Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு

       காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்விக்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.
 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கு விளையாட்டு பயிற்சி

         தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆசிரியர்களுக்கான விளையாட்டு பயிற்சி முகாம் ஆகஸ்டில் நடக்கிறது.

புதிய பாட புத்தகத்தில் முன்னுரை, முகவுரை நீக்கம்

       பிளஸ் 1, பிளஸ் 2 பாட புத்தகங்களில் முன்னுரை, முகவுரை நீக்கி, புதிதாக வழங்கப்பட்டு உள்ளது. தனிநபர்களின் பெயர்களும் நீக்கப்பட்டு உள்ளன.
 

பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள்'அழுவதா, சிரிப்பதா என தெரியலையே' ஐ.ஏ.எஸ்.,சில் சாதித்த டிரைவர் மகள் கண்ணீர்!

        பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்து, ஐ.ஏ.எஸ்., தேர்வில் சாதித்த, கார் டிரைவர் மகள், 'அழுவதா; சிரிப்பதா என்ற சூழலில் உள்ளேன்' என, கண்ணீருடன் தெரிவித்தார்.

அறிவியல் விருது கண்காட்சி

                புத்தாக்க அறிவியல் விருது கண்காட்சியை வரும் 15ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
 

அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112


அனைத்து அவசர உதவிகளுக்கும் விரைவில் வருகிறது ஒரே அவசர உதவி எண் 112

     அனைத்து அவசர தேவைகளுக்கும் தொடர்பு கொள்ளக்கூடிய நாடு தழுவிய அளவில் 112 என்ற ஒரே அவசர உதவி எண் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழும் காரணம் என்ன?


ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் வாழும் காரணம் என்ன?

    உலகளாவிய வகையில் பிறப்பு விகிதத்தில் பெண்களைவிட ஆண்களின் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் அதிகமாகவே உள்ளது. எனினும், பெண்களைவிட ஆண்களுக்கு குறைந்த வயதில் மரணம் நேர்வது ஏன்? என்பது இதுவரை விடை தெரியாத புதிராகவே இருந்து வந்தது. இந்த புதிருக்கான விடையை தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர்.  

தமிழன்டா!!! 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்


தமிழன்டா!!! 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவுபடுத்தி கின்னசில் இடம்பிடித்த ஆசிரியர்

     வெறும் 10 இலக்கம் கொண்ட தொலைபேசி எண்ணையே நினைவு வைத்திருக்க முடியாமல் திணறும் தலைமுறை நம்முடையது. அப்படி இருக்கையில் 270 இலக்கம் கொண்ட பைனரி தொடரை நினைவில் வைத்திருக்கும் தமிழரின் அபாரமான நினைவுத்திறனை என்ன சொல்லிப் பாராட்டுவது?

ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகள்

       ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கான வழிமுறைகளைக் கேட்டு வாசகர்களிடமிருந்து பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதற்கான பதிலைத் தமிழக அரசின் வேலைவாய்ப்புத் துறையின் துணை இயக்குநர் எம்.கண்ணனிடம் கேட்டுப் பெற்றோம். 
 

வகுப்பில் ஆபாசப்படம்: பெற்றோருக்கு பொறுப்பும், விழிப்பும் தேவை: ராமதாஸ்

        கோவை இடையார்பாளையம் அருகிலுள்ள தனியார் பள்ளி ஒன்றின் வகுப்பறையில் பாடவேளையின்  போது 7 மாணவிகள் செல்பேசியில் ஆபாசப் படம் பார்த்துக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்தியைக் கேட்டதும் எங்கே போகிறது தமிழ்நாடு? என்ற கவலை கலந்த அதிர்ச்சியும், வேதனையும் தான் என்னை வாட்டுகிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.

         7.7.2015 காலை 11.00 மணிக்கு தொடக்கக்கல்வி இயக்குநருடன் TNPTF மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பு.சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்புமிகு இளங்கோவன் அவர்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொதுச் செயலாளர் திரு.பாலச்சந்தர், மாநிலத் தலைவர் திரு.மோசஸ், மாநிலத்துணைத் தலைவர் திரு.ஜோதிபாபு மற்றும் நாமக்கல், திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பாளர்கள் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த விவாதித்தனர். இயக்குநர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்கள்.
 

முதுகலை ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கலந்தாய்வை விரைவில் நடத்திட - TNHSPGTA கோரிக்கை

          முதுகலை ஆசிரியர்களுக்கு    இடமாறுதல்  கலந்தாய்வை   விரைவில் நடத்திட, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத்தலைவர் வே.மணிவாசகன் தமிழக அரசுக்கு கோரிக்கை

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும்அது குறித்த விவரங்கள்!

1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு ஜூலை 15 முதல் அசல் சான்றிதழ்

      பிளஸ் 2 மாணவர்களுக்கு அசல் சான்றிதழ் ஜூலை 15 முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
 

TNPSC:குரூப் 2 தேர்வுக்கான நேர்காணல் தேதி அறிவிப்பு.

           ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு- II, 2013-2014-இல் அடங்கிய நேர்முகத் தேர்வு உள்ள பதவிகளுக்கு நேரடி நியமனத்திற்கு தகுதியான நபர்களை தெரிவு செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், 05.09.2013-ஆம் நாளிட்ட அறிவிக்கையின் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.
 

பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்: முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தரவு

          பள்ளிக்கூடங்களை சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனரும் ஐ.ஏ.எஸ்.அதிகாரியுமான பூஜா குல்கர்னி உத்தரவிட்டார்.

பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்ளலாம்

           பிளஸ் 2 மதிப்பெண் சான்று பெறும் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்து கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்தி: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பாக, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, மதிப்பெண் சான்று வழங்கப்படும் பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவுப்பணி நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கிராம மாணவர்களுக்கு போட்டித் தேர்வு பயிற்சி:ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம்

         கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய போட்டித்தேர்வுகளில் பங்கேற்க செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.'உயர்கல்விக்கான தேசிய போட்டித் தேர்வுகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு இல்லை' என ஆய்வில் தெரிந்துள்ளது.
 

பள்ளிகள் சுத்தம் 'யுனிசெப்' பயிற்சி

                 மாணவ, மாணவியர் சுத்தமாக இருக்கும் முறை குறித்து, 'யுனிசெப்' உடன் இணைந்து, கல்வித்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி தரப்பட்டது. மத்திய அரசின், 'ஸ்வச் பாரத்' என்ற துாய்மை இந்தியா திட்டத்தில், துாய்மையான இந்தியா, துாய்மையான பள்ளி என்ற திட்டம், அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிகளில் மாணவ, மாணவியர் கழிப்பறையை பயன்படுத்தி பின், உணவருந்தச் செல்லும் முன், கை கழுவுவது குறித்தும் கற்றுத் தரப்படுகிறது.

தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தல்

      தொகுப்பூதிய காலத்தைக் கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுமாறு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியது.

 

3 மாதத்தில் குரூப் --2 தேர்வு நடத்த திட்டம்

        போலீஸ் டி.எஸ்.பி., மற்றும் உதவி கலெக்டர் உள்ளிட்ட பதவிகளில், 70 காலியிடங்களுக்கான குரூப் - 2 தேர்வு, இன்னும், இரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்வை, மூன்று மாதங்களுக்குள் நடத்தாமல், படிப்பதற்கு கூடுதல் அவகாசம் தர, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு பெற விதிகளில் தளர்வு

        அரசு ஊழியர்கள், அதிகாரிகள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெற அடையாளச் சான்றோ, ஆட்சேபணையின்மைச் சான்றோ பெற வேண்டியதில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்னறிவிப்புக் கடிதம் கொடுத்தாலே போதும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

ஊராட்சியில் கட்டப்படும் பள்ளிகள்:நகர் ஊரமைப்பு அனுமதி தேவையில்லை:உயர்நீதிமன்றம் உத்தரவு

        'ஊராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் பள்ளிகளுக்கு நகர் ஊரமைப்புத்துறையிடம் கட்டட அனுமதி பெற நிர்பந்திக்கக் கூடாது' என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.கன்னியாகுமரி கோயன்விளை பாரத் அட்வான்ஸ்டு மெட்ரிக் பள்ளி தாளாளர் பகவத் தாக்கல் செய்த மனு:

ஜூலை 19-இல் பி.ஆர்க். கலந்தாய்வு

     பி.ஆர்க். (கட்டடவியல் பொறியியல்) சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 19-ஆம் தேதி நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 2015-16 கல்வியாண்டு பொறியியல் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளரக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் ஜூன் 28-ஆம் தேதி முதல் நடத்தி வருகிறது.

திறன் மேம்பாட்டு பயிற்சி மையத் திட்டம்: 5 தமிழக கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 18.70 கோடி நிதியுதவி

        பல்கலைக்கழக மானியக் குழுவின் திறன் மேம்பாட்டு பயிற்சி மைய (தீனதயாள் உபாத்யாய கௌஷல் மையங்கள்) திட்டத்தின் கீழ் தமிழகத்தைச் சேர்ந்த 5 கல்வி நிறுவனங்களுக்கு ரூ. 18.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

எம்.பி.பி.எஸ்.: 108 காலியிடங்கள், அரசு பி.டி.எஸ்.: 20 காலியிடங்கள்

      தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்பில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.  அரசு மருத்துவக் கல்லூரிகளில் 13 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 95 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள் என மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன.

பிளஸ் 2 பாடங்களுக்கு 'சிடி':தனியார் பள்ளிகள் நெருக்கடி

        பொதுத்தேர்வுக்கென, தனியார் நிறுவனங்கள் தயாரித்துள்ள, 'சிடி'க்களை வாங்குமாறு, மாணவ, மாணவியரை, தனியார் பள்ளி நிர்வாகங்கள் நெருக்கடி கொடுப்பதாக, புகார் எழுந்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு, பாடப் புத்தகம் மற்றும் நோட்டுகளை, அரசு இலவசமாக வழங்குகிறது. ஆனால், விளக்க கையேடான, 'நோட்ஸ்'களை, தனியார் நிறுவனங்கள் வெளியிடுகின்றன.

'மேட்ரிமோனி'யிலும் ஆதார்

         மோசடிகள் நடக்காமல் தடுக்க, திருமண இணையதளங்களில் வரன் தேடி விளம்பரம் செய்வோர், ஆதார் எண்ணை தரும் வகையில், நடைமுறைகளில் மாற்றம் செய்ய, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. திருமண விளம்பரங்கள் தர எண்ணற்ற இணையதளங்கள் புற்றீசல் போல முளைத்து வருகின்றன. அவைகள், அதிக கட்டணம் பெற்று, வரன்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டாலும், மோசடி விளம்பரங்களை தடுக்க வகை செய்யவில்லை.

இசைப் பல்கலை.யில் ஓவியம், நாமசங்கீர்த்தனம் படிப்புகள் தொடக்கம்

        சென்னை அடையாறில் உள்ள தமிழ்நாடு இசை, கவின் பல்கலைக்கழகத்தில் ஓவியம், நாமசங்கீர்த்தனம் ஆகியவற்றில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு தொடங்கப்படுகிறது என்று துணைவேந்தர் வீணை காயத்ரி தெரிவித்தார்.

தமிழ் கற்கும் இத்தாலி மாணவர்கள்

       காரைக்குடி மானகிரி செட்டிநாடு பள்ளியில்,பிளஸ் 1 படிக்க இத்தாலி மாணவர்கள் வந்துள்ளனர்.இத்தாலி நாட்டைச் சேர்ந்த, மாணவர்களான மார்ட்டின்,17, லியானார்டோ,17 ஆகியோர், சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, மானகிரி செட்டிநாடு பள்ளியில், இந்த ஆண்டு பிளஸ் 1-வகுப்பில் சேர்ந்துள்ளனர்.

பொதுத்தேர்வில் 'ரேங்க்' பெற்ற மாணவர்களுக்கு 10ம் தேதி பரிசு

         பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், மாநில, 'ரேங்க்' பெற்ற மாணவ, மாணவியருக்கு, வரும், 10ம் தேதி ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகின்றன. கடந்த, 2014-15ல், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், 750 பேர் மாநில ரேங்க் பெற்றனர். பிளஸ் 2வில், முதலிடம் பிடித்த, 21 பேருக்கு, முதல்வர் ஜெயலலிதா, கடந்த வாரம் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.
 

நாடு முழுவதும் 906 ஐபிஎஸ் பணியிடங்கள் காலி

        இந்தியா முழுவதும் 906 ஐ.பி.எஸ்., பணியிடங்கள் காலியாக உள்ளதாக யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இதில் உத்தர பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 4754 பணியிடங்களில், 3,843 இடங்கள் இதுவரை நிரப்பப்பட்டுள்ளன.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive