Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பெட்ரோல் விலை குறைப்பு; டீசல் விலை உயர்வு.

         பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன

ஜாக்டோ பொதுக்குழு இன்று அவசர ஆலோசனை

சென்னை : ஜாக்டோ பொதுக்குழு (ஆசிரியர் சங்கம்) சென்னையில் இன்று அவசரமாக கூடுகிறது. வேலை நிறுத்தத்தை தீவிரப்படுத்துவது குறித்து ஜாக்டோ முக்கிய ஆலோசனை நடந்தவுள்ளது. இந்த ஆலோசனையில் அரசு ஊழியர்களுடன் இனைந்து போராடுவது குறித்தும் முடிவு எடுக்கப்படுகிறது. 

தமிழகம் முழுவதும்அரசு ஊழியர்கள் போராட்டம் வலுக்கிறது: 6 லட்சம் அரசு ஊழியர் கைது

பல துறை அலுவலகங்கள் வெறிச்சோடின
* அரசு பணிகள் தொடர்ந்து முடங்கின
சென்னை: தமிழக அரசு ஊழியர்கள் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் நேற்று 6 லட்சம் ஊழியர்கள்  தாலுகா வாரியாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
 

ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் எதிரொலி: 52 அரசு பள்ளிகள் மூடல்

     திருநெல்வேலி மாவட்டத்தில் ஆசிரியர்கள் தொடர் வேலைநிறுத்தம் காரணமாக செவ்வாய்க்கிழமை 52 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மூடப்பட்டன.

அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்: ஒப்பாரி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கைது

          புதுக்கோட்டையில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றுவரும் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சாலையில் அமர்ந்து  ஒப்பாரி வைத்து  நூதனப் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர், சத்துணவு ஊழியர்கள்  உள்ளிட்ட 937 பேரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

குடும்ப அட்டைக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டு எப்போது? அமைச்சர் விளக்கம்

        காகிதத்தாலான குடும்ப அட்டைக்குப் பதிலாக, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுவது எப்போது என்ற கேள்விக்கு உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பதிலளித்தார்.
 
 

"தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை அதிகரித்துள்ளது'

           அடிப்படை தொழில்நுட்ப அறிவாற்றலுடன் தனித்திறன் மிகுந்த மாணவர்களின் தேவை வேலைவாய்ப்புச் சந்தையில் அதிகரித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது தனித்திறன், தொழில்நுட்பப் பயிற்சித் திறன் ஆகியவற்றை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டால் வேலை வாய்ப்பு தானாகத் தேடி வரும் என்று நேஷனல் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் நிறுவனத்தின் சர்வதேச தொழில் நுட்பக் கல்வி மேலாளர் சோலைக்குட்டி தனபால் கூறினார்.

ஈர்ப்பலைகள் கண்டுபிடிப்பு: நமக்கு என்ன பயன்?

      நம்மைச் சுற்றிலும் நடக்கும் அரசியல் அசிங்கங்கள் மனிதர்களின் மோசமான பக்கத்தைக் காட்டுகின்றன என்றால் தற்போதைய ஈர்ப்பலைகளின் கண்டுபிடிப்போ மனிதர்களின் மகத்துவத்தைக் காட்டுகிறது.

நீடிக்கிறது அரசு ஊழியர் 'ஸ்டிரைக்' மறியலில் 50 ஆயிரம் பேர் கைது

சென்னை:தமிழகத்தில் அரசு ஊழியர்களின், 'ஸ்டிரைக்' நேற்று, எட்டாவது நாளாக நீடித்தது. மாநிலம் முழுவதும் மறியலில் ஈடுபட்ட, 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Dismissed Staff Entitled to Encashment of EL/PL: Madras High Court

        Employees dismissed from service after the conclusion of disciplinary proceedings initiated against them are also entitled to encashment of ‘Earned/Privilege Leave’ that they had accumulated to their credit over the years, the Madras High Court Bench here has ruled.

தேர்வு அறையில் நாற்காலிக்கு தடை

          பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில், கடந்த ஆண்டை போல், தேர்வு அறையில் ஆசிரியர்களுக்கு நாற்காலிக்கு தடை விதிக்க, தேர்வுத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

சென்னை பல்கலை தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

        சென்னை பல்கலையில், நவம்பரில் நடந்த தேர்வுகளின் முடிவுகள், இன்று வெளியாகின்றன. இதுகுறித்து, சென்னை பல்கலை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி திருமகன் வெளியிட்ட அறிவிப்பில், 'சென்னை பல்கலையின் இளங்கலை, முதுகலை பட்ட படிப்புகளுக்கான நவம்பர் மாத தேர்வு முடிவுகள், பிப்., 18 மாலையில் வெளியாகும்.
 

