்கல்வி முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.



கூட்டத்துக்கு பின் அமைச்சர் பொன்முடி அளித்த பேட்டி:



அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், தமிழ் வழி படிப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.



வரும் ஆண்டில், கம்ப்யூட்டர் சயின்ஸ், இ.சி.இ., எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் உள்ளிட்ட படிப்புகளில், அடுத்த ஆண்டு முதல் தமிழ் வழி படிப்புகள் துவங்கப்படும்.



சிவில், மெக்கானிக்கல் பாடங்களில் தமிழ் வழி படிப்பில் கூடுதல் இடங்கள் ஒதுக்கப்படும்.



இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனங்களில் வேலை வாங்கி தருவதாக புரோக்கர்கள் வசூல்!!!


ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலி பணியிடங்களில், பள்ளி மேலாண்மை குழு சார்பில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். சில அரசியல் புரோக்கர்கள் தற்போதே எம்.எல்.ஏ., அமைச்சர் சிபாரிசில் வேலை வாங்கி தருவாக கூறி ரூ.5 லட்சம் வரை பேரம் பேசி வருகின்றனர்.


நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிகமாக நிரப்பலாம்.



மதிப்பூதியம் மாதம் முறையே ரூ.12ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையும், முதுகலைக்கு ரூ.18 ஆயிரம் வழங்கப்படும், என பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.



இதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியில் காலிப்பணியிடங்களை பள்ளி மேலாண்மை குழு மூலம் நிரப்பப்பட உள்ளனர். முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களுக்கு எந்தப்பள்ளியில் காலியிடம் உள்ளது என தெரிந்துகொள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்றனர்.



அவர்களிடம் சில அரசியல் புரோக்கர்கள், அமைச்சர், எம்.எல்.ஏ., சிபாரிசில் தற்காலிக ஆசிரியர் பணி வாங்கி தருவதாக கூறி ரூ. 3 முதல் 5 லட்சம் வரை கேட்கின்றனர்.



கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தில் மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகள் கண்காணிக்கிறோம். மாணவர்கள் நலன் கருதி பள்ள மேலாண்மை குழு மூலம் ஆசிரியரை நியமிக்கலாம். இப்பணி நிரந்தரம் கிடையாது.

வேறு ஆசிரியர்கள் அந்த பணியிடத்துக்கு வரும் வரை பணிபுரியலாம். எனவே விண்ணப்பதாரர்கள் அரசியல்வாதிகள், புரோக்கர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம், என்றனர்.

NEET - Best Coaching Centre

 




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.23

 


வாடிகன் நகரம்



CEO to JD Promotion Order Released!

Schemes Updation in TNSED Schools App

 

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hitech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!

 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் (Hitech Labs) மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் அறிவுரைகள்!

 

 

CRC Training Classes to PG Teachers 24.06.2023

 

 


 

 

2022-23 MBBS & BDS CUT-OFF - UNDER 7.5% RESERVATION

 

MUTUAL TRANSFER NORMS!

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive