சத்துணவுத் திட்டத்தின்கீழ் 55 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில், நடப்பு நிதியாண்டில் ரூ.1,645 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
இன்ஜினியரிங் படிப்பில் தமிழ் வழி கல்வி. புறக்கணிப்பு! .. 1,000 இடங்களில் மாணவர்கள் சேராததால் வீண்
தமிழ் வழி கல்வியில் இன்ஜினியரிங் படிப்பதை மாணவர்கள் புறக்கணித்து
வருகின்றனர். இதற்கான ஒதுக்கீட்டை பயன்படுத்தி, தமிழ் வழி கல்வி படிப்பில்
சேர மறுப்பதால், இந்த ஆண்டில் மட்டும், பி.இ., படிப்பிற்கான, 1,002 இடங்கள்
வீணாகி உள்ளன.
மெட்ரிக் - ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு ஒரே நிர்வாகம்
மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உட்பட, 11 வகை பள்ளி நிர்வாக விதிகள், தமிழக
அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் இணைக்கப்பட உள்ளன; இதற்கான வரைவு
அறிக்கை தயாராகியுள்ளது.
பெண்கல்வி ஊக்கத்தொகை : ஆதார் எண் கட்டாயம்
பெண்கல்வி ஊக்கத் தொகை பெற ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும், என,
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகம்
முழுவதும் 18 வயது நிறைவடைந்த தாழ்த்தப்பட்ட மாணவிகளுக்கு பெண் கல்வி
ஊக்கத்தொகையாக ரூ.3,000 வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் கல்வியாண்டு
இறுதியில் தொகை அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஒப்புதலுடன், முழு நேர
தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் என்ற எம்.பில்., படிப்பு நடத்தப்படுகிறது.
இதில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, விண்ணப்பங்கள்
வழங்கப்படுகின்றன.
தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்: அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன்
மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர்
மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர்
உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா
குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
DEE - Triangle Mutual Transfer Not Allowed - Proceedings
DEE - Transfer Counselling Regarding Proceeding
மனமொத்த மாறுதல் ஆணை வழங்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்(நாள்:22.07.2016)
Flash News: PG Promotion - தேர்வு நிலையை கருத்தில்கொண்டு திட்டமிட்டு கடந்தாண்டு பதவி உயர்வு பட்டியலுக்கு பெயர் அனுப்பாத ஆசிரியர்கள் மீது விரைவில் ஒழுங்கு நடவடிக்கை - கல்வித்துறை
1.1.2015 பதவி உயர்வு பட்டியலில் பெயர் இடம்பெறாமல் வேண்டுமென்றே தவிர்த்த பட்டதாரி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
TRB:தமிழக அரசு பொறியியல் கல்லூரிகளில் 192 உதவி பேராசிரியர் பணி: டிஆர்பி அறிவிப்பு
தமிழ்நாடு அரசு பொறியியல் கல்லூரிகளில் 2016 - 2017-ஆம் ஆண்டிற்கான 192
உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர்
தேர்வுவாரியம் (TRB) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கட்டணம்; திருப்பி வழங்க உத்தரவு
அரசு பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்விக்கு என, வசூல் செய்யப்பட்ட கட்டணத்தை, மாணவர்களுக்கே திருப்பி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்,ஆங்கிலவழிக்கல்வி பிரிவும் நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசின் தூய்மை திட்டம் : தேர்வாகும் பள்ளிகளுக்கு பரிசு
மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள் வழங்குவதற்கு 9 பேர்
கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது. துாய்மை இந்தியா திட்டம் போல்,
பள்ளிகளில் சுகாதாரம் காப்பதற்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை துாய்மை
பள்ளி திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு முடிவடைந்தது: 44 சதவீத இடங்களே நிரம்பியுள்ளன- ஒரு லட்சம் இடங்கள் நிரம்பவில்லை
பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு நேற்று முடிவடைந்த நிலையில்,
பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 44 சதவீத இடங்களே
நிரம்பியுள்ளன. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒரு லட்சத்துக்கும்
மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன.தமிழகத்தில் மொத்தம் 523 பொறியியல்
கல்லூரிகள் உள்ளன.
கணினி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கும் (வேளாண்மை ) பணிமாறுதல் கலந்தாய்வு முதுகலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் அன்றே நடைபெறும்
கணினி பயிற்றுநர்கள் மற்றும் தொழிற்கல்வி பயிற்றுனர்களுக்கும் (வேளாண்மை ) பணிமாறுதல் கலந்தாய்வு முதுகலை ஆசிரியர்களுக்கு நடைபெறும் அன்றே நடைபெறும் -ப.க .இ
Pay Order for 675 Posts
DSE: PAY ORDER FOR 675 PG POSTS FORGO NO 142,143,157,159,177,183,199,236,228,42,226 AND LETTER NO 028623
கல்வித்துறையில் புது திட்டம் : பிரச்னைகளுக்கு தீர்வு காணும் மாணவர்கள்
சமூக பிரச்னைகளுக்கு தீர்வு காணும் திட்டங்களை செயல்படுத்தும் அரசு
பள்ளி மாணவர்களை, மொரீஷியஸ் நாட்டிற்கு சுற்றுலா அழைத்துச் செல்லும்
திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தூய்மை திட்டம் : தேர்வாகும் பள்ளிகளுக்கு பரிசு
மத்திய அரசின் துாய்மைப்பள்ளி திட்டத்திற்கு பரிசுகள்
வழங்குவதற்கு 9 பேர் கொண்ட கமிட்டி நியமிக்கப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 மாணவர்களுக்கு விரைவில் சிறப்பு கையேடு
ராமநாதபுரம்: பிளஸ் 2 மாணவர்களுக்கு இந்தாண்டு முன் கூட்டியே இலவச சிறப்பு கையேடு வழங்கப்படுகிறது.
குரூப் 1' தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி.,யின்,
'குரூப் 1' தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஜி., கல்லூரிகளில் 1.01 லட்சம் இடங்கள் காலி
அண்ணா பல்கலையின் இன்ஜி., பொது கவுன்சிலிங், நேற்று முடிந்தது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும்:விஞ்ஞானி அரவிந்த்குப்தா
மதிப்பெண்களைவிட படைப்பாற்றலை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என விஞ்ஞானி அரவிந்த்குப்தா வலியுறுத்தினார்.
பொறியியல் படிப்புகள் எழும் ஆயிரம் கேள்விகள்
போகிறபோக்கைப் பார்த்தால், நடப்பாண்டில்
பொறியியல் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை கணிசமாக குறையும்.
பி.ஆர்க்., 'ரேங்க்' பட்டியல் வெளியீடு
அண்ணா பல்கலையின் இணைப்பிலுள்ள, 41க்கும்
மேற்பட்ட பி.ஆர்க்., கல்லுாரிகளில், ஒற்றைச்சாளர முறையில் கவுன்சிலிங்
மூலம் மாணவர் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில், 1,800
இடங்களுக்கு, 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
தொல்லியல் துறையில் பட்டய படிப்பு
இந்திய
தொல்லியல் துறையில், முதுநிலை பட்டயப் படிப்புக்கு, தகுதி வாய்ந்த
மாணவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சுயநிதி பல்கலைகளில் 'அட்மிஷன்' : ஜூலை 28 வரை விண்ணப்பிக்கலாம்
தனியார் சுயநிதி பல்கலைகளில், இன்ஜி.,
படிப்பதற்கான, மத்திய அரசின் இட ஒதுக்கீடு வாரியத்தின் விண்ணப்ப பதிவு,
நேற்று துவங்கியது.
TNPSC:குரூப் 1 முதன்மைத் தேர்வு: வரும் 29 இல் தொடக்கம்.
குரூப் 1 முதன்மைத் தேர்வு வரும் 29 ஆம் தேதி தொடங்கும்என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.