வேலைநிறுத்தத்திற்கு தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆதரவு:


        நாளை (18.02.16) முதல் தனியார் பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்வர் என்ற அறிவிப்பினை தனியார் பள்ளி ஆசிரியர்கள் சங்க பொதுச்செயலாளர் திரு.கனகராஜ் அவர்கள் வெளியிட்டுள்ளார்..

ரூ.251க்கு ஸ்மார்ட் போன்!


இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் கீழ் இந்தியாவின்'ரிங்கிங் பெல்ஸ்'  எனும் நிறுவணம் ரூ. 251க்கு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளது.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டம் குறித்து பேச அனுமதி மறுப்பு--எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.

          அரசு ஊழியர்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி திமுக, தேமுதிக, பாமக, புதிய தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.தமிழக சட்டப்பேரவையில் இன்று முக்கிய நிகழ்வாக இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதம் நடைபெறுகிறது.


இடைக்கால நிதிநிலை அறிக்கை: பொது விவாதம் துவங்கியது

        இடைக்கால பட்ஜெட் மீதான பொது விவாதம் சட்டப்பேரவையில் இன்று காலை துவங்கியது.2016-17ம் ஆண்டுக்கான தமிழகத்தின் இடைக்கால நிதிநிலை அறிக்கையை, நிதித் துறை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்தார்.


எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் விடைத்தாளில் எழுதிய எல்லா விடைகளையும் அடித்தால் தண்டனை; அரசு தேர்வுத்துறை புதிய உத்தரவு

         10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வுகளில் விடைத்தாளில், எழுதியவிடைகள் அனைத்தையும் கோடிட்டு அடித்தால் அவர்கள் 2 பருவங்களுக்கு தேர்வு எழுத முடியாது என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். 


இளநிலை பயிற்சி அலுவலர் பணிக்கு எழுத்துத் தேர்வு

         வேலைவாய்ப்புத் துறையில் காலியாக உள்ள இளநிலை பயிற்சி அலுவலர் பணியிடத்துக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (பிப்.21) நடைபெறவுள்ளது.இதுகுறித்து, அரசினர் தொழில் பயிற்சி நிலைய அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:


போராட்டம் தொடரும்: ஆசிரியர்கள்

           இடைக்கால நிதி நிலை அறிக்கையில் எந்தவித அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடாததால், போராட்டம் தொடரும் என்று "ஜாக்டோ' (ஆசிரியர்கள்) அமைப்பினர் தெரிவித்தனர்.பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்துதல், மத்திய அரசுக்கு இணையான ஊதியம் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர்களின் சங்கங்கள் இணைந்து "ஜாக்டோ' வாயிலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகிறது.


பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை, 110 விதியின் கீழ் அறிவிப்பு?

          பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், 10ம் தேதி முதல், காலவரையற்ற, 'ஸ்டிரைக்' நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டசபையில் நேற்றுதாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில், முக்கிய அறிவிப்புகள் ஏதும் இடம் பெறாததால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.


PF., வட்டி அதிகரிப்பு

               ''நடப்பு நிதியாண்டில், பி.எப்., எனப்படும், வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம், 8.75 சதவீதத்தில் இருந்து, 8.8 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது,'' என,மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா தெரிவித்தார்.


பிளஸ் 2 தேர்வு இருவித விடைத்தாள் வழங்க திட்டம்

        பிளஸ் 2 பொதுத்தேர்வில், கோடிட்டவை, கோடிடப்படாதவை என, இருவிதமான விடைத்தாள்கள் வழங்கப்பட உள்ளன. அனைத்து பாடங்களுக்கும், நான்கு பக்கங்கள் மட்டுமே, கூடுதல் விடைத்தாளாகவும் வழங்கப்பட உள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 4ம் தேதி முதல் துவங்க உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. 

EIGHTH STANDARD PUBLIC EXAMINATION (PRIVATE CANDIDATE) - APRIL 2016

      Applications are invited for admission to the Eighth Standard Public Examination (Private study) to be held in  April 2016  only from  Private  Candidates  who have  completed  12\ years of    age as  on 01.04.2016.

தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு

       தேர்தல் பணி அலுவலர்களுக்கு வழங்கப்படும் ‘படி’ மற்றும் போக்குவரத்து போலீஸ் செலவுகள் அதிகரித்துள்ளதால் தேர்தல் செலவு 35 சதவீதம் உயர்வு

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive