தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாநில செயற்குழு கூட்டம்
நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில்
இருந்தும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், பாடங்கள் நடத்தி
முடிக்கப்படவில்லை. இந் நிலையில், காலாண்டு தேர்வு இன்று துவங்குவதால்,
மாணவர்கள் பீதி அடைந்துள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜாக்டோ ஜியோ சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள்
85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அனைத்து
துறைகளுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள மலை கிராமங்களில் ரூ.7,500 ஊதியம் என்ற
அடிப்படையில் தாற்காலிகமாக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என
பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின்
பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
வயது வந்தோர் பள்ளியில் இணைந்து புதிதாகக் கல்வியறிவு பெற்றவர்கள்
எழுத்தறிவுத் திட்டத்தின் தூதர்களாக விளங்குவார்கள் என்று குடியரசு துணைத்
தலைவர் வெங்கய்ய நாயுடு பாராட்டு தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடந்தது. இதற்காக
வரலாற்று புகழ்பெற்ற வேலூர் கோட்டை மைதானத்தில் பிரம்மாண்டமான பந்தல்
மற்றும் மேடை அமைக்கப்பட்டிருந்தது.
பள்ளிக்கல்வியில், 'எமிஸ்' கல்வி மேலாண்மை திட்ட இணையதள பராமரிப்பு பணி,
தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளதால், மாணவர்களின் ஆதார் எண்
உள்ளிட்ட சுய விபரங்களில், ரகசியம் காக்கப்படுமா என்ற சந்தேகம்
எழுந்துள்ளது.
சட்டப்பேரவையில் அறிவித்தபடி அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய
ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட
ஒதுக்கீட்டில் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளைச் சேர்க்க செப்.11 முதல்
செப்.25 வரை மீண்டும் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம்
தெரிவித்துள்ளது.
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களுக்கான
தொகை ரூ.1,136 கோடி வரும் அக். 7- ஆம் தேதிக்குள் வழங்கப்படும் என
உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.