ஜனவரி
12-தேசிய இளைஞர் தினம்
15-இராணுவ தினம்
அ-சுட்டெழுத்து, எட்டு, சிவன், விஷ்ணு, பிரம்மா
ஆ- பசு(ஆவு), ஆன்மா, இரக்கம், நினைவு, ஆச்சாமரம்
இ- சுட்டெழுத்து, இரண்டில் ஒரு பங்கு அரை என்பதின் தமிழ் வடிவம்.
ஈ- பறக்கும் ஈ, தா, குகை, தேனீ
கிராமப்புற பெற்றோரிடமும் பெருகிய ஆங்கில மோகத்தின் விளைவு கடந்த 1990ம்
ஆண்டுக்கு பின்னர் ஆங்கில வழி நர்சரி பள்ளிகள் குக்கிராமங்களிலும்
பிறப்பதற்கு வழிவகுத்தது.
உரிய அனுமதி பெறாமல் கல்விச்சுற்றுலா அழைத்துச் சென்றதாக கூறி,
தலைமையாசிரியை மற்றும் உதவி ஆசிரியை மதுரை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்
'சஸ்பெண்ட்' செய்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வில், விலக்கு அறிவிக்கப்பட்டும், தகுதி காண்
பருவத்திற்காக அனுப்பப்படும் ஆசிரியர்களின், பணிப் பதிவேடுகள்
(எஸ்.ஆர்.,கள்) பரிசீலிக்கப்படுவதில்லை, என சர்ச்சை எழுந்துள்ளது. இதனால்,
18 ஆயிரம் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இன்னும் மூன்று நாட்களில், 26ம் தேதி துவங்க உள்ள பத்தாம் வகுப்பு பொது
தேர்வுகளுக்கான இறுதிகட்ட ஏற்பாடுகளை, தேர்வுத்துறை, தீவிரமாக செய்து
வருகிறது. மாணவர்களை கண்காணிக்க, 5,000 பேர் அடங்கிய பறக்கும் படை
குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை
தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான
மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
2005–ம் ஆண்டு பணி நிரந்தரம் செய்யப்பட்ட
தொழிலாளர்களுக்கு, 2 மத்திய அரசு கொண்டு வந்த புதிய ஓய்வூதிய திட்ட
விதிகள் பொருந்தாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :
OMR தாளில் வட்டங்களில் Shade
செய்ய வேண்டிய பகுதிகள் அனைத்தும் கருப்பு அல்லது நீல நிற
பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தி
இருந்தது . ஆனால் தற்போது பென்சிலை பயன்படுத்தி OMR தாளில் மாணவர்கள் Shade செய்யலாம் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தெரிவித்துள்ளார் .
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) முனைவர்
கண்ணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகத்தோடு இணைந்த கல்லூரிகளை சேர்ந்த ஏப்ரல் 2014க்கான இளநிலை மற்றும் முதுநிலை
தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வருகிற ஏப்ரல் 16ம் தேதி முதல்
தேர்வுகள் நடைபெற உள்ளன.
தலைமைச் செயலகம் உள்பட அரசுத் துறை அலுவலகங்களில் ஃபேஸ்புக், டிவிட்டர் போன்றசமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழிலக்கியத்தில் அறிவியல் செய்திகள்
ஒவ்வொரு இலக்கியமும் தான் தோன்றிய சமுதாயத்தை
உள்ளடக்கமாகக் கொண்டுதிகழ்கிறது. அறிஞர்களும், இலக்கியம் என்பது
சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் கண்ணாடி என்கிறார்கள். எந்த ஒரு
இலக்கியமும் தான் தோன்றிய அச் சமுதாயத்தின் பண்பாட்டையும் நாகரிகத்தையும்,
பொருளாதாரத்தையும், அக்கால மக்களின்அறிவையும்,
பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் எடுத்துரைப்பனவாய் விளங்குவதைக் காணலாம். இந்த அடிப்படையில்தான் நமது தமிழ் இலக்கியங்களும் விஞ்ஞானப்பூர்வமாக மிளிர்கிறது.
பள்ளி கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வகுப்பறைக்கு வெளியே
நிறுத்தியதால் மனம் உடைந்த மாணவி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக
போலீசில் மாணவியின் பெற்றோர் புகார் செய்தனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,), இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏப்,7 முதல் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்க உள்ளது.
பத்தாம்
வகுப்பு தேர்வுகள் 26ம் தேதி தொடங்குவதை அடுத்து பள்ளி மாணவர்களுக்கு
நேற்று ஹால்டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்
போட்டோவுடன் கூடிய ஹால்டிக்கெட்டுகள் தேர்வுத்துறையில் இருந்து நேற்று
பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மதுரையில்,
பிளஸ் 2 உயிரியல் தேர்வில், விலங்கியல் பகுதி விடைத்தாளில், தாவரவியல்
பகுதிக்கான பதில் எழுதிய சம்பவத்தால், மாணவிகள் சிலர் அச்சத்தில் உள்ளனர்.
அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில்
வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு கண்டிப்பாக 3 சதவீத இடஒதுக்கீடு
வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய-மாநில அரசுகளின் வேலைவாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீத
இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த 3 சதவீத இடஒதுக்கீடு அரசு உதவி பெறும்
நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
ஐ.ஏ.எஸ். நேர்முகத் தேர்வு ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது. முதல்கட்டமாக 1,281 பேர் அடங்கிய பட்டியலை யூ.பி.எஸ்.சி. வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு பல்கலைகளில், இந்திய மாணவர்கள் சேர
சி.பி.எஸ்.இ., சர்வதேச பாடத் திட்டத்தில் படித்திருப்பது அவசியம் என்பதால்,
இப்பாடத் திட்டம் குறித்து உறுப்பு கல்லூரிகளுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும் என பல்கலைகளுக்கு, யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது.
பிள்ளையை பெற்றால் மட்டும் போதுமா? பேணி
வளர்க்க வேண்டாமா? என்பது பலரும் அறிந்த ஒரு கருத்து. குழந்தை வளர்ப்பு
என்பது சவால்கள் நிறைந்த ஒரு போராட்டம் என்பதும் பலரின் எண்ணம்.
மிருகங்கள், ஏதோ குட்டிப் போடுகின்றன, சிலகாலம் பராமரிக்கின்றன. அவற்றின்
பணி அவ்வளவுதான். ஆனால், மனிதனின் நிலை அப்படியில்லை. அவன் ஏற்படுத்திய
உலகம், வாழ்க்கை முறை மற்றும் சமூகம் ஆகியவற்றில் வாழும் திறமையையும்,
தகுதியையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது.
எனவே, குழந்தை வளர்ப்பு என்பது ஒரு திட்டமிட்ட
மற்றும் நீண்டகால பணியாகிறது. இக்கட்டுரையில், குழந்தை வளர்ப்பு தொடர்பான
சில ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
பிறரிடம் பகிர்ந்து கொள்ளுதல்
தான் வைத்திருக்கும் விளையாட்டு சாமான்கள்
உள்ளிட்டவற்றை, இதர குழந்தைகளிடமும், விளையாடும்போது பகிர்ந்து கொள்ளும்
மனப்பான்மையை, அதிக பொறுமையுடன் குழந்தைகளிடத்தில் கற்றுக்கொடுக்க
வேண்டும். மேலும், கூட்டாக சேர்ந்து விளையாடுகையில், தனது முறை வரும்வரை
பொறுமையாக காத்திருந்து வாய்ப்பை பெற வேண்டுமெனவும், பிறர் கையிலிருக்கும்
பொருளை அவசரப்பட்டு பிடுங்கக்கூடாது என்றும் கூற வேண்டும்.
நிஜமாகி விட கூடாது தாத்தாவின் கதை! வீட்டில்
வாகனங்களை தண்ணீர் ஊற்றி கழுவியதாக, இன்னும் 25 ஆண்டுகளுக்குப் பின்
தாத்தாக்கள் சொல்லப் போகும் கதையை கேட்கும் பேரப் பிள்ளைகள், "சும்மா
புருடா விடாதீங்க தாத்தா... காரை தண்ணீர் ஊற்றி கழுவினாராம்.
March - 2014 Exam | Key Answers
- History - March 2014 | Public Exam | Expected Key Answer - Tamil Medium
(21.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு எதிரான வழக்கு2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை நடைபெறவில்லை. வழக்கின் விசாரணை அடுத்தவாரம் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வணிகக் கணித
கேள்வித்தாள் குழப்பம்
கடந்த 20.03.2014 - அன்று நடந்த 12-ம் வகுப்பு வணிகக் கணித தேர்வில் 65 - வது கேள்வி
"கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு x = 4.5 க்கு y-ன் மதிப்பைக் காண்க" என
கேட்கப்பட்டிருந்தது. இவ்வினா பாடப்புத்தகம் தொகுதி - 2 chapter – 7 - ல் இருந்து கேட்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பட்டயப் படிப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வு நடைபெற உள்ளது.
மே
மாதம், முதல் வாரத்தில் இருந்து, பி.இ., விண்ணப்பங்கள், வழங்கப்பட
இருப்பதாக, அண்ணா பல்கலை வட்டாரம், நேற்று தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு,
மே 4 முதல், 20 வரை, அண்ணா பல்கலை மட்டும் இல்லாமல், பல்கலை உறுப்பு
கல்லூரி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில், விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன;
2.34 லட்சம் விண்ணப்பங்கள், விற்பனை ஆயின.
பிளஸ் 2 பொதுத் தேர்விற்கான தேர்வு முடிவுகள் வருகிற மே9ம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் திரு.தேவராஜன்
தெரிவித்தார்.
வரும் மே மாதம் 18ம் தேதி நடைபெற இருந்த
டிஎன்பிஎஸ்சி குரூப் 2தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு
பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு பணியாளர்
தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.01.2014, 6.02.2014 மூலம் அறிவிப்பு
செய்யப்பட்ட பதவிக்கான எழுத்து தேர்வு (குரூப்&2 தேர்வு) 18.05.2014
அன்று நடைபெறுவதாக இருந்தது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிட ஆன்லைன் மூலம்
தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாக
நிரப்ப வேண்டும் என்றும் அவ்வாறு நிரப்பப்படாத விண்ணப்பங்கள் தானாகவே
நிராகரிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை
மாற்றியமைப்பது குறித்து எவ்வித தெளிவான விளக்கமும் அளிக்காத நிலையில்,
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில்
இதுவரை பத்தாம் வகுப்பு தேர்வு, காலை, 10 மணிக்கு துவங்கி வந்தது. இந்த
நேரத்தை மாற்றும் படி யாரும் எவ்வித கோரிக்கையும் வைக்காத நிலையில் அரசு
தேர்வுத்துறை திடீரென 45 நிமிடம் முன்னதாக தேர்வு தொடங்கும் படி
மாற்றியமைத்தது.
காரைக்குடி அழகப்பா பல்கலையை, மத்திய பல்கலையாக
மாற்ற ஆளும் அரசு முயற்சி செய்ய வேண்டும்" என கல்வியாளர்கள்
எதிர்பார்க்கின்றனர். பல மாவட்டங்களில், அரசு மருத்துவக்கல்லூரி இயங்கி
வரும் இடங்களில், நர்சிங் கல்லூரியும் சேர்ந்து இயங்கி வருகிறது. இதன்
மூலம் கிராமப்புற ஏழை மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது
உபகாரசம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார
தேக்கநிலை சூழலில்இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.