Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
எண்ணிக்கை அதிகரிக்க நடவடிக்கை அவசியம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள்
இருந்தும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதை தடுக்க நடவடிக்கை
எடுக்க வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொடக்க
பள்ளிகளின் நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. பெரும்பாலான தொடக்க
பள்ளிகளில் புதிய வகுப்பறை, காம்பவுண்ட் சுவர், கம்ப்யூட்டர், விளையாட்டு
உபகரணம் என எஸ்.எஸ்.ஏ., நிதியில் கீழ், அனைத்து வசதிகள் செய்து
கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
மட்டக்கண்டி அரசு தொடக்க பள்ளியில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் மாணவர்கள்
குறைந்து வருவது ஆசிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.
10ம் வகுப்பு தேர்வு: மாணவர்களை விட மாணவியர் குறைவு
வரும், 27ம் தேதி முதல், ஏப்., 12 வரை நடக்க உள்ள, 10ம் வகுப்பு
பொதுத்தேர்வை, 10.68 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். கடந்த ஆண்டை
விட, 17,916 பேர், கூடுதலாக எழுதுகின்றனர். இவர்களில், 16,362 பேர் மாணவர்;
மாணவியர், 1,554 பேர்.
7,91,924 மாணவர்கள் எழுதும் பிளஸ் 2 தேர்வு துவங்கியது!
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்கியது.
தமிழகத்தில், 7 லட்சத்து, 91 ஆயிரத்து, 924 மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
இந்த தேர்வு , மார்ச், 27ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 2,020 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பிளஸ் 2 தேர்வில் மின்தடைக்கு தடா: மின்வாரியம் சிறப்பு ஏற்பாடு
பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர், மின்தடையின்றி தேர்வெழுத, தேர்வு
மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்வாரியம்
திட்டமிட்டுள்ளது.
சென்னை பல்கலை தொலைதூர கல்வி இளங்கலை தேர்வு முடிவு
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வியின், இளங்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளன.
ஆரம்ப கல்வியில் அறிவியல் ஊக்குவிப்பு அவசியம்
ஆரம்ப கல்வியிலேயே அறிவியலை போதித்தால் ஆர்வம் அதிகரிக்கும் என, தேசிய அறிவியல் தின நிகழ்ச்சியில் அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி ரேடியோ வானியல் மையத்தில்,
நேற்று, தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது. மைய தலைவர் டாக்டர் மனோகரன்
வரவேற்று பேசுகையில், "மாணவ, மாணவியர் மத்தியில் அறிவியல் விழிப்புணர்வு
குறைவாக உள்ளது. அறிவியல் ஆராய்ச்சியில் அதிகளவு மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு ரூ.2,000 கோடியில் தனி நிதியம்
மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று தாக்கல் செய்த நிதியறிக்கையில்,
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைக்கு, வரும் நிதியாண்டில், 6,275
கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்வெளித் துறைக்கு, 5,615 கோடியும்,
அணுசக்தித் துறைக்கு, 5,880 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் 2013 - 14 : முக்கிய அம்சங்கள்
நாடாளுமன்றத்தில் 2013-14ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; ரூ. 2000 சலுகை
* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
*ஆண்டு வருவாய் ரூ.1 கோடிக்கு மேல் ஈட்டுபவர்களுக்கு 10 சதவீத கூடுதல் வரி.* வருமான வரிவிதிப்பில் மாற்றமில்லை; அதேசமயம் ரூ. 2 முதல் 5 லட்சம் வரையிலான வருவாய்தாரர்களுக்கு, அவர்க்ளுக்கு வரி விதிப்பு தொகையில் ரூ. 2000 தள்ளுபடி
வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் இல்லை!
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த வருமான வரி உச்சவரம்பு உயர்வு இந்த ஆண்டு இல்லை என்று அறிவித்துள்ளார் சிதம்பரம்.
ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய அனுமதி.
2013-14 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று
நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் இன்று தாக்கல்
செய்தார். அதில் ஓய்வூதிய நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்ய
அனுமதி அரசு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல்
வளர்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை
உருவாக்கும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி
கடைபிடிக்கப்படுகிறது.
அறிவியல் என்பது, வாழ்க்கையோடு தொடர்புடையது.
இதன் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண மக்களுக்கும்
சென்றடைய வேண்டும். அப்போதுதான், அந்த கண்டுபிடிப்பு முழுமை பெறும்.
அறிவியலை படிப்பதோடு நின்று விடாமல், செயல் வடிவிலும் கொண்டு வர வேண்டும்.
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு
கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தது.
* கல்வித் துறைக்கு இந்த பட்ஜெட்டில் 17 சதவீதம் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
* விவசாயத்துறைக்கு நிதி ஒதுக்கீடு 22 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* கிராமப்புற வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு 46 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மாதிரியிலான 6 புதிய மருத்துவக் கல்லூரிகள்
எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்தைப் போன்று, அமைக்கப்பட்ட புதிய 6
மருத்துவக் கல்வி நிறுவனங்கள், இந்த 2013ம் ஆண்டு முதல் செயல்படத்
துவங்கும்.
இதோ! வந்தேவிட்டது பிளஸ் 2 பொதுத்தேர்வு!
பிளஸ் 2 மாணவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த அரசுப்
பொதுத்தேர்வுகள், இதோ வந்தேவிட்டது. மார்ச் 1ல் துவங்கும், தமிழ்நாடு மாநில
கல்வி வாரிய தேர்வுகள், மார்ச் 27ம் தேதி முடிவடைகிறது. அதற்கான கால
அட்டவணை, மாணவர்கள் வசதிக்காக, மீண்டும் ஒருமுறை இணையதளத்தில்
வெளியிடப்படுகிறது.
தனியார் பள்ளிகளை கிரேடு அடிப்படையில் தரம் பிரிக்க திட்டம்
தனியார் பள்ளிகளின் ஒட்டுமொத்த தரத்தின் அடிப்படையில், "ஏ.பி.சி.டி" என,
நான்கு வரையான, கிரேடு அங்கீகாரம் வழங்கப்படும் என, தனியார் பள்ளிகளுக்கான
கட்டண நிர்ணயக்குழு அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு: தமிழ் வழியில் 69.60%... ஆங்கில வழியில் 30.40%
மார்ச் 1ம் தேதி துவங்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, 69.60 சதவீத மாணவ,
மாணவியர், தமிழ் வழியில் எழுதுகின்றனர். அதன்படி, 5.59 லட்சம் பேர், தமிழ்
வழியில், தேர்வை எழுதுகின்றனர். 30.40 சதவீத மாணவ, மாணவியர் மட்டுமே,
ஆங்கில வழியில், தேர்வை எழுதுகின்றனர்.
முறைகேடுகளுக்கு துணைபோனால்... பள்ளிகளுக்கு அரசு எச்சரிக்கை
"பொதுத் தேர்வில், முறைகேடுகளுக்கு உடந்தையாக, பள்ளி நிர்வாகங்கள்
செயல்பட்டால், சம்பந்தபட்ட பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்ய, நடவடிக்கை
எடுக்கப்படும்" என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா எச்சரித்துள்ளார்.
இரயில்வே பாதுகாப்பு: ஆராய்ச்சி மாணவர்களுக்கு நிதி உதவி
மத்திய அரசாங்கம் 2013- 2014 க்கான இரயில்வே பட்ஜெட்டை செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
இரயில்வே
அமைச்சர் திரு. பவன்குமார் பன்சால் நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்ட
அறிக்கையை தாக்கல் செய்தார். இந்த அறிக்கையில் 1,52,000 காலி இடங்கள்
நிரப்பப்படும் என்றும் 47,000 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு
ஒதுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
அறிவியல் இன்றி ஆற்றல் உண்டா? பிப்., 28 தேசிய அறிவியல் தினம்
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில், அறிவியல் வளர்ச்சி முக்கிய பங்கு
வகிக்கிறது. மாணவர்களிடம் அறிவியல் மீதான ஆர்வத்தை உருவாக்கும் விதமாக,
ஆண்டுதோறும் தேசிய அறிவியல் தினம், பிப். 28ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கை 2.8 கோடி: சிதம்பரம்
நாடு முழுவதும் வேலைவாய்ப்ற்றவர்களின் எண்ணிக்கை 2.8 கோடியாக உள்ளது என மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேலும் அவர்
கூறியதாவது: கடந்த 2004-05ம் ஆண்டில் 8.2 சதவீதமாக இருந்த
வேலைவாய்ப்பின்மை விகிதம், 2009-10-ம் ஆண்டில் 6.6 ஆக குறைந்துள்ளது.
ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2004-05-ல் 3.45
கோடியாக இருந்தது. அது 2009-10ம் ஆண்டில் 65 லட்சம் குறைந்து 2.8 கோடியாக
உள்ளது.
உயிருள்ள மூட்டைகளா பள்ளிக் குழந்தைகள்?
தமிழ்நாடு மோட்டார் வாகனச் சட்டப்படி, ஒரு ஆட்டோவில் 3 பேர் உட்காரலாம்;
டிரைவரைச் சேர்த்து 4 பேர் பயணிக்கலாம். குழந்தைகளாக இருந்தால், 5 பேர்
வரை அனுமதிக்கலாம் என்கிறது போக்குவரத்துத்துறையின் சுற்றறிக்கை. ஆனால்,
இங்கே நடப்பதென்ன...?
மார்ச் 5ம் தேதி வி.ஏ.ஓ., 4ம் கட்ட கலந்தாய்வு
வி.ஏ.ஓ., நான்காம் கட்ட கலந்தாய்வு, மார்ச், 5ம் தேதி நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வாணைய செயலர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
ஏற்கனவே, மூன்று கட்டங்களாக நடந்த கலந்தாய்வு மூலம், 1,685 தேர்வர்கள்,
அவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளுக்கு, ஒதுக்கீடு
செய்யப்பட்டனர்.
சென்னை பல்கலை மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள் வெளியீடு
சென்னை பல்கலைக்கழகத்தின், முதுகலை மற்றும் தொழில் கல்வி படிப்புகளுக்கான மறுமதிப்பீடு தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.
அண்ணாமலைப் பல்கலை பல் மருத்துவ கல்லூரியில் சி.பி.ஐ., ரெய்டு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று திடீர் ரெய்டு நடத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, ஆதிபராசக்தி பல் மருத்துவக் கல்லூரியில்
உயர் படிப்பிற்கு அனுமதி பெற்றுத் தர, பல் மருத்துவ கவுன்சில் உறுப்பினர்,
முருகேசன் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டார். இவ்வழக்கை சி.பி.ஐ.,
விசாரணை செய்து வருகிறது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3 அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர் உத்தரவு. புதிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக திரு. வைகை செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உள்பட 3
அமைச்சர்கள் தமிழக அமைச்சரவையிலிருந்து நீக்கி தமிழக முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு. சிவபதி,
சுகாதாரத்துறை அமைச்சர் திரு. விஜய் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர்
திருமதி. கோகுல இந்திரா ஆகிய
மூன்று அமைச்சர்களை நீக்கி முதல்வர்
உத்தரவிட்டுள்ளார். புதிய அமைச்சர்களாக திரு. வைகை செல்வன் அவர்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கி முதல்வர் உத்தரவு.