Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th Study Materials - Biology

New Materials:
Prepared by - Mr. RAMASAMY . V


மேல்நிலைத் தேர்வு;தனித்தேர்வர்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு

         நடைபெறவுள்ள மார்ச் 2016 மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு தனித்தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் துறையால் அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்களுக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க 16.11.2015 முதல் 27.11.2015 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

ஓ.பி.சி., மாணவர்களுக்கு உ.பி., சலுகையோ சலுகை

      இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு என வகைபடுத்தப்பட்டுள்ள, ஓ.பி.சி., மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பை, 30 ஆயிரம் ரூபாயிலிருந்து, இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்த, உ.பி., அரசு திட்டமிட்டுள்ளது. 

ஆசிரியர்களுக்கு 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி: ஆட்சியரிடம் வலியுறுத்தல்

       ஆசிரியர்களுக்கு அவர்கள் வசிப்பிடத்திலிருந்து 10 கி.மீ. தொலைவுக்குள் தேர்தல் பணி வழங்க வேண்டும் என, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.இதுதொடர்பாக, அமைப்பின் திருநெல்வேலி மாவட்டக் கிளைத் தலைவர் பி. ராஜ்குமார், செயலர் செ. பால்ராஜ், பொருளாளர் சே. சுப்பிரமணியன், நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை, ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் அளித்த மனு:2016இல் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.


மெல்லக் கற்கும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வினா-விடைகையேடு

        விருதுநகர் மாவட்டத்தில் 10, பிளஸ்-2 படிக்கும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான சிறப்பு வினா-விடை கையேடு தயாரிக்கப்பட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புதன்கிழமை தெரிவித்தார்.இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அ.புகழேந்தி கூறியதாவது:


இணை இயக்குனர் கூட்ட தகவல்கள்- அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் கண்டிப்பாக பின் பற்ற வேண்டும்!!!

        இன்று18-11-2015 வேலூரில் நடைபெற்ற இணை இயக்குனர்( Hsc.JD)மீளாய்வு கூட்ட தகவல்:தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்: ந.க.எண்.28804/ஜே2/2015. நாள்.17-11-2015 மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள். ந.க.எண்.34764/எம்/இ1/2015, நாள்.15.11.2015 தொடர் தலை காரணமாக அனைத்துவகைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.


தினமும் தேசிய கீதம் பாடி வகுப்புகளை தொடங்கவேண்டும்: சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு

        நாட்டில் உள்ள மாணவர்களுக்கு தேசப்பற்றை உருவாக்கும் வகையில், தினமும் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாடியே தொடங்கவேண்டும் என்று மத்திய செகண்டரி கல்வி போர்டு (சி.பி.எஸ்.இ.). பள்ளிக்கூடங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கொல்கத்தா ஐகோர்ட்டில் உலகில் பல நாடுகளில் இருப்பதுபோல, தேசிய கீதம் பாடியே பள்ளிக்கூடங்களை தொடங்கவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


PINDICS REGs: ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு: படிவம் நிரப்புவதற்கு உதவியாக

PINDICS REGs:

ஆசிரியர் செயல் திறன் மதிப்பீடு:

படிவம் நிரப்புவதற்கு உதவியாக
1.1.2015 முதல் நடைபெற்ற பயிற்சிகள் விபரம். (பயிற்சிகள் & தேதிகள் வட்டாரத்தைப் பொருத்து மாறுபட வாய்ப்புண்டு)

வெள்ள நிவாரணத்துக்கு அரசு பள்ளி ஆசிரியர்கள் ஒருநாள் ஊதியம் அளிப்பு - முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம்

மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களின் ஒருநாள் ஊதியத்தை வழங்க ஜாக்டாவில் இடம்பெற்றுள்ள 18 ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பு - அனைத்து ஆசிரியர்களும் 8.30மணிக்கு முன்னதாக பள்ளிக்கு செல்ல வேண்டும் - இணை இயக்குனர் உத்தரவு

தொடர் மழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டு வந்தன. வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன. தற்போது மழையின் தாக்கம் குறைந்துள்ளதையடுத்து வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. 

15% salary hike in 7th CPC while 6th CPC granted up to 40%

15% salary hike expected in 7th CPC report while 6th CPCgranted up to 40% – Video report of CNBC TV18

The Seventh Pay Commission report is likely to submitted to the Finance Ministry on Thursday, says the sources.



வெள்ளம் பாதித்த மாணவர்களுக்கு மீண்டும் இலவச புத்தகம், சீருடை

தமிழகத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, மீண்டும் இலவச பாடப்புத்தகம் மற்றும் சீருடை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுஉள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலுார், வேலுார், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், வெள்ளத்தால், மாணவ, மாணவியர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை

சென்னை உள்பட 3 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் 22-ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. மழை நின்ற பிறகும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாததால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் வரும் 22-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.

ஒத்திவைக்கப்பட்ட பி.இ. தேர்வுகளுக்கு மறு தேதி: அண்ணா பல்கலை. அறிவிப்பு

தொடர் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்த விவரங்கள் பல்கலைக்கழகத்தின் www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

சென்னையில் 250 செ.மீ. மழை கொட்டுமா? நாசா கூறியதாக வாட்ஸ்அப்-ல் பரவும் தகவல் உண்மையில்லை

வருகிற 21 அல்லது 22 ஆம் தேதி சென்னையில் மிகவும் பலத்த மழை பெய்யும். அது 250 செமீ அளவுக்கு இருக்கும் என நாசா கூறியதாக வாட்ஸ்அப்பில் பரவி வரும் செய்திகளில் உண்மையில்லை என தெரிகிறது.

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் நடத்தப்படுவது எப்போது? பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்ப்பு

2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு மீண்டும் எப்போது நடத்தப்படும் என்று பி.எட். பட்டதாரிகள் எதிர்பார்த்து உள்ளனர்.

ஆண்டுக்கு 40 நாள் விடுமுறை உ.பி., அரசு ஊழியர்களுக்கு 'ஜாலி'

உ.பி.,யில், இந்தாண்டுக்கான அரசு விடுமுறை, 40 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. உ.பி.,யில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது; இங்கு, சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படும், 'சத்' திருவிழா மிகவும் பிரபலம். 

7th CPC - மத்திய அரசு ஊழியர்களுக்கு 23% ஊதிய உயர்வு?

மத்திய அரசு ஊழியர்களுக்கு 23 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என 7-வது ஊதியக் குழு வியாழக்கிழமை பரிந்துரை செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7TH CPC TWO POSSIBLE FITMENT FORMULAE

The Pay Commission, if it followed the methods adopted by previous pay commissions to compute the increase to be recommended for revision of pay and allowances of government servants, minimum 40% increase can be recommended.

But According to the Medium-Term Expenditure Framework Statement tabled by Finance Minister Arun Jaitley in Parliament said

தலைமைஆசிரியர் திடீர் விடுமுறை வகுப்பறையின் பூட்டை உடைத்து பாடம் நடத்திய மாற்று ஆசிரியர்

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற் குட்பட்ட கஞ்சம்பட்டி அருகே உள்ள பொன்னேகவுண்ட னூரில் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி செயல்படுகிறது. இந்த பள்ளியில் மொத்தம் 11 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு தலைமை ஆசிரியராக ஜெயலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். தினமும் தலைமை ஆசிரியரே வகுப்பறையை திறப்பது வழக்கம்.

FLASH NEWS : தொடர் மழை பாதிப்பு காரணமாக 3 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு 22.11.2015 வரை தொடர் விடுமுறை

கனமழை காரணமாகவும், மழை வெள்ள நீர் வடிவதற்காகவும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நவம்பர் 22 (22-11-2015) ஞாயிற்று கிழமை வரை விடுமுறை அறிவிப்பு.

TRB மூலம் (2012-2014) கணித பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு .

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பள்ளிக்கல்வித்துறையில் அ.மே.நி.ப / அ.உ.பள்ளிகளில் கணித பாட பட்டதாரி ஆசிரியர்களாக நியமனம் பெற்றதை முறைபடுத்தி ஆணை வெளியீடு

பள்ளி விடுமுறை தொடர்வது ஏன்?

மழை பாதிப்பு நீடிப்பதால், சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு, இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், மழை பாதிப்பு குறைந்த பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவியர், எப்போது பள்ளி திறக்கும் என எதிர்பார்த்துள்ளனர்.

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம் - அரசு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். 

வேலூர் மாவட்டம் - இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைக்கப்பட வேண்டும்

18-11-2015 வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இன்று அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளியை திறந்து வைக்கப்பட வேண்டும். அனைத்து AEEO /AAEEO's 10 முதல்15 பள்ளிகளை பார்வையிட்டு/ஆய்வு செய்து நாளை மாலை DEEO அவர்களுக்கு அறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive