இதை கண்டு
அதிர்ச்சியுற்ற அவர் பெற்றோரிடம் கூற அந்த மாணவியின் பெற்றோர்
பிரிட்டானியா நிறுவனத்தின் சென்னைப் பிரிவைத் தொடர்பு கொண்டபோது,
இதுகுறித்து கருத்துக் கூற அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து மாவட்ட
ஆட்சியரிடம் புகார் கூற அந்த மாணவியின் பெற்றோர் முடிவு செய்துள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிரிட்டானியா பிஸ்கட்களுக்கு நடுவில் செத்துக் கிடந்த ஒரு பல்லி: அதிர்ச்சியில் உறையும் பொதுமக்கள்
தற்காலிக பணியிடங்கள் : ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை
கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி
தொடர்பாக, ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை, மதுரையில் நேற்று முன்
தினம் நடந்தது. மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.
இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.,) பொன்னையா தலைமை வகித்து, கணக்கெடுக்கும் பணி
குறித்து விளக்கினார்.
குறைந்த ரத்த அழுத்தம் மாரடைப்பைத் தடுக்கும்: ஆய்வு வெளியீடு
கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்த கொழுப்பு இதயத்துக்கு நல்லது என நம்பப்பட்டுவந்தது. அது சமீபத்தில் ஊர்ஜிதம் ஆனதைப் போல, குறைந்த ரத்த அழுத்தமும் இதயப் பிரச்சனைகளிலிருந்து தடுக்கும் என தற்போதைய ஆய்வின் மூலம் நிரூபணமாகியுள்ளது.
வினாத்தாள் கட்டணம் என்ற பெயரில் அரசு பள்ளிகளில் கட்டாய வசூல்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், வினாத்தாள் செலவாகமாணவர்களிடம்,
குறிப்பிட்ட தொகை கட்டாயமாக வசூலிக்கப்படுகிறது; ரசீதும் வழங்குவதில்லை என,
பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்வுக்கான 'வினாத்தாள் கட்டணம்' என்ற
வாய்மொழி உத்தரவின்படி, கட்டாய வசூல் வேட்டை நடத்துவதாக பெற்றோர்
குமுறுகின்றனர்.
கல்வித்துறை தூக்கம்: மாணவர்கள் தவிப்பு.
திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, கிராம பகுதி மாணவர்களுக்கு,
கடந்தஇரண்டு ஆண்டுகளாக, கல்வி உதவித் தொகை வழங்கவில்லை. இந்த ஆண்டு, தேர்வு
முடிவுகளையும் முறையாக வெளியிடாததால், மத்திய அரசின் திட்டம் கிடப்புக்கு
போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேசிய புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது போட்டி: அரசு பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு
டெல்லியில் நடைபெறவுள்ள தேசிய அளவில் பள்ளி மாணவர்களுக்கான புத்தாக்க
அறிவியல் ஆய்வு விருது போட்டிக்கு, விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றிய
நடுநிலைப் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அரசு ஊழியர்களுக்கு இலவச வெளிநாட்டுச் சுற்றுலா: மேற்கு வங்க முதல்வர் மமதா அறிவிப்பு
அடுத்த ஆண்டில் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில், அரசு
ஊழியர்களுக்கு இலவச வெளிநாட்டு சுற்றுலா உள்ளிட்ட பல சலுகைகளை மேற்கு வங்க
முதலமைச்சர் மமதா பானர்ஜி அறிவித்திருக்கிறார்.
ஈராசிரியர் பள்ளி இடைநிலை ஆசிரியர் மாவட்ட மாறுதல் கோரிக்கை மனுவிற்கு தொடக்கக்கல்வி இயக்குனரின் பதில்
Name P.SIVAKUMAR
Petition No 2015/843312/EP Petition Date 07/09/2015
Address ,,,Vallimathuram,Titagudi,Cuddalore-,Tamilnadu
Grievance வணக்கம்.அரசு தொடக்கப்பள்ளி
மற்றும் நடுநிலைப்பள்ளிகளில்
பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நான்கு கட்டங்களாக இடமாறுதல்
கலந்தாய்வு நடைப்பெற்றது.வட மாவட்டங்களில் பணியாற்றும் தென்மாவட்ட ஆசிரியர்கள் மாவட்ட இடமாறுதல் கலந்தாய்விற்கு
விண்ணப்பித்து இடமாறுதலும் பெற்றனர்.அவர்களில் நடுநிலைப்
பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணிவிடுவிப்பு
செய்யப்பட்டு அவர்கள் விருப்ப மாறுதல் பெற்ற
பள்ளிகளில் பணியேற்றுக்கொண்டனர்.
பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு எப்போது:கல்வித்துறை மவுனத்தால் குழப்பம்
மதுரை:தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு
அறிவிப்பில், கல்வித்துறை தொடர்ந்து மவுனம் காத்து வருவதால், ஆசிரியர்கள்
குழப்பத்தில் உள்ளனர்.நடப்பாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும்
பதவி உயர்வு கலந்தாய்வு, முதுகலை பட்டதாரி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி
தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாறுதல், ஆகஸ்டில்
நடத்தி முடிக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர் காலியிடம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சிவகங்கை:தமிழகத்திலுள்ள அரசு உயர்,மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்
காலிபணியிடங்கள் குறித்த விபரங்களை, அனுப்ப பள்ளிக்கல்வித் துறை
உத்தரவிட்டுள்ளது. இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வில் தலைமை ஆசிரியர்
பதவி உயர்வை சிலர் விரும்பவில்லை. இலவச நலத்திட்ட உதவிகளை வழங்குதல், சில
பள்ளியில் ஆசிரியர்களுக்கு இடையேயான கோஷ்டியை சமாளித்தல், தேர்ச்சி விகிதம்
அதிகரிப்பு போன்ற பிரச்னைகளை மனதில் வைத்து பதவியை தவிர்த்தனர்.
எஸ்.சி.,--எஸ்.டி., மாணவர்களுக்கு உதவித் தொகை தாமதத்தால் பாதிப்பு
வத்தலக்குண்டு:பி.எட்., கல்லுாரிகளில் படிக்கும் எஸ்.சி.,-எஸ்.டி.,
மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்குவதில் அரசு தாமதிப்பதால் மாணவர்கள்
பாதிக்கப்படுகின்றனர்..தேசிய ஆசிரியர் கல்வி குழுமம் (என்.சி.டி.இ.)
கண்டிப்பு காட்டியதைத் தொடர்ந்து, தமிழக அரசு பி.எட்., படிப்பை இரண்டு
ஆண்டுகள் என அறிவித்தது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், 'போஸ்ட் மெட்ரிக்
ஸ்காலர்ஷிப்' எனப்படும் எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
மத்திய அரசின் நிதிஉதவியுடன், மாநில அரசால் வழங்கப்படுகிறது.
ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை
மதுரை:கல்வித் துறையில் தற்காலிக பணியிடங்கள் குறித்து கணக்கெடுக்கும்
பணி தொடர்பாக, ஏழு மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆலோசனை, மதுரையில் நேற்று முன்
தினம் நடந்தது.மதுரை முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி வரவேற்றார்.
இணை இயக்குனர் (என்.எஸ்.எஸ்.,) பொன்னையா தலைமை வகித்து, கணக்கெடுக்கும் பணி
குறித்து விளக்கினார். மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர்,
துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட
கல்வி அலுவலர்கள், கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.
பள்ளிகளில் தொழிற்கல்வி கேள்விக்குறி:ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
தமிழகத்தில் 2,500 மேல்நிலைப்பள்ளிகளில் 3,௦௦௦ தொழிற்கல்வி
ஆசிரியர்கள்உள்ளனர். கடந்த 1990ல் தொகுப்பூதிய ஆசிரியர்கள்,
நிரந்தரப்பணிக்கு மாற்றப்பட்டனர்.'தொகுப்பூதிய காலத்தை கணக்கிட்டு
ஓய்வூதியம் வழங்க வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கனவே
உத்தரவிட்டது.
கல்வி உரிமைச் சட்டம்: முதல் கட்டமாக தனியார் பள்ளிகளுக்கு ரூ. 8 கோடி; தமிழக அரசு வழங்கியது
இலவசக்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத
இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டவர்களுக்கான கட்டணத் தொகையில் முதல்
கட்டமாக ரூ. 8 கோடி தனியார் பள்ளிகளுக்கு திருப்பி வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக,
சிறப்புக் கல்வி ஆசிரியர்களுக்கான முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னை
நுங்கம்பாக்கத்தில் உள்ள கற்றலில் குறைபாடுடைய மாணவர்களுக்கான "கேர்
இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிகேவியரல் சயின்ஸ்' கல்வி மையத்தில் 2015-2016
கல்வியாண்டில் ஓர் ஆண்டு முதுநிலை பட்டயப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
திறந்தநிலைப் பல்கலை. தேர்வு முடிவுகள் வெளியீடு
கடந்த 4 ஆண்டுகளில் 277 மெட்ரிக். பள்ளிகளுக்கு அனுமதி
கடந்த
4 ஆண்டுகளில் புதிதாக 277 மெட்ரிக்குலேஷன் பள்ளிகளுக்கு அனுமதி
வழங்கப்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில், மெட்ரிக். பள்ளிகளில் படிக்கும்
மாணவர்களின் எண்ணிக்கை 11 லட்சம் அதிகரித்துள்ளது.
தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவ கல்லூரியில் இடம்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
தமிழக மருத்துவ கல்லூரிகளில் அமலில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவி எம்.பூஜாலட்சுமி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக அரசு கடைபிடிக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து 50 சதவீத இட ஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மேலும் சில இடங்களை உருவாக்கி தகுதி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு 2015-16-ம் கல்வி ஆண்டில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளில் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,777 இடங்களுக்கான பி.எட். படிப்பில் சேருவதற்கு சுமார் 7 ஆயிரம் பட்டதாரிகள் விண்ணப்பம்
தமிழகம் முழுவதும் 7 அரசு பி.எட். கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகளும் இருக்கின்றன. இந்த 21 கல்லூரிகளிலும் பி.எட். சேர்ந்து படிக்க 1,777 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் இளங்கலை மற்றும் முதுகலை படித்து முடித்த பட்டதாரிகள் சேர்ந்து படிக்க கடந்த 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை தமிழகம் முழுவதும் 13 கல்லூரிகளில் விண்ணப்பம் வினியோகிக்கப்பட்டது.
பி.எப். புகார்களுக்குத் தீர்வுகாண புதிய திட்டம் தொடக்கம்
தொழிலாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் தொழிலதிபர்களின் வருங்கால வைப்பு
நிதி தொடர்பான புகார்களுக்குத் தீர்வு காண்பதற்காக புதிய திட்டம்
தொடங்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, சென்னையில் உள்ள மண்டல தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதி நிறுவனம் (இபிஎப்ஒ) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பொறியியல் மாணவர்களுக்கு அக்.1 முதல் மாபெரும் வளாக நேர்முகத் தேர்வு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பொறியியல் மாணவர்களுக்கு அக்டோபர் 1-ந் தேதி முதல் மிகப்பெரிய அளவில் வளாக
நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம்
அறிவித்துள்ளது.இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: