DSE - அனைத்து மாவட்ட CEO,DEEO மற்றும் மெட்ரிக்ப்பள்ளி ஆய்வாளர்களுக்கான
ஆய்வுக்கூட்டம்- 12/06/17 அன்று காணொலி காட்சி மூலம் நடைபெறுதல் -
இயக்குநர் செயல்முறைகள் !!
புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள, 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு,
ஏழாவது சம்பள கமிஷன் நடைமுறைக்கு வந்து, 18 மாதங்கள் முடியும் நிலையில்,
டி.ஏ., உள்ளிட்ட திருத்தப்பட்ட படிகளுடன் கூடிய முழு சம்பளம், ஜூலை மாதம்
முதல் கிடைக்கும்.
சென்னை
: நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத போது சிபிஎஸ்இ எப்படி நீட்
தேர்வை நடத்த முடியும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி
எழுப்பியுள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் பிளஸ் 2 மதிப்பெண்ணை
சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்
இன்று விசாரணைக்கு வந்தது.
திண்டுக்கல்: 'தமிழக துவக்கப் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க ஜாதி விபரம்
கட்டாயமில்லை. பெற்றோர் விரும்பினால் ஜாதி விபரம் பதிவு செய்யலாம்' என,
பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
திண்டுக்கல்: விளைநிலங்களில் வீடுகட்ட விவசாய அதிகாரியின் தடையின்மை சான்று
அவசியம் என பத்திரபதிவுத் துறை, வருவாய் துறையினருக்கு புதிய பதிவு
நடைமுறை குறித்த பரிந்துரைகளை வழங்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
வரும் ஆண்டு முதல் மத்திய அரசின் 'ஆயுஷ்' துறையின் கீழ் வரும் சித்தா,
ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வு
கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசு கேட்ட, 10
கேள்விகளுக்கு பதில் அளித்துள்ள தமிழக அரசு, தஞ்சையில் மருத்துவமனை அமைக்க
பரிந்துரைத்துள்ளது.
தமிழக அரசு டாக்டர்கள், தனியார் மருத்துவமனையில் பணி செய்வதாலும்,
சொந்தமாக, 'கிளினிக்' நடத்துவதாலும், மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையான
சம்பளம் வழங்க முடியாது' என, ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த
அமைக்கப்பட்ட குழு மறுத்துள்ளது.