புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட அரசு உயர் பதவிக்கான
முதல்நிலை தேர்வு எழுதுவோர், அதற்கான அனுமதி அட்டையை முன்னதாகவே,
இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி, யு.பி.எஸ்.சி.,
எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற குடிமைப் பணிகளுக்காக, யு.பி.எஸ்.சி.,
எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் தேர்வுகளை
நடத்துகிறது